புதன், 21 ஆகஸ்ட், 2013

சிறந்த நூல் பரிசு விண்ணப்பம் - சில தகவல்கள்



  சிறந்த நூல் பரிசு  விண்ணப்பம் -
 சில தகவல்கள்
சிறந்த நூல் பரிசு  பெறுவதற்குரிய விண்ணப்பத்தை அனுப்பும் நாள் 
30.08.13 வரை நீட்டிக்கப் பெற்றுள்ளது. (31.08.13 ஞாயிறு. ஆதலின் 30.08.13தான் இறுதி நாள்.)
தமிழ் வளர்ச்சித்துறை இணையத் தளத்தில்  நீட்டிப்பு நாள் குறிக்கப் பெறவில்லை எனச் சிலர் கேட்டனர்.  தமிழ் வளர்ச்சி இயக்கத்தில் மாற்றுமாறு தெரிவித்த பொழுது  முகப்புப் பக்கத்தில் ஓட்டச் செய்தியில் குறிக்கப் பெற்றுள்ளது என்றனர். எனினும் திருத்துமாறு வேண்டி உள்ளேன்.  திட்டம் பற்றிய குறிப்புரையில் 2012-13 எனக் குறிக்கப் பெற்றுள்ளதன் காரணம், இந் நிதியாண்டின் செலவினம் என்பதால்தான்.
2012 ஆம் ஆண்டிற்குரிய பரிசுத்திட்டம்தான் இது. பின் வரும் தளத்தில் விண்ணப்பத்தையும் விதிமுறையையும் காண்க.

http://govt-tn-tdd.s3.amazonaws.com/files/press-releases/sirantha-nool-vinnappam.pdf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக