வியாழன், 20 ஜனவரி, 2011

jaya: never said about cong.alliance: காங்கிரசுடன் கூட்டணி வைப்போம் என்று கூறவில்லை: செயலலிதா

காங்.முடிவு தெரியாமல், இவராக எப்படிக் கூட்டணி வைப்போம் என்று சொல்ல முடியும்? கூட்டணிப் பிச்சை கேட்டார். தரவில்லை அவ்வளவுதான். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


காங்கிரஸுடன் கூட்டணி வைப்போம் என்று கூறவில்லை: ஜெயலலிதா

First Published : 19 Jan 2011 07:36:47 PM IST


சென்னை, ஜன.19- வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்வோம் என்று தான் எப்போதும் கூறவில்லை என அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் கூறியதாவது:2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான பிரச்னை வெடித்தபோது, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியேறினால் அதிமுக ஆதரவு தரும் என்று தெரிவித்தது கூட்டணிக்காக அல்ல.பொது நலத்துக்கு எதிராக மத்திய அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதை எதிர்த்து குரல் கொடுக்கத் தவறியது இல்லை.வரும் பேரவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக மற்ற அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் கூட்டணி அறிவிப்புகளை வெளியிடுவோம்.திமுக ஆட்சியில் மின் பற்றாக்குறை மற்றும் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு காரணமாக மக்கள் மிகவும் வெறுத்துப் போயுள்ளனர். மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மாநிலத்தின் பொருளாதாரம் வளம் பெறச் செய்வோம்.இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.
கருத்துகள்

மத்திய, மாநில கூட்டு கொள்ளையர்களை விரட்டி அட்டிக்கும் காலம் மிக அருகில் உள்ளது .உங்கள் பணி இந்த நாட்டுக்கு தேவை
By sekar
1/19/2011 9:06:00 PM
chee chee intha palam pulikkum ithe kathai than amma unakku ini cong unnidam varathu enru therithathum ippadi pesukiraya unakku rendu naakui
By ragu
1/19/2011 9:05:00 PM
வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
By jasrian
1/19/2011 8:55:00 PM

முழு பூசணிக்காயை எப்படி ஒரே ஒரு அரிசி பருக்கையில் மறைக்கமுடியும் என்பதை இவரிடம் தான் கற்றுக்கொள்ளவேண்டும் இவர் கட்சியை சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர் கூட தி பல் இன் தி காங்கிரஸ் கோர்ட் என்று சொன்னது அனைத்து தொலை கட்சி சேனல்களிலும் ஒளிபரப்பாது admk தலைவியும் சரி இவரின் தொண்டர்களும் சரி உண்மையை பேசுவதில்லை என்று முடிவு எடுத்துவிட்டனர் . இவர்கள் என்ன நாடகமாடினாலும் இப்பொழுதே ஆரம்பித்து விட்டனர் மின் அனுவக்கு எந்திரம் சென்னையிலும் மற்ற இடங்களிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது சந்தேகத்துக்கு இடமளிகிறது என்று சொல்ல ஆரம்பித்துவிட்டனர். admk விற்கு மற்றும் அதன் தோழமை கட்சிகளுக்கு தோல்வி பயம் தொற்றுக்கொண்டுவிட்டது மீண்டும் பச்சையம்மா தேர்தல் முடிந்தவுடன், தில்லு முள்ளு செய்து மோசடி செய்து வெற்றி பெற்றனர் என்று ஒரு அறிக்கை விட்டு கொடநாடு சென்று விடுவார். அடுத்த ஆட்சி திமுக தான் இதில் சந்தேகமே வேண்டாம்
By swathi
1/19/2011 8:32:00 PM
நீ என்னா சொன்னாலும் வரும் தேர்தலில் சங்கு தான் உனக்கு
By அறிவு
1/19/2011 7:53:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக