செவ்வாய், 29 நவம்பர், 2011

அசாமிய எழுத்தாளர் இந்திரா கோசுவாமி காலமானார்


அசாமிய எழுத்தாளர் இந்திரா கோஸ்வாமி காலமானார்

First Published : 29 Nov 2011 09:12:15 AM IST


புதுதில்லி, நவ.29: புகழ்பெற்ற அசாமிய எழுத்தாளர் இந்திரா கோஸ்வாமி (வயது 69) இன்று கௌஹாத்தியில் காலமானார். கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து இவருடைய உடல்நிலை மோசமாக இருந்தது. ஆறு மாதங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், இன்று காலை 7.45க்கு காலமானார்.  இவர் உல்ஃபா பயங்கரவாதிகளுடனான அரசுத் தரப்பு பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தராகச் செயல்பட்டவர். ஞானபீட விருது பெற்ற எழுத்தாளரான இவரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.பாஜக நாடாளுமன்றத் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில், இந்திரா கோஸ்வாமியின் மறைவு இலக்கிய உலகுக்கு மிகப் பெரும் இழப்பு என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக