train tickets லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
train tickets லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 16 நவம்பர், 2012

தொடரிச் சீட்டுகளில் தமிழ் மொழி நீக்கம்: குமரி அனந்தன் போராட்டம் அறிவிப்பு

தொடரிச் சீட்டுகளில் தமிழ் மொழி நீக்கம்: குமரி அனந்தன் போராட்டம் அறிவிப்பு
ரெயில் டிக்கெட்டில் தமிழ் மொழி நீக்கம்: குமரி அனந்தன் போராட்டம் அறிவிப்பு
சென்னை, நவ. 16-
 
தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், காந்தி பேரவை தலைவருமான குமரிஅனந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
ரெயில் பயணிகளுக்கு முன்பதிவு படிவத்தில் தமிழ் இருக்க வேண்டும். பயணச் சீட்டில் தமிழ் இருக்க வேண்டும். இப்போது பயணச் சீட்டிலிருந்த தமிழையே ரெயில்வே நிர்வாகம் அகற்றிவிட்டது. தமிழ் மக்கள் பேசாதிருந்தால் இன்னும் தமிழ் பெற வேண்டிய உரிமைகள் பலவிருக்க, ஏற்கனவே போராடிப் பெற்றவைகளையும் இழந்து விடுவோம்.
 
தமிழில் அஞ்சல் அட்டை வேண்டுமென கேட்டு போராடி பெற்றோம். இப்போது தமிழில் உள்ள அஞ்சலட்டை எங்குமே இல்லை. ரெயில் பயணச் சீட்டில் தமிழை எடுத்துவிட்டார்கள். உடனே தமிழில் வந்த உரிமைகளை நிலைநாட்டும் வகையில் மத்திய அரசு செயல்பட வேண்டும்.
 
இதற்காக நான் தொண்டாற்றும் காந்தி பேரவை சார்பிலும், தமிழ் ஆர்வலர்கள் சார்பிலும் சென்னை மத்திய ரெயில் நிலையத்தில் மறியல் செய்து சிறை செல்வதற்கான நாள் குறிக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தமிழகத் தொடரிப் பயணச் சீட்டுகளில் தமிழ் புறக்கணிப்பு

தமிழக இரயில் பயண ச் சீட்டுகளில் தமிழ் புறக்கணிப்பு

தமிழகத்தில் இயங்கிவரும் ரயில்களுக்கான பயணச் சீட்டில் இந்தியை திணிப்பதில் ஆர்வம் காட்டும், ரயில்வே நிர்வாகம் தமிழை முற்றிலும் புறக்கணிக்கிறது.துவக்கத்தில் அச்சிடப்பட்ட சிறு அட்டையாக இருந்த பயணச்சீட்டு, பின்னர் மின்னணு பயணச்சீட்டாக மாற்றமடைந்தது. இதில், மாநில மொழி, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில், தகவல்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். தமிழகத்தில் இயங்கிவரும் ரயில்களுக்கான பயணச்சீட்டுகளில், தகவல்கள், தமிழில் குறிப்பிடப்பட்டது.

நாளடைவில் கணிணி பயணச்சீட்டு அறிமுகமாகி, இதிலும் தமிழ், இந்தி, ஆங்கில மொழிகள் இடம்பெற்றது. தமிழ் மட்டுமே அறிந்தவர்கள், தகவல்களை எளிதில் அறிந்துகொள்ள முடிந்தது. பயணச்சீட்டு தவறாக வழங்கப்பட்டால், உடனடியாக அறிந்து, அதை மாற்றிக்கொள்ளவும் முடிந்தது. தற்போதைய பயணச்சீட்டில், தமிழ் இன்றி, இந்தி, ஆங்கிலம் மட்டுமே இடம் பெற்றுள்ளது. இதனால் தமிழ் மட்டும் அறிந்தவர்கள் திண்டாடுகின்றனர். தகவல்கள், தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் குறிப்பிடப்பட்ட, நீண்டகால நடைமுறை புறக்கணிக்கப்பட்டு, கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே குறிப்பிடப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள பயணச்சீட்டு முன்பதிவு மையங்களில், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில், பயணச்சீட்டு வழங்குவதும் வாடிக்கையாக உள்ளது.சாதாரண மற்றும் முன்பதிவு பயணச்சீட்டுகளில், இந்தியை மட்டுமே திணிப்பதில் ஆர்வம்காட்டும் ரயில்வே நிர்வாகம், தமிழை முற்றிலும் புறக்கணித்து வருகிறது.தமிழகத்தைச் சேர்ந்த டி.ஆர்.பாலு, ரயில்வே நிலைக்குழு தலைவராக இருந்தும், இத்தகைய அவலம் நீடிப்பதால், பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

தமிழக பயணச்சீட்டுகளில், தமிழிலும் தகவல்கள் இடம்பெற, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

- நமது சிறப்பு ச் செயதியாளர், தினமலர் -