சனி, 15 ஆகஸ்ட், 2009

இலங்கையில் நிலவுவது சுமுக நிலையா?
முதல்வருக்கு நெடுமாறன், ராமதாஸ் கண்டனம்



சென்னை, ஆக. 14: இலங்கைத் தமிழர் பிரச்னையில் சுமுக நிலை ஏற்பட்டிருப்பதாக முதல்வர் மு. கருணாநிதி கூறியிருப்பதற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கன்னடக் கவிஞர் சர்வக்ஞரின் சிலை திறப்பு விழா சென்னையில் வியாழக்கிழமை நடந்தபோது பேசிய கருணாநிதி, இலங்கைத் தமிழர் பிரச்னையில் சுமுக நிலை ஏற்பட்டுவிடக் கூடாது எனச் சிலர் விரும்பியதாகவும், இப்போதும்கூட சிலர் அதைக் கிளறிவிடுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார். இதுதொடர்பாக நெடுமாறன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: "இலங்கையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் முள்வேலி வதை முகாம்களுக்குள் முடக்கப்பட்டு உணவு, குடிநீர், மருந்து இல்லாமல் தினமும் 200 பேருக்கு மேல் இறந்து போகின்றனர். தமிழர்களுக்கென தனித் தாயகம் எதுவும் கிடையாது என்று கூறி தமிழர் பகுதிகளில் சிங்களர்களைக் குடியேற்றுகின்றனர். இதை சுமுக நிலை என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளாரா?' என நெடுமாறன் கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கை அதிபர் ராஜபக்சே அரசின் அட்டூழியங்களை மறைக்க துணை செய்யும் வகையில் கருணாநிதி செயல்படுவதை தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். ராமதாஸ்: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: 1977-ல் இலங்கையில் தமிழர்களுக்கு இந்திய அரசு அரிசியோ, கோதுமையோ அனுப்ப வேண்டும் என்றும், தமிழர்களுக்கு அகதி முகாம் நடத்த மத்திய அரசு நிதி அளிக்க வேண்டும் என்றும், வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த வாஜபேயியை சந்தித்து, திமுக வேண்டுகோள் விடுத்தது. இப்போதும் அந்த நிலையில் மாற்றம் இல்லை. உலகில் உள்ள மற்ற தேசிய இன மக்களைப் போல ஈழத் தமிழர்கள் தங்களது எதிர்காலத்தைத் தாங்களே முடிவு செய்து கொள்ளும் உரிமையைப் பெறும்போதுதான், அங்கு சுமுகநிலை திரும்பியதாகக் கருத முடியும். அத்தகைய நிலை ஏற்பட உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு குரல் கொடுப்போம்' என ராமதாஸ் கூறியுள்ளார்.
கருத்துக்கள்

1/2) இன் தொடர்ச்சி சிங்கள ஊடகங்களே வதைமுகாம்கள் பற்றியும் நாள்தோறும் நடைபெறும் படுகொலைகள் பற்றியும் சராசரி ஒருவருக்குத் தேவையான இயற்கைத் தொல்லைகள் வசதியில் 100 பேர் வீதம் அடைபட்டுக் கிடப்பது பற்றியும் மருத்துவ வசதியின்றிப் பலர் மாண்டு போவது பற்றியும் சிங்களக் குடியேற்றங்கள் பற்றியும் ஒரு நாளக்குஒருவருக்கு ஒரு குவளை நீர் என்ற அளவில்மட்டும் வழங்கப்படும் பற்றாக்குறை பற்றியும் எதிக்கட்சிகள் தொண்டூழியர்கள் செல்வதற்குத் தடைவிதிப்பது பற்றியும் விவரிக்கையில் செய்திகளை அவ்வப்பொழுது படிக்கும் முத்தமிழறிஞர் அவர்கள் இதனைச் சுமுக நிலை என்றால் என்ன சொல்வது? விரைவில் அவருக்குச் சிங்கள அரசு'லங்கா ரத்னா' விருது வழங்கினாலும் வியப்பதற்கில்லை. உண்மை நிலையை விளக்கி அவற்றைக் களைய வேண்டிய பொறுப்பும் உணர்வும் கடமையும் உள்ள முதல்வர் அவர்கள் எதையும் மூடி மறைக்காமல் இருப்பதே நல்லது. வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/15/2009 2:57:00 AM

1/2) முதுமை ஏற ஏறத் துறவு எண்ணமும் பொது நல எண்ணமும் மேலோங்க வேண்டும். ஆனால் முத்தமிழ் அறிஞருக்கு நேர்மாறாகக் குடும்பப் பற்றே மேலோங்குவதால் காங்.காரன்கூடப் பேசத் தயங்கும் பொய் மூட்டைகளைத் தாராளமாக அவிழ்த்து விடுகிறார். ஏன் இந்தத் தடுமாற்றம்? தான் கடந்து வந்த பாதையையும் மறந்து தன்னால் உருவேற்றப்பட்ட இன உணர்வுக் கொள்கையையும் துறந்து ஏதேதோ பேசுவதைவிட அமைதி காக்கலாமே! திருவள்ளுவர் சிலை சிறப்பு தந்த உற்சாகத்தில் வாய்க்கு வந்ததைப் பேசுகிறாரா? அல்லது தான் என்ன பேசுகிறோம் என்று அறிந்துதான் பேசுகிறாரா? இந்தியாவைச் சேர்ந்த தமிழ் மாநிலத்தின் முதல்வரா? அல்லது சிங்கள அரசின் பணியாளரா? 2/2 காண்க வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/15/2009 2:56:00 AM

Mr.S.Srinivasan, pls learn english & post your comments. Thanks.

By Savita
8/15/2009 2:35:00 AM

கருணாநிதியின் இந்த போலிப்பேச்சைக்கேட்பவருக்கு சூடு, சுரணை இருந்தால் கண்டிப்பாக கோபமும், ஆத்திரமும் வரும். தமிழினத்தை அங்கே சாகவிட்டுவிட்டு இங்கே சால்ஜாப்பு சொல்கிறார். மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டதற்கு ‘பேராசை பிடித்த மீனவர்கள்’ என்று சொன்ன வாய்தானே அது. சொத்துக்களையும், பதவியையும், வாரிசுகளையும் காப்பாற்ற என்ன வேண்டுமானாலும் பேசும்.

By Surya
8/15/2009 2:26:00 AM

Sri Lankan ARMY did manage to SLAUGHTER more than FIFTY thousand TAMIL civilians including women and CHILDREN within few months time. Banned weapons like CLUSTER BOMBS and phosphorous bombs were used against the innocents. (Death and destruction in a Terror Island , Richard Dixon, Telegraph .co.uk. - 12 July 2009)

By James Ratnam
8/15/2009 2:17:00 AM

The top aide to the United Nations Secretary-General was told more than a week ago that at least 20,000 Tamil civilians were killed in the Sri Lankan Government’s final offensive against the Tamil Tiger rebels this month, The Times can reveal ( The Times UK, 30 May 2009)

By James Ratnam
8/15/2009 2:16:00 AM

About 1,400 people are dying every week at the giant Manik Farm internment camp set up in Sri Lanka to detain Tamil refugees from the nation’s bloody civil war, senior international aid sources have told The Times (The Times UK, 10 July 2009)

By James Ratnam
8/15/2009 2:15:00 AM

somebody has to stop these two jokers from making money in the name of tamil eezham. Especially this Nedumaran fu.cker, good for nothing fellow...he guides the youngsters on the wrong path..

By Kumaran
8/15/2009 2:08:00 AM

DEAR TAMILNADU POLITICAL LEADERS, LAST TIME MP ELECTION CINI STAR VIJAYKANTH VOICE BOYCAUGHT THE MP ELECTION.IF TIME TAMIL NADU VOTERS CAN STOP TO VOTE THERE IS POSIBLE TO SAVE 50,000 PEOPLE, INDIAN GOVERNMENT TO SUPPORT TAMIL EELAM.IN THIS TIME OUR INVESTERS GOES TO TAMIL EELAM DEVELOP THE TAMILIANS.WE HAVE FAILED TO DO THAT!! NOW OUR INDIAN GOVERNMENT WERE SUPPORTED GENOCIDE IN SRILANKA TO WIPE OUT TAMILIANS!!!UNTIL UN.NOW THERE IS CEMENTRY ONLY BALANCE.I NEVER FEEL INDIA IS DEMACRETIC COUNTRY!! SOME MORE WE ARE CELEBRATING INDEPENDENCE DAY WHAT A SHAME!!! IN POLESTEEN 2,000 PEOPLE KILLED THAT INDIA HAS RAISED THEIR VOICE TO ISREAL, WHY NEVER RAISE AGAINST SRILANKA?????PLS UNIT THE LEADERS AND CALL TAMILNADU TO STAND ROAD SHOW IT TO THE WORLD VANTHE MATHARAM.VENDRATHEY TAMIL EELAM!!!!

By s.srinivasan
8/15/2009 1:24:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக