வியாழன், 27 ஜனவரி, 2011

Committee for war crimes: போர்க்குற்ற ஆலோசனைக் குழு இலங்கை செல்லாது: ஐ.நா.

நல்ல முடிவு! ஏனெனில் விடுதலைப் புலிகள்தாம் போர்க்குற்றம் செய்தார்கள் என்றும் சிங்களப்படை மக்களைக் காப்பாற்றியது என்றும்சிங்கள அரசு தரும் அறிக்கையைத் தரப் போவதற்காக எதற்கு இலங்கை செல்ல வேண்டும்?
இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்


போர்க்குற்ற ஆலோசனைக் குழு இலங்கை செல்லாது: ஐ.நா.

First Published : 26 Jan 2011 02:56:38 PM IST


நியூயார்க், ஜன.26- இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா. ஆலோசனைக் குழு அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளாது என்று பான் கீ மூனின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எனினும், இலங்கை அரசுடன் ஐ.நா. ஆலோசனைக் குழு தொடர்ந்து பேச்சு நடத்திவரும் என்றும் அவர் கூறியிருப்பதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.2009-ம் ஆண்டு புலிகளுடன் நடைபெற்ற போரில் இலங்கை ராணுவம் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதையடுத்து, அதுதொடர்பான பிரச்னையில் தமக்கு ஆலோசனை வழங்க ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் 3 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவை நியமித்தார். ஆனால், இக்குழு போர்க்குற்றம் தொடர்பாக ஆராய இலங்கைக்கு நேரில் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக