வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

தமிழகச் சட்ட ஒழுங்கைக் கெடுக்கச் சிங்களம் முயற்சி

தமிழக சட்ட ஒழுங்கை கெடுக்க சிங்களம் முயற்சி

சிங்களம் அடிபட்ட “பாம்பை” போல இப்போது உணர்கிறது. நாலாவது வன்னிப் போர் நடக்கும் போதுகூட, தமிழ்நாட்டில் மற்றும் இந்தியாவில் தங்களுக்கு “எதிரான” குரல் எழுப்பப்பட வில்லை என்று “இறுமாந்திருந்த” வேளையில் எல்லாமே இப்போது தங்களுக்கு எதிராக நடப்பதாக “சிங்களம்” கணக்கு போடுகிறார்கள். ” புலிகளை பயங்கரவாதிகள்” என்று முத்திரை குத்தியபோது, உலகம் ஒத்துழைத்தது. “அப்பாவி மக்களும் புலிகளுடன் சேர்ந்த போராளிகள்தான்” என்று சிங்களம் முத்திரை குத்திய போதும், உலகம் கண்டுகொள்ளவில்லை. “வெள்ளைக் கொடியுடன் சரனைந்த புலிகளை” படுகொலை செய்தபோதும், உலகம் “பெரிதாக கண்டுகொள்ளவில்லை”. இப்போது என்ன வந்துவிட்டது? “தமிழக சட்டமன்றமும், இந்திய நாடாளுமன்றமும்” சிங்களத்திற்கு எதிராக முனு, முணுக்கின்றன? இதுதான் சிங்களம் இன்று கேட்கும் கேள்வி.
உண்மைதான். அப்பாவி ஈழத் தமிழர் கொல்லப்பட்டபோதும், பகிரங்க இன அழிப்பு நடந்தபோத்யும், புலிகளை எதிர்த்து “ரசாயனக் குண்டுகளையும், கொத்துக் குண்டுகளையும்” பயோன்படுத்திய போதும, தமிழக மக்களை அடக்கி ஆள ஒரு கருணாநிதி முதல்வராக இருந்தார். அந்த சூழலின் “மௌனத்தை” உடைக்க “முத்துக் குமார்” என்ற தம்பி “உயிராயுதமாக” தன்னைத்தானே ஆக்கிக்கொண்டு, பெரும் “தீப்பொறியை” கிளப்பி விட முயன்றான். அதயும் அடக்க “ஜாபர் சேட்” போன்றோர் முயன்று வெற்றி பெற்றனர். இப்போது “பீனிக்ஸ் பறவை” போல மீண்டும் தமிழன்” எழுகிறான்.இந்த முறை “ஜெயலலிதா” முகம் “தமிழ் முகமாக” மாறி, “தமிழர் எழுச்சிக்கு” பயன்படுகிறது. இது அடுக்குமா? என்று சிங்களம் அலறுகிறது. “எத்தனையோ தேசிய இனப் பிரச்சனைகளை” எதிர்கொண்டு சமாளித்தவர்கள் நாங்கள். எங்களிடமே இந்த தமிழினம் விளையாடுகிறதா?”" என்று மத்திய உளவு நிறுவனமான “ரா’ வேலை செய்கிறது. திட்டம் தீட்டுகிறது. சூழ்ச்சி செய்கிறது.
அதன் விளைவே “திடீரென சிங்கள எம்.பி.களை ” நாடாளுமனரதிற்கு அழைப்பதும், அவர்களுக்கு “எதிர்ப்பு” கொடுத்தால், அதற்காக ” வந்தவர்களிடம் “மன்னிப்பு” கேட்பதும் , அதன்மூலம் “இந்தியாவின் மானத்தை கப்பலேட்டிரிவிடுவதும்” வட இந்திய நாடாளுமன்ற முறைகளாக இருக்கலாம். அதுவும் “திட்டமிட்டு” நடத்தப்பட்டதாக தெரிகிறது. “டில்லிக்கு சொல்லாமல் தமிழக சட்டப்பேரவை போர்க்குற்றவாளி, மற்றும் பொருளாதார தடை” என்று “தீர்மானம்” போட்டதை , மத்திய அரசும், பிரதமர் அலுவலகமும், வெளிவிவகாரத் துறையும், “ரசிக்கவில்லை”. அந்த “தீர்மானங்களை” வைத்து ஹிலாறி கிளிண்டன், முதல்வர் ஜெயலலிதாவை சந்த்தித்தையும், அவர்கள் வரவேற்கவில்லை. இலங்கை எம்.பி.கள் “நாடாளுமன்றம் வந்தபோது, அதிமுக உறப்பினர்கள் எதிர்ப்பு முழக்கம் இட்டதையும்” டில்லி வெறுப்பாகவே பார்க்கத் தொடங்கி உள்ளது. அவற்றிற்கு எல்லாம் பதில் கொடுக்க டில்லி நினைக்கிறது.
தமிழ்நாட்டில் “ஈழப்ப் பிரச்சனையை”‘ ஒட்டி சட்ட-ஒழுங்கை குலைத்தால், தானாகவே அதிமுக அரசு தனது ” சட்ட-ஒழுங்கை ‘பாதுகாக்க ” தமிழின உணர்வாளர்கள்” மீது “நடவடிக்கை” எடுப்பார்கள் என்று டில்லிக்கு கொழும்பு ஆலோசனை கூறியுள்ளது. இது “பழைய” அதிகாரிகள் சிலர் மூலமும் உறுதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது. அதை ஒட்டி, கொழும்பு தனது உளவுத் துறையான “என்.ஐ.பி.” மூலம் “ஐம்பது சிங்கள இளைஞர்களை” இந்தியா வந்திருப்பவர்களை சென்னைக்கு அனுப்பி, அவர்களை “பகிரங்க ஊர்வலமாக” வெளியே தெரியும்படி “பவனி வர” ஏற்பாடு செய்தது. புதன்கிழமை காலை அந்த திட்டம் செயலுக்கு வந்தது. சென்றல் ரயில் நிலையத்திலிருந்து “ஐம்பது சிங்கள இளைஞர்கள் சிங்கள எழுத்துக்கள் கொண்ட பனியன்களை மாட்டிக்கொண்டு” ஊர்வலம் போல நடந்துவந்தனர். அவர்களது கைகளில் “சிறிய சிங்களக் கொடிகளை” பிடித்துக் கொண்டு வந்தனர். அத்தகைய ஊர்வலத்திற்கு காவல்துறை இங்குள்ள “தமிழர்களுக்கே கூட” அனுமதி கொடுப்பதில்லை. அப்படி “காவலர் அனுமதி இல்லாமல்” அந்த சிங்கள படையெடுப்பு சென்னை நகரில் பகிரங்கமாக நடந்தது.
அந்த சிங்கள ஊர்வலம் நேராக “புரசவாக்கத்தை: அடைந்து “ஏ.ஜே.விடுதி” என்ற வட இந்தியர் விடுதிக்கு போய் சேர்ந்தது. சிங்களமும் டில்லியும் சேர்ந்து போட்ட “சதி” நடைபெறாமல், அந்த “சிங்களப் பொடியன்களுக்கு” உள்ளேயே “ஜே.வி.பி. என்றும், ராஜபக்சே ஆள்” என்றும் சண்டை அவ்ந்துவிட்டது. அந்த சண்டை “புரசைவாக்கம் கடைவீதியை” அசிங்கப்ப்டுத்தியது. அதுகண்ட “தமிழ் இளைஞர்கள்” எங்கள் ஊருக்கு வந்து என் சட்ட-ஒழுங்கை குலைகிறீர்கள் என்று கேள்வி கேட்டார்கள். கேள்வி கேட்டது குற்றமாகிப் போனதால், செய்தி அறிந்த “கொழும்பு” தலையிட்டு, “டில்லியை” உசுப்பி விட்டு, அதமூலம் “தமிழ் இளைஞர்களை” கைது செய்ய வைத்திருகிறார்கள். இது “அந்நிய சதியால்” தமிழக சட்ட’-ஒழுங்கை கெடுக்க” எடுக்க[ப்பட்ட முயற்சியே. வம்பு செய்த “சிங்கள இளைஞர்கள்” ஏன் வந்தார்கள்?, என்று வந்தார்கள்?, எதற்கு வந்தார்கள்?, என “காவல்துறை” புலனாய்வு செய்து, “தூண்டிவிட்ட” அந்நிய உளவுப்படை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-TSS MANI

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக