வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

 
அடக்கத்துடன் செயல்படுகிறது அரசு கேபிள் டி.வி: கருணாநிதி


சென்னை, ஆக. 12: அடக்கத்துடன் 50  ஆயிரம் கேபிள் இணைப்புகளைக் கொண்டு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து, வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:  சட்டப் பேரவையில் ஒப்புக் கொண்டபடி அரசு கேபிள் டி.வி.யை மீண்டும் தொடங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியிருக்கிறார்.அரசு கேபிள் டி.வி. இப்போதும் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அது மூடப்பட்டால் அல்லவா, மீண்டும் தொடங்குவதற்கு? அரசு டி.வி. என்பதால் பெரிய அளவுக்கு விளம்பரத்தோடு செயல்படாமல் அடக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டுதான் உள்ளது. சுமார் 50 ஆயிரம் கேபிள் டி.வி. இணைப்புகளை இப்போது வழங்குகிறது.ஜாதிவாரி கணக்கெடுப்பு: சுதந்திர இந்தியாவில் முதன் முறையாக ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சர்களின் குழு முடிவு செய்திருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்னை எழுந்தபோது பிரதமர் மன்மோகன் சிங் குறுக்கிட்டு, அந்தப் பிரச்னையில் நல்லதொரு முடிவினை அமைச்சரவை மேற்கொள்ளும் என கூறியிருந்தார்.  இந்த முடிவினை எடுத்துள்ள மத்திய அரசுக்கு, திமுக சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆங்கிலேயர் காலத்தில் 1931-ம் ஆண்டு இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதற்குப் பிறகு ஏறத்தாழ 80 ஆண்டுகள் கழித்து இப்போது நடத்த முன்வந்திருப்பது வரலாற்றில் பொறிக்கத்தக்க ஒரு முன்னேற்றமாகும்.  69 சதவீத இடஒதுக்கீடு குறித்து அண்மையில் உச்ச நீதிமன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பு தமிழகத்துக்கு மிகுந்த பயனளிக்கும் என்பது மற்றொரு சிறப்பு அம்சமாகும்.தமிழில் பி.இ.: அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 13 பொறியியல் கல்லூரிகளில், மெக்கானிக்கல் மற்றும் சிவில் பட்டப்படிப்புகளில் 1,380 இடங்கள் தமிழில் படிப்பதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.  அந்த இடங்களில் இதுவரை 1,372 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இன்னும் சில நாள்கள் கவுன்சலிங் இருப்பதால் மீதியுள்ள எட்டு இடங்களும் அதற்குள் பூர்த்தியாகி விடும் என நம்புகிறேன்.  இந்த அளவுக்கு தமிழில் படிக்க ஆர்வம் இருப்பதைக் காணும் போது, மற்ற பிரிவுகளுக்கும் இதனை அடுத்தடுத்த ஆண்டுகளில் விரிவுபடுத்துவதற்கான முயற்சியில் இந்த அரசு ஈடுபடும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
கருத்துக்கள்

அரசுத் திட்டம் என்றாலே அறிவிக்கும் பொழுதே விளம்பரப்படுத்தி ஒன்றும் இல்லாமல் செய்வதுதான் அரசியல் பண்பாடு. அவ்வாறிருக்க விளம்பரம் இல்லாமல் கம்பிவடத் தொலைக்காட்சி இணைப்பு என்பது நகைச்சுவையாக உள்ளது. வணிக நிறுவனம் என்னும் பொழுது உரிய விளம்பரம் செய்யாமல் இருப்பதன் காரணம் என்ன? வேறு தனியாரிடம் இணைப்பு பெறச் செய்யத்தானே என்ற கேள்வி எழாதா?கோடிக்கணக்கான குடும்பங்கள் உள்ள தமிழ்நாட்டில் 50 000 என்பது மிகச் சிறிய தொகைதான். எனவே, விளம்பரப்படுத்தி மக்கள் பயனுறும வகையில் கம்பி வடத் தொலைக்காட்சிப் பணியை மக்களுக்கு அளிக்க வேண்டும். ஏத்வே முதலான பெரிய நிறுவனங்களின் கம்பிவடங்களையே அறுத்தெறிந்த வல்லமை வாய்ந்த குடும்ப நிறுவனம் ஊருக்கு இளைத்த அரசு கம்பி வடத்தையா விட்டு வைக்கம்? எனவே, உரிய விளம்பரப்படுத்தி முனைப்பாகச் செயல்படுத்தி, அனைத்து மக்களும் அரசு கம்பிவடப் பணியால் பயனுறச் செய்ய வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/13/2010 4:27:00 AM
நித்யானந்தா porno video மாதிரி அயிட்டங்களை braodcast பண்ணுணா நல்லா வியாபாரம் ஆகும் பாஸ்
By Nallan
8/13/2010 4:08:00 AM
Oh... Man!!! I could not bear this Guy Karunanidhi!!!! He and his family should be driven away from Tamilnadu!!! That day will come soon!!!!
By Priyan
8/13/2010 3:45:00 AM
கலாநிதி மாறனுக்கும் அழகிரிக்கும் முன்னால் ரொம்பவே அடக்கத்துடன் தான் அரசு கேபிள் டிவி செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. உன் சுய விருப்பு வெறுப்புக்காக, எங்க வரிப்பணத்தை எடுத்து விளையாடிக்கிட்டு இருக்கே. என்னைக்குத்தான் அரசாங்கத்தில் 'accountability & responsibility ' வரப்போகுதோ? அதுவரைக்கும் இந்தமாதிரி மஞ்சத்துண்டுகளின் அக்கிரமத்தை எல்லாம் பொறுத்துத்தான் ஆகணும். மதுரைக்காரன்.
By மதுரைக்காரன்.
8/13/2010 3:37:00 AM
Brahmin RAJISJI(srinivasan) is broker (MAMA) for his wife. Since she is on 3 day holiday, he does have anything do to and went to Poes Garden to eat Jeya's bee and he is vomiting that here.
By ahamed
8/13/2010 3:16:00 AM
நல்லா வியாபாரம் நடந்த இட்லிகடைக்கு புதுசா ஒரு மேனேஜர் வந்தான் ! வரும் லாபத்தை பார்த்து விட்டு அருகிலேயே தன மனைவி பேருக்கு ஒரு இட்லிகடைய வச்சான் ! வாடிக்கையாளர்கள் இட்லி சாப்பிட வந்ததும் நேற்று சுட்ட இட்லிதான் இருக்கிறது...சுடச் சுட சாப்பிட வேண்டும் என்றால் அருகில் உள்ள தன மனைவியின் கடைக்குச் செல்லுமாறு சிபாரிசு செய்து அனுப்பி வைத்தான் ! முரண்டு பிடித்தவர்களுக்கு இட்லியில் இரண்டு கரண்டி உப்பினை கூடுதலாக போட்டு பரிமாறினான் ! அப்புறம் என்ன இதுக்கும் மேலயா நான் சொல்லணும் ! இப்படித்தான் இந்தப் படுபாவி நடத்துற அரசு கேபிள் டிவி நிறுவனம் ! அரசு பணத்திலிருந்து செயலர்...உயர் அதிகாரிகள்...தொழில் நுட்ப ஊழியர்கள் ..எடுபிடிகள் என நியமித்து சம்பளம் கொடுத்து எல்லோரும் மறைமுகமாக குடும்ப கேபிள் டிவி நிறுவனத்திற்கு உழைக்க வைத்து மக்களுக்கு துரோகம் செய்கிறான் ! அரசு டிவி நிறுவனம் அடக்க ஒடுக்கமாக செயல்படுகிறது என்பதற்கு பொருள் தற்பொழுது புரியும் என்று நம்புகிறேன் ! @ rajasji
By rajasji
8/13/2010 2:59:00 AM
தமிழ் வழி மூலம் பொறியியல் படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டுவதாக அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது ஆனால் திராவிட தெலுங்கன் தட்சனாமூர்த்தியான கொலைஞ்யன் கருணா(க)நிதியின் தமிழ் படுகொலையை பாருங்கள் மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்களை உருவாக்க தனி குழு அமைக்கப்பட்டுவிட்டதாகவும், அவர்கள் ஏற்கனவே முதல் இரண்டு செமஸ்டர்களுக்குத் தேவையான புத்தகங்களை உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மாணவர்களின் ஆங்கிலப் புலமையை மேம்படுத்தும் நோக்கில் மூன்று ஆண்டுகள் வரை அவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கப்படும். அதே போல அனைத்து பொறியியல் சார் வார்த்தைகளும் தமிழில் மொழி பெயர்க்கப்படாது - தேவைப்படும் இடங்களில் நன்கு பரிச்சையமான ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தப்படும் என்றும் அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் தமிழோசையிடம் தெரிவித்தார்
By vaalenthy
8/13/2010 2:53:00 AM
திராவிட தெலுங்கன் தட்சனாமூர்த்தியான கொலைஞ்யன் கருணா(க)நிதியின் தமிழ் படுகொலையை பாருங்கள் மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்களை உருவாக்க தனி குழு அமைக்கப்பட்டுவிட்டதாகவும், அவர்கள் ஏற்கனவே முதல் இரண்டு செமஸ்டர்களுக்குத் தேவையான புத்தகங்களை உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மாணவர்களின் ஆங்கிலப் புலமையை மேம்படுத்தும் நோக்கில் மூன்று ஆண்டுகள் வரை அவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கப்படும். அதே போல அனைத்து பொறியியல் சார் வார்த்தைகளும் தமிழில் மொழி பெயர்க்கப்படாது - தேவைப்படும் இடங்களில் நன்கு பரிச்சையமான ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தப்படும் என்றும் அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் தமிழோசையிடம் தெரிவித்தார்
By vaalenthy
8/13/2010 2:50:00 AM
இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கிக் கொண்டிருக்கின்ற இந்தியாவே இங்கு தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கின்றது. ஆனால், தற்போது இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அதிகாரப் பரவலாக்கமே சிறந்தது என்றும் அதுவே தீர்வு என்றும் பிரசாரம் மேற்கொள்கின்றது. இது இந்தியாவின் போலித் தனத்தை படம்பிடித்துக் காட்டுகின்றது. இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் வருகின்ற அதிகாரப் பரவலானது இங்கு சரியான முறையில் பகிர்ந்தளிக்கப்படவில்லை. மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் எதுவுமே நடைபெறவில்லை. இந்நிலையில், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அதிகாரப்பரவலே தீர்வு என்று கூறுகின்ற இந்தியா, வடக்கில் தமிழ் மக்களுக்கு எதனையும் பெற்றுத் தரப்போவதில்லை என்பது உண்மையான விடயம். இருப்பினும், இன்றைய நிலையில் அதிகாரப்பரவலை கோரியிருக்கின்ற இந்திய மத்திய அரசு, ஆயுத வழங்கலை நிறுத்திக்கொள்வதே அத்தியாவசியமானது. ஏனெனில், இலங்கைத் தமிழ் மக்கள் மீதான இந்தியாவின் போர் முதலில் நிறுத்தப்பட வேண்டும்.
By முத்தமிழ்
8/13/2010 2:40:00 AM
எதோ ஒரு வகையில் கலைஞர் மக்களை ஏமாற்ற நினைக்கிறார்
By சன் டிவி
8/13/2010 2:34:00 AM
தமிழ்நாட்டு மீனவர்களை சிறிலங்கா கடற்படையின் தாக்குதல்களில் இருந்து இந்தியாவால் காப்பாற்ற முடியாது என்று இந்திய மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார். இந்திய மாநிலங்கள் அவையில் நேற்று தமிழ்நாட்டு மீனவர்களை சிறிலங்கா கடற்படையினர் தொடர்ந்து தாக்குவது குறித்து விவாதம் நடத்தப்பட்டது. "கச்சத்தீவை திரும்பப் பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழ்நாட்டு மீனவர்கள் கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடிக்க போகக் கூடாது. மாறாக தாண்டிப் போனால் சிறிலங்கா கடற்படை தாக்குதல் நடத்தத்தான் செய்யும். தமிழ்நாட்டு மீனவர்களை இந்த தாக்குதல்களிலிருந்து இந்தியாவால் காப்பாற்ற முடியாது" என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்தக் கருத்துக்கு தமிழ்நாட்டில் பலரும் தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். சொந்த நாட்டு மக்களைப் பாதுகாக்க முடியாது எனப் பகிரங்கமாக அறிவித்துள்ள எஸ்.எம். கிருஷ்ணா அமைச்சர் பொறுப்பிலிருந்து உடனடியாக விலகவேண்டும் அல்லது அவரை பிரதமர் விலக்க வேண்டும் என தமிழ் உணர்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்
By naam tamilar
8/13/2010 2:18:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக