செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

பா.ம.க. தலைமையில் சமூக நீதிக் கூட்டணி: ராமதாஸ்


தேனி,ஆக. 9:   தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் பா.ம.க. தலைமையில் சமூக நீதிக் கூட்டணி அமையும் என்று அக் கட்சியின் நிறுவனர்  ராமதாஸ் கூறினார்.   தேனியில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:   இந்தியாவில் வேளாண்மை உற்பத்தி மற்றும் பரப்பளவு குறைந்து வருகிறது. 1990-ம் ஆண்டு நாட்டின் விவசாய உற்பத்தி 30 சதவீதமாக இருந்தது. தற்போது 18 சதவீதமாகக் குறைந்துள்ளது. 5 ஆண்டுகளில் உணவுக்காக வெளிநாடுகளை எதிர்பார்க்கும் நிலையில் இந்தியா உள்ளது.  கிராமப்புறங்களில் விவசாய நிலங்களை வெளி மாநிலத்தவர் வாங்கி வீட்டு மனைகளாக மாற்றி வருகின்றனர். இதை முறைப்படுத்த உரிய சட்டம் கொண்டு வர வேண்டும்.    ஏழைகளின் நலன் கருதி பூரண மதுவிலக்கை முதல்வர் அறிவிக்க வேண்டும்.  முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமிழக அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும். நதிநீர்ப் பிரச்னைகளை சம்பந்தப்பட்ட மாநில  முதல்வர்கள், பிரதமர் ஆகியோர் பேசித் தீர்க்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் நீதிமன்றம் மற்றும் அரசு உத்தரவின்படி நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.   பா.ம.க. தலைமையில் 1991 மற்றும் 1996-ம் ஆண்டுகளில் சமூக நீதிக் கூட்டணி அமைக்கப்பட்டது. தமிழகத்தில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலிலும் பா.ம.க. தலைமையில் சமூக நீதிக் கூட்டணி அமையும் வாய்ப்பு உள்ளது. பா.ம.க. தனித்துப் போட்டியிட்டாலும் 20 இடங்களைக் கைப்பற்றும். கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் கூட்டணி என்ற பேச்சுக்கு இடமில்லை. கம்யூனிஸ்ட் தனியாக கூட்டணி அமைத்ததும் இல்லை.    தி.மு.க. அரசுக்கு மதிப்பீடு கொடுக்க நான் தயாராக இல்லை. தேர்தலில் மக்கள்தான் மதிóப்பீடு வழங்க வேண்டும். டாஸ்மாக் தொழிலாளர்கள் போராட்டத்துக்கு பா.ம.க. முழு ஆதரவு அளிக்கிறது என்றார் ராமதாஸ்.
கருத்துக்கள்

பா.ம.க. இணைந்திருந்த ஒவ்வொரு கூட்டணியிலும் தலைமைக் கட்சிக்கு அடுத்த மிகுதியான ஒதுக்கீடு தன் கட்சிக்கே வேண்டும் என்ற ஆவலில் மேற்கொண்ட முயற்சிகளே பிற கட்சியினரிடம் வெறுப்பையும் ஒத்துழையாமையையும் தந்தன. இப்பொழுது தலைமை என்றதும் எல்லாம் தனக்கே என்னும் உணர்வு வரக்கூடாது. தேர்தல் வெற்றிக்காகக் கொலைகாரக் காங்.உடன் அல்லது தி. மு.க. அல்லது அ.தி.மு.க உடன் கூட்டுச் சேருவதில்லை என்னும் திட்டவட்ட முடிவை எடுத்து அனைத்துத் தமிழினப் பற்றாளரையும் இணைத்துச் சென்றால் வெற்றி வாகை சூடலாம். வேறொரு கூட்டணியில் ஐக்கியமாவதற்கான நாடகம் என்றால் இக்கனவு கருவிலேயே கருகலாம்.
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/10/2010 4:28:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
ONCE AGAIN PUBLIC WANTS TO GIVE LESSON FOR YOU
By ARASU
8/10/2010 12:21:00 PM
Makkal TV, Vasanth TV, and other TV channels are promoting sale of housing plots. The housing plots are prime agricultural lands. This statement is contrary.
By d ranganathan
8/10/2010 12:07:00 PM
Mr. Ramdass your son not interested to connect river with in tamil nadu region then how will you expect other state can do it.
By ravi
8/10/2010 11:02:00 AM
This is better than the yesterdays statement that congroess should lead the aliance. DR has a goal and ambition. He has a power and a mass but he has to use in efficient way. Congress helped killing tamils, but dravidian parties supported congress. Let us Save Tamils Than Tamil.
By Tamilar Senai
8/10/2010 10:32:00 AM
Good Points by Ilakkuvanar Thiruvalluvan, Matured way of writing. (Thuran) kind of people at least should learn from him. Also, Tamil Nadu people should vote by keeping in mind about their long term growth, not for just free stuffs. They should not get impressed by the parties who takes language for vote. Without tamil people, this is no use of language. The parties who kept quite during mass killing of people in Sri Lanka should be punished in this election, also the parties who used Sri Lankan issues over the decades for votes should be punished . We shall first save Tamils, then Tamil.
By Tamilar Senai
8/10/2010 10:07:00 AM
இங்கே கருத்தெரிவித்திருக்கும் அதிமேதாவிகளெல்லாம் ஒன்றை புரிந்துகொள்ள முயலுங்கள்! மருத்துவர் அவர்கள் கடந்த தேர்தலில் இலங்கை தமிழர்கள் பிரச்சனையினை முன்னிறுத்தி செயல்பட்டார் ஆனால் மக்கள் அதனை ஏற்க்கவில்லை மாறாக காங்கிரஸ் உள்ள கூட்டனிக்கு பெரும்வெற்றிதேடித்தந்தனர். அப்பொழுது எங்கேடா போனீர்கள் மொக்கைகளா? இன்று திமுக தரும் இலவசங்களையும் பெற்றுகொண்டபோதும், மதுக்கடைகளைக் கொண்டு அவர்கள இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கையினை சூனியமாக்கியபோது, விலைவாசி உச்சானிகொம்பிலிருக்க அவர்களை கேட்காமால் மருத்துவரை மட்டும் கேள்விகேட்பதேன்? ஆளும் ஆட்சியிடம் நீங்கள் உமது அறிவுக்கண்களை திறந்து இதே கேள்வியினை அவரிடமும் கேளுங்கள் பிறகு பார்போம்!

By முரளிதீர தொண்டைமான்
8/10/2010 10:05:00 AM
யாரிந்த மனிதர்? இவருக்கு ஏன் தினமணி இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றது? யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன். பிளீஸ்!
By Ravi
8/10/2010 6:45:00 AM
d,m,kevai mirattippaarkiraan entha ramadoss.gongress kalatti vdumo yena payanthu nadunkum d.m.k.yeppadium nammidam vanthe theerum yena nambukiraan entha maram vetti .
By thuran
8/10/2010 6:27:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக