vayalar ravi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
vayalar ravi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 12 அக்டோபர், 2010

இந்தியர்கள் என்று சொல்லும பொழுது மலையாளிகள் முதலிடம் பெறுவர். தமிழர்கள் கடைசி இடம்கூடப் பெறமாட்டார்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள் என வயலார் இரவி  இந்தியத்தின் கொள்கையைச்  சொல்லாமலே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

வெளிநாடுகளில் இந்தியர் தாக்கப்பட்டால் பொறுக்க மாட்டோம்: வயலார் ரவி
பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2010,23:42 IST
மாற்றம் செய்த நாள் : அக்டோபர் 12,2010,00:42 IST

  பொள்ளாச்சி : ""வெளிநாடுகளில், இந்தியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி இந்தியர்கள் தாக்கப்பட்டால், அதை இந்தியா பொறுத்து கொள்ளாது,'' என, மத்திய அமைச்சர் வயலார் ரவி கூறினார்.
பொள்ளாச்சியில், "ஓணோற்சவம் -10' விழா நடந்தது. இதில் மத்திய வெளிநாடுவாழ் இந்தியர்கள் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி பங்கேற்றார்.

பின் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:ஆஸ்திரேலியாவில், இந்திய மாணவர்கள் தாக்கப்படும் சம்பவம் தொடர்பாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த சம்பவத்திற்கு, அந்நாட்டு அரசும், தூதரகமும் மன்னிப்பு கேட்டுள்ளது. அந்நாட்டு அரசுடன் பேச்சு நடத்தியதில், ஆஸ்திரேலியாவுக்கு வரும் இந்தியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.அந்நாட்டு அரசும் பாதுகாப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளது. இந்தியாவும், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

உலகின் எந்த பகுதியிலும் இந்தியர்கள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இப்பிரச்னைக்கு முக்கிய காரணம், ஓரே ஆண்டில் 50 ஆயிரம் பேர் வீதம் இரண்டு ஆண்டுகளில், ஒரு லட்சம் பேருக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. இவர்கள், அனைவரும் மாணவர்கள் என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். ஆனால், அவர்களில் 70 சதவீதம் பேருக்கு ஆங்கிலம், இந்தி என எந்த மொழியும் தெரிவதில்லை. வெளிநாடுகளில், வேலைக்கு ஆட்கள் எடுக்கும் நிறுவனங்கள் மாணவர்கள் என்ற பெயரில் அழைத்து செல்கின்றனர். இங்கிருந்து செல்பவர்களுக்கு சரிவர பாதுகாப்பு கிடைப்பதில்லை. இந்த நிலையை தவிர்க்க, ஆஸ்திரேலிய அரசு விசா வழங்கும் முறையை கட்டுபடுத்தியுள்ளது.

வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையும் மீறி இந்தியர்கள் தாக்கப்பட்டால், இந்தியா அதை பொறுத்து கொள்ளாது.தமிழகம், கேரள ஆகிய இரு மாநிலங்களும் நட்புறவுடன் பழகி வருவதால், நதிநீர் பிரச்னையில் அரசியல் கட்சிகள் தேவையற்ற அறிக்கைகளை வெளியிடுவதையும், சண்டையிட்டு கொள்வதையும் நிறுத்த வேண்டும். இரு மாநிலங்களுக்கும் தண்ணீர் தேவை. இதை உணர்ந்து, ஒப்பந்தத்தில் குறிப்பிட்டது போல், இரு தரப்பிற்கும் பாதிப்பு இல்லாமல் பேசி தீர்த்து கொள்ள வேண்டும். சுமூக பேச்சின் மூலமாகவே தீர்வு ஏற்படுத்த முடியும் என்பது மத்திய அரசு மற்றும் காங்கிரஸ் கட்சியின் எண்ணமாக உள்ளது.இவ்வாறு, மத்திய அமைச்சர் வயலார் ரவி கூறினார்.

ஞாயிறு, 29 நவம்பர், 2009

மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் குறித்து பிரதமருடன் விவாதம்: வயலார் ரவி



சென்னை, நவ. 28: மத்திய அரசு கொண்டு வந்துள்ள மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குடன் விவாதிக்க உள்ளதாக மத்திய வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்தார். தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசியபின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள மீன்பிடி ஒழுங்கு முறைச் சட்டத்துக்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை. மீனவர்கள் மீன்பிடிக்க மட்டுமே கடலுக்குச் செல்கின்றனர். வெளிநாடு சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங் நாடு திரும்பியதும் இது குறித்து விவாதிக்க உள்ளேன். துபையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அங்குள்ள இந்தியர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அதனால் இந்தியப் பங்குச் சந்தையின் வர்த்தகம் பாதிக்கப்பட வாய்ப்பு இல்லை. எனவே இந்தியர்கள் அச்சப்படத் தேவையில்லை. வளைகுடா நாடுகள் உள்பட வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் போலி முகவர்களால் பாதிக்கப்படாமல் இருக்க விரைவில் தனிச்சட்டம் கொண்டு வரப்படும். இதன் மூலம் போலி முகவர்கள் கட்டுப்படுத்தப்படுவார்கள். முதல்வர் கருணாநிதியை மரியாதை நிமித்தமாகவே நான் சந்தித்தேன் என்றார் வயலார் ரவி.
கருத்துக்கள்

மத்திய அமைச்சர் மிகவும் மிரியாதையுடனே முதல்வரைச சந்தித்தார் என்பது படத்தைப் பார்த்தாலே தெரகிறது. ஆனால் அவ்வாறு சந்திக்கும் பொழுது தமிழக மீனவர் குறித்தோ அயல்வாழ் தமிழர்கள் வதைபாடுகள் குறித்தோ பேச வில்லை என்றால் ஏதும் பேரம் பேசியிருப்பார்களோ! திட்டமிட்டுச் சென்னை வருகின்றவர் அல்லது சந்திக்க இருப்பதை அறிந்த முதல்வர் தமிழர்கள் சிங்களவர்களால் கொடுமைப் படுத்துவதைத் தடுப்பது குறித்து ஏதும் பேசவில்லை என்றால் இது குறித்த கவலை தமிழக அரசிற்கோ மத்திய அரசிற்கோ இல்லை என்பதை ஒத்துக் கொண்டதாகத்தானே பொருள். மீனவர்களைச் சிங்களன் கொன்றால் என்ன? சட்த்தின் மூலம் இந்தியா கொன்றால் என்ன? போவது தமிழர்கள் உயிர்தானே! அது குறித்து கொலைகாரக் கும்பல்களுக்கு மகிழ்சிதானே ஏற்படும் என்று பிறர் நினைக்கும் வகையில் நடந்து கொள்ளாதிருக்கத் தெரியவில்லையே! வாய்ப்புள்ள நேரங்களில் எல்லாம் மக்கள் நலன்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கின்றவர்கள்தாம் இனி அமைச்சராகும் வண்ணம் நாம் வாக்குரிமையைப் பயன்படுத்துவோம்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/29/2009 4:30:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *