புதன், 12 ஆகஸ்ட், 2009

'மறுமலர்ச்சி' மாயையை நம்பியவர்கள் ஏமாற்றம்: கே.எஸ். ராதாகிருஷ்ணன் இணைப்பு விழாவில் கருணாநிதி பேச்சு




சென்னை, ஆக. 11: மறுமலர்ச்சி என்ற மாயையை நம்பி தி.மு.க.வை விட்டு பிரிந்து சென்றவர்கள் பலர் ஏமாற்றமடைந்துள்ளனர் என்றார் முதல்வர் கருணாநிதி. . இன்றைய அரசியல் சூழ்நிலையில், தேசிய அரசியலின் ஜாதகத்தைக் கணிக்கக்கூடிய சக்தியாக தி.மு.க. வளர்ந்துள்ளது. இனி இந்தியாவில் உள்ள எந்த சக்தியாலும், தி.மு.க.வைத் தவிர்த்துவிட்டு தேசிய அரசியலை தீர்மானிக்க முடியாது. தி.மு.க. இல்லாத தேசிய அரசியல் இனி சாத்தியம் இல்லை என்றார் கருணாநிதி.
கருத்துக்கள்

' தேசிய அரசியலின் சாதகத்தைக் கணிக்கக் கூடிய சக்தியாக வளர்ந்துள்ள திமுக' எப்பொழுது தமிழ்த் தேசிய விடுதலைக்கான தன் முயற்சியை முன்னெடுக்கும்? இந்திய அரசமைப்பைக் கூட்டரசு அமைப்பாக மாற்றி உரிமையுடன் தமி்ழ் உலவ என்ன நடவடிக்கை எடுக்கும்?

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/12/2009 2:06:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக