வெள்ளி, 11 ஜனவரி, 2013

நீர் ஆதாரம் இல்லாமல் வேளாண்மை!

சொல்கிறார்கள்

நீர் ஆதாரம் இல்லாமல் வேளாமை!

நீர் ஆதாரம் இல்லாத இடத்தில், ஆண்டு முழுவதும் விவசாயம் செய்யும் சின்னசாமி: ஆறு, ஓடை, குளம், குட்டை என, வானம் பார்த்த, பல்லடம் பகுதியை சார்ந்தவன். கோவை, தேவாம்பாளையத்தில், ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தேன். மூன்றாம் வகுப்பு வரை படித்தேன். 12 வயதிலேயே, பழக் கடை ஒன்றில், அப்பா வேலைக்கு சேர்த்தார்.

18 வயதில், மில் வேலை பார்த்தேன். எட்டு மணி நேர வேலை போக, மீதி நேரத்தை பழம் விற்க முடிவெடுத்து, ஊர் ஊராக, தள்ளு வண்டியில் விற்பனை செய்தேன்.பழங்களை நானே உற்பத்தி செய்ய திட்டமிட்டேன். இரண்டு ஏக்கர் அளவில் சிறு குட்டை வெட்டி, மழை நீரை தேக்கி, 70 ஏக்கர் நிலத்தில் நான்கு கிணறுகளை வெட்டி, குட்டையில் தேங்கிய நீரை, பி.வி.சி., பைப் மூலம் கிணற்றுக்குள் செலுத்தி, அதன் மூலம், 20 ஆழ்துளை கிணறுகள் அமைத்து, நீர் ஆதாரம் இல்லாத இடத்தில், ஆண்டு முழுவதும் விவசாயம் செய்கிறேன்.

இனிப்பு சுவையுடைய, 60 தாய்லாந்து புளியம் மரங்களை நட்டு வளர்த்து வருகிறேன். ஒரு மரத்திலிருந்து ஆண்டிற்கு, 15,000 ரூபாய் லாபம் கிடைக்கிறது. "கோ-3' ரக சப்போட்டா கன்றுகளை, சீரான இடைவெளியில் நட்டதில் மரத்திற்கு, 100 பழங்கள் வீதம், நன்கு காய்கின்றன.

என்னிடம் உள்ள, 70 பசுக்கள், 150 ஆடுகளிலிருந்து சாணம், புழுக்கை, சிறுநீரையும்; கோழி பண்ணையிலிருந்து பெறும் கோழிக் கழிவுகளையும்; கல் உப்பு, காய்ந்த சருகு, சோகையை மக்கச் செய்து, இயற்கை உரமாக பயன்படுத்துகிறேன். வேப்ப மரங்களின் விதையை அரைத்து, பூச்சிகள் வராமல் தெளிக்கிறேன். ஊடு பயிராக பீட்ரூட், கத்தரிச் செடி, மிளகாய் செடி, வெண்டை என, பயிரிடுகிறேன். வீட்டின் முன்னே கொடியில் பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காயும். கீரை வகைகளையும் பயிரிட்டு, தினமும் லாபம் ஈட்டுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக