சனி, 12 ஜனவரி, 2013

திருவள்ளுவர் விருது, பெரியார் விருது முதலான தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு

விருதாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். அவர்கள் தத்தம் பணிகளை மேலும் ஊக்கமுடன் தொடர உற்சாகம் ஊட்டுவதாக விருதுகள் அமைகின்றன. குற்றம் குறை கூறாதபடி நடுநிலையுடன் ஆராய்ந்து தொடர்து தொண்டாற்றிய துறைகளின் அடிப்படையில் விருது வழங்கும் தமிழ் வளர்ச்சித்துறைக்கும் பிற துறைகளுக்கும் தமிழக அரசிற்கும் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

திருவள்ளுவர் விருது, பெரியார் விருது முதலான தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு



திருவள்ளுவர் விருது. பெரியார் விருது, அம்பேத்கர் விருது உள்ளிட்ட தமிழக அரசின் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.
இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்...
தமிழ்ப் பேரறிஞர்கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றிட தகுதியான பெருமக்களின் பெயர்களை முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
விருதுகள் பெறுவோர் பற்றிய விவரம்:
திருவள்ளுவர் விருது : கலைமாமணி டாக்டர் ந.முருகன்(சேயோன்)
தந்தை பெரியார் விருது : டாக்டர் கோ.சமரசம்
அண்ணல் அம்பேத்கர் விருது : தா.பாண்டியன்
பேரறிஞர் அண்ணா விருது : கே.ஆர்.பி.மணிமொழியன்
பெருந்தலைவர் காமராசர் விருது :சிங்காரவடிவேல்
மகாகவி பாரதியார் விருது : பாரதிக் காவலர் கு.ராமமூர்த்தி
பாவேந்தர் பாரதிதாசன் விருது : பேராசிரியர். முனைவர் சோ.ந.கந்தசாமி
தமிழ்த்தென்றல் திரு.வி.க.விருது : முனைவர் திருமதி பிரேமா நந்தகுமார்
முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது : முனைவர் நா.இராசகோபாலன் (மலையமான்)
இந்த விருதுகள் 15.1.2013 அன்று தேனி மாவட்டம் லோயர் கேம்பில் நடைபெறும்  கர்னல் ஜான் பென்னிகுவிக் நினைவு மணிமண்டபம் திறப்பு விழா, திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் முதலமைச்சரால்  வழங்கப்படும்.
விருது பெறுவோர், தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதியுரைச் சான்றிதழ் ஆகியவை வழங்கி கௌரவிக்கப் படுவார்கள். மேலும், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு நிதியுதவி அரசாணைகளையும் முதல்வர் ஜெயலலிதா வழங்குவார் என்று அரசின்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தேனி அருகே 15- ம் ள் பென்னிகுவிக் மணி மண்டபத்தை ச்  செயலலிதா திறந்து வைக்கிறார்: 
9 பேருக்கு அரசு விருது வழங்குகிறார்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர், முல்லையாறு மற்றும் பெரியாறு என்ற ஆறுகளாக கேரள  மாநிலத்தில் ஓடி வீணாகக் கடலில் கலப்பதைத் தவிர்க்க உருவாக்கப்பட்ட முல்லைப் பெரியாறு அணை மூலம் இந்த மாவட்டங்களுக்கு பாசனத்திற்குத் தேவையான தண்ணீர் கிடைக்கப் பெறுகிறது. மேலும், இந்த மாவட்டங்களின் குடிநீர் தேவையும் இந்த அணை மூலம் பெருமளவு நிறைவு செய்யப்படுகிறது. 

இந்த முல்லைப்பெரியாறு அணை பிரிட்டிஷ் பொறியாளர் கர்னல் ஜான் பென்னி குவிக் அவர்களால்  1895 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. அன்னாரது பணியைப் பாராட்டும்வகையிலும்,  தமிழக மக்களின் சார்பில் நன்றியைத் தெரிவிக்கும் வகையிலும், கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களது வெண்கலத் திருவுருவச் சிலையுடன் கூடிய  நினைவு மணிமண்டபம் நிறுவப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 8.1.2012 அன்று அறிவித்தார்.

இந்த நினைவு மணி மண்டபம், இயற்கைச்சூழல் நிறைந்த மலைப்பாங்கான இடத்தில் அனைவரும் கண்டு களிக்கக் கூடிய வகையில் எழில்மிகு  தோற்றத்தில் ரூபாய் 1 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த நினைவு மணிமண்ட பத்தை முதல் - அமைச்சர் ஜெயலலிதா 15-ந்தேதி அன்று தேனி மாவட்டம் லோயர் கேம்பில் திறந்து வைக்கிறார்.  

மேலும், தமிழ்ப் பேரறிஞர்கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் விருது உட்பட பல்வேறு விருது களைப்பெற்றிட தகுதியான பெருமக்களை முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக