thamizhnaadu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
thamizhnaadu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 29 ஆகஸ்ட், 2012

ஓணம் தமிழ்நாட்டு விழாவே!


ஓணம் தமிழ்நாட்டு விழாவே!

இலக்குவனார் திருவள்ளுவன்

மக்கள் விரும்பி -  விழைந்து – கொண்டாடப்படும் நாளே விழாவாகும். பழம்காலம் முதல் – பண்டு தொட்டு -கொண்டாடப்படும் விழா பண்டிகையாகின்றது. இவ்வகையில், ஆவணித்திங்கள் திருவோண நாளில் கேரள மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் விழா ஓணம். உண்மையில் ஓண நன்னாள் எனப் பழந்தமிழரால் கொண்டாடப்பட்டதே  இவ்விழா.
 
 
விரிவிற்கு  : 

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

தமிழகம் ஒருங்கிணைந்து போராட வேண்டும்: வைகோ





நாஞ்சில் நாடு காட்டிய வழியில் தமிழகம் ஒருங்கிணைந்து போராட வேண்டும்: வைகோ



“நாஞ்சில் நாடு காட்டிய வழியில் தமிழகம் ஒருங்கிணைந்து போராட வேண்டும்” என்று ம.தி.மு.க பொதுச்செயலர் வை.கோ பேசினார்.
கலை இலக்கிய மேம்பாட்டு உலகப் பேரவை விழா நாகர்கோவிலில் நடந்தது. ‘திருவிதாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு’ எனும் நூலை எழுதிய நூலாசிரியர் உயோகீசுவரன், ‘சோழர் காலச் செப்பேடுகள்’ எனும் நூலை எழுதிய இராசேந்திரன் ஐ.ஏ.எசு ஆகியோருக்குத் ‘தினமலர்’ நாளிதழ் நிறுவனர் இடி.வி.இராமசுப்பையர் விருது வழங்கப்பட்டது.

விழாவில் வைகோ பேசியதாவது: நாஞ்சில் மண்ணின் உரிமை காக்க நடந்த போராட்டக் களங்களில் தோள் கொடுத்துத் துணை நின்று மக்கள் மன்றத்துக்குச் செய்திகளை எடுத்துச் சென்று அரும்பணி ஆற்றிய ‘தினமலர்’ நாளிதழின் நிறுவனர், மேதகு.இடி.வி.இராமசுப்பையர் பெயரால் வழங்கப்படுகின்ற விருதைத் ‘திருவிதாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு’ என்னும் நூலைத் தந்த நூலாசிரியர் உயோகீசுவரனுக்கு வழங்கியுள்ளனர்.
மகடூஉ முன்னிலை
தாயம்மாள் அறவாணனின் ‘மகடூஉ முன்னிலை’ என்கின்ற நூலில், இலக்கியப் பாடல்களை வடித்த பெண்பாற்புலவர்களைப் பற்றி, அந்தப் பாடல்களுக்கு உரிய அரிய விளக்கங்களோடு தந்துள்ளார். சங்க இலக்கியங்களைப் படைத்த புலவர்கள் 473 பேர் எனில், அதில் 45 பேர் பெண்பாற்புலவர்கள். இது வியப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் இது பெண் உரிமை பேசுகின்ற காலம் அல்லவா? எனவே நூலைப் படைத்தவர் அந்த எண்ணிக்கை குறைவு என்று தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அந்தக் காலத்தில், அரசனையே எதிர்த்துத் “தேரா மன்னா! செப்புவது உடையேன்” என்று கூறிப் பாண்டியன் அரசவையில் எரிமலையின் சீற்றமாகத் தன்னுடைய உணர்ச்சியைக் கொட்டினாளே கொங்கற் செல்வி குடமலையாட்டி, கண்ணகிப் பெருந்தேவி? அவள், அள்ளூர் நன்முல்லையார், ஆதிமந்தியார், ஒக்கூர் மாசாத்தியார், ஔவையார், காக்கைப் பாடினியார், நச்செள்ளையார், காவற்பெண்டு, குறமகள் இளஎழினி, குறமகள் எயினி, பேய்மகள் இளஎயினி, பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப் பெண்டு, பொன்முடியார், பொன்மணியார், நெறி பாடிய காமக்கண்ணியார் இவர்கள் எல்லாம் பெண் பாற்புலவர்களே. ஔவையார் எத்தனையோ அரிய பாக்களைத் தந்தார்.
சோழர் காலச் செப்பேடுகள்:
‘சோழர் காலச் செப்பேடுகள்’ வரலாற்று நூலை நான் பார்த்தேன். கி.பி., 846ஆம் ஆண்டிலே விசயாலய சோழன், முத்தரைய அரசர்களை வென்று பிற்காலச்சோழப் பேரரசுக்கு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தான்.
அவனது வழியிலேதான் பராந்தகச் சோழன், அவன் மகன் இராசாதித்தியச் சோழன் -அவன் தக்கோலப் போரிலே வீழ்ந்துபட்டான். ஆயினும் போரில் புலிக்கொடி வென்றது- அடுத்து அரிஞ்சயச் சோழன், அழகுமிக்க சுந்தரச் சோழன், அவன்தம் மூத்த மகன் ஆதித்த கரிகாலன் படுகொலை செய்யப்பட்டது வரை சொல்லி, அவன்தம் இளவல்தான் அருள்மொழிவர்மன் என்ற முதலாம் இராசராசசோழன் அவர்தம் சித்தப்பா மதுராந்தகச் சோழன் வரையிலான வரலாற்றுச் செய்திகளையெல்லாம் தொகுத்து முனைவர் இராசேந்திரன் நூலாகத் தந்து இருக்கிறார். வஞ்சி மூதூரில், கரூரிலே சேர மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் -அதுவும் தமிழர்களின் ஆட்சிதான்- அங்கே உரோமர்களுடைய, உரோமப் பேரரசரின் காசுகள் கண்டெடுக்கப்பட்டன. அகசுடசுக் காலத்துக் காசுகள், இடைபீரியசுக் காலத்துக் காசுகள் ஆகிய அவற்றை வெளிக் கொண்டு வந்த பெருமை ‘தினமலர்’ நாளிதழின் இன்றைய ஆசிரியர் கிருட்டிணமூர்த்தி அவர்களைச் சாரும்.
திருவிதாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு
‘திருவிதாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு’ நூலை நான் முழுமையாகப் படித்தேன். அதன் விளைவாகத்தான் கூர் தீட்டப்பட்ட போர்க்கருவியாகக் களத்துக்கு வந்துள்ளேன். எப்படியெல்லாம் தலைவர்கள் இந்தக் குமரி மண்ணிலே போராடினார்கள் என்பதைப் பார்க்கின்றபோது, சாதி, சமயம், கட்சிகளைக் கடந்து போராடிய அந்த வீரவரலாற்றைப் பார்க்கின்றபோது, அவர்கள் இந்த நாஞ்சில் நாட்டுக்காக மட்டும் போராடவில்லை. தமிழகத்திற்காகப் போராடினார்கள். கேரள வல்லாதிக்கத்திலிருந்து இந்த மண்ணை -அவர்களுடைய பார்வை மிக, மிகப் பரந்து இருந்தது. தேவிகுளம், பீர்மேட்டையும்- மீட்பதற்காகப் போராடினார்கள் என்பதை அறிந்த போது வியந்து போனேன். இந்தக் குமரி மாவட்ட மக்கள், குமரி மாவட்டத்தை மட்டும் மீட்பதற்காக இன்றித் தமிழகத்துக்காகப் போராடினார்கள். அதுதான் எனக்கு வியப்பையும், மகிழ்ச்சியையும் தருகிறது. எனவே முல்லைப் பெரியாறா? அது தென்பாண்டி மண்டலத்துக்கு மட்டும்தான் சிக்கல் எனக் கருதி விடக் கூடாது. சிறுவாணியா? கீழ்ப்பவானிப் பாசனப்பகுதியா? அமராவதிச் சிக்கலா? அது கொங்கு மண்டலத்துக்குத்தானே எனக் கருதி விடக் கூடாது. ஒட்டு மொத்தத் தமிழகமும் ஒன்றாக இணைந்து போராட வேண்டும். இவ்வாறு வைகோ பேசினார்.
நன்றி:-
- தினமலர் செய்தியாளர்
http://www.natpu.in/?p=28038

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

Voice of Tamilnadu-Vaiko: தமிழக மக்கள் சிக்கல்களுக்குத் தொடர்ந்து குரல் கொடுப்பேன்: வைகோ

தமிழக மக்கள் பிரச்னைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுப்பேன்: வைகோ

First Published : 16 Oct 2011 04:07:46 AM IST


சென்னை, அக்.15: தமிழக மக்களுக்கு எந்த இடத்தில், என்ன பிரச்னை ஏற்பட்டாலும் நான் குரல் கொடுப்பேன் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.  சென்னையில் மதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தம்புசெட்டித் தெருவில் சனிக்கிழமை அவர் பேசியது:  ம.தி.மு.க. சுயமரியாதை உள்ள கட்சி. கடந்த 5 ஆண்டுகளில் அ.தி.மு.க.வுக்கு அனைத்து நேரத்திலும் பக்கபலமாக இருந்து வந்தோம். ஆனால் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ம.தி.மு.க.வுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை. தமிழக மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் நான் சும்மா இருக்க மாட்டேன். கூடங்குளம் அணுமின் நிலையம் அமைப்பது குறித்து 1988-ல் அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி நாடாளுமன்றத்தில் அறிவித்தபோது, நான்தான் முதல் ஆளாக மக்களவையில் எதிர்ப்புத் தெரிவித்தேன். முல்லை பெரியாறு விவகாரத்திலும் தொடர்ந்து போராடி வருகிறேன். இதேபோல் சில்லறை வியாபாரிகளின் முக்கியப் பிரச்னைகளுக்கும் நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன். சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. மக்களின் பிரச்னைக்காகப் போராட, ஆண்ட கட்சி மறந்தாலும், ஆளும் கட்சி மறந்தாலும் நாங்கள் மறக்க மாட்டோம். சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடாத ம.தி.மு.க.வுக்கு இந்த உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் ம.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வதன் மூலம் ஊழல் இல்லாத உள்ளாட்சியைத் தருவோம். இது அடுத்து நடைபெற உள்ள நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும் என்றார் வைகோ.

புதன், 12 அக்டோபர், 2011

muuvar uyir, appeal case

ராஜீவ் காந்தி  கொலை பொய்யாக தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் மூன்று தமிழர்களின் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து வேறு நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கு தமிழக அரசு கடும்  எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக, தமிழக அரசு சார்பில் கூடுதல் முதன்மை வழக்கறிஞர் குருகிருஷ்ண குமார் இன்று
உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அதில், ராஜீவ் கொலை வழக்கில் தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யக் கோரும் பேரறிவாளன் உள்பட மூவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் விசாரிப்பதற்கு இடையூறு நேரக்கூடும் என்ற குற்றச்சாட்டை தமிழக அரசு முற்று முழுதாக மறுத்துள்ளது

வியாழன், 6 அக்டோபர், 2011

crimes against children: தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள்



குழந்தைகளுக்கு எதிரான கடத்தல், பாலியல் கொடுமை குற்றங்கள், தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்தாண்டு மட்டும், இத்தகைய வழக்குகள், 810 பதிவாகியுள்ளன. இது, அதற்கு முந்தைய, 2009ம் ஆண்டை விட, 27.8 சதவீதம் (634) அதிகம்.

குழந்தைகளுக்கு எதிராக; சிசுக் கொலை, குழந்தைகளை தொழிலாளர்களாக பயன்படுத்துவது, குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பது, பாலியல் கொடுமை, கடத்தல், கொலை என, பல வகையான குற்றங்கள் அரங்கேறி வருகின்றன.இவற்றை தடுக்க, கடுமையான சட்டங்கள், தண்டனைகள் இருந்தாலும், கள்ளத்தொடர்பு, குடும்பப் பிரச்னைகள் போன்ற சமூக போக்கு மாற்றங்களால், இத்தகைய குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

காணாமல் போனவர்கள்:
கடந்த, 2004ல் இருந்து, இந்தாண்டு, ஜூலை 1ம் தேதி வரை, காணாமல் போய் கண்டுபிடிக்கப்படாத குழந்தைகளின் எண்ணிக்கை, 1,220. இதில், பெண் குழந்தைகள் 625. இந்தாண்டில், ஜூலை 1ம் தேதி வரை காணாமல் போன பெண் குழந்தைகளின் எண்ணிக்கை, 972. இவர்களில், 250 பேர் கண்டுபிடிக்கப்படவில்லை. இவர்களின் கதி என்னவாகியது என்பது, இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது.

காதல், விபசாரத்தால் தொலைந்தவர்கள்: காணாமல் போன பெண் குழந்தைகளை பொறுத்தவரை, பெரும்பாலும் காதல், விபசார கும்பலில் சிக்கும் சம்பவங்கள், அதிகளவில் நடப்பதாக கூறப்படுகிறது. 2010ல் மட்டும், காதலில் சிக்கி, 482 குழந்தைகளும், குடும்ப பிரச்னையால், 317 குழந்தைகளும், தேர்வு தோல்வியால், 148 குழந்தைகளும், இதர பிரச்னைகளால், 182 குழந்தைகளும் வீட்டை விட்டு சென்றுள்ளனர். இவர்களில், 194 பேர், அந்தாண்டு இறுதி வரை கண்டுபிடிக்கப்படவில்லை.

சேலத்தில் தான் அதிகம்:
இதில், சேலம் மாவட்டத்தில் அதிகப்படியாக, 108 வழக்குகள் பதிவாகியுள்ளன. அடுத்ததாக, வேலூரில், 67ம், சேலம் மாநகரில், 54 வழக்குகளும் பதிவாகியுள்ளன. கடந்த ஐந்தாண்டுகளில் சிசுக்கொலை வழக்குகள் மிகவும் குறைந்துள்ளது. 2008ல், 20 வழக்குகளும். 2009ல், 9ம், கடந்தாண்டில், 7ம் பதிவாகியுள்ளன. பெரும்பாலும், சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சிசுக் கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்தாண்டில் குழந்தைகள் கடத்தல் சம்பவங்கள் அதிகளவில் (459) பதிவாகியுள்ளன. அதிகப்படியாக சேலத்தில், 99 குழந்தைகள் கடத்தப்பட்டதாக வழக்குகள் உள்ளன.

பாலியல் கொடுமை சம்பவங்கள்:
கடந்த மூன்றாண்டுகளில் குழந்தைகள் கற்பழிப்பு, பாலியல் கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்தாண்டு நடந்துள்ள, 203 சம்பவங்களில், அதிகப்படியாக, சென்னை மாநகரில், 22 வழக்குகளும், அடுத்ததாக, சேலத்தில், 19 வழக்குகளும் பதிவாகியுள்ளன. கடந்தாண்டில் நடந்த குழந்தைகளுக்கெதிரான குற்ற சம்பவங்களில், 1,029 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், 613 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 129 பேருக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. மற்றவர்கள் மீதான வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன.

கள்ளத்தொடர்பு முக்கிய காரணம்:
இதுகுறித்து, போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
குழந்தைகள் காணாமல் போகும் போது, அவர்கள் கிடைக்கும் வரை பல்வேறு கோணங்களில் புலன் விசாரணை நடத்தப்படுகிறது. தமிழகத்தில், குழந்தைகளை கடத்தி வெளிநாட்டுக்கு அனுப்பும் கும்பலைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் இருந்ததை அடுத்தும், குழந்தைகள் அதிகளவில் கடத்தப்படுவதைத் தொடர்ந்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.சிறு குழந்தைகளை பெற்றோர் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளை வெளியில் விளையாட விட்டு கவனக்குறைவாக இருப்பதை, கடத்துபவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.குடும்ப பிரச்னை, கள்ளத்தொடர்பு காரணமாகவும் தற்போது கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஓரளவுக்கு விவரம் அறிந்த குழந்தைகளுக்கு வெளிச்சூழலுக்கு தகுந்த வகையில் நடந்து கொள்வது தொடர்பாகவும், குழந்தைகளுக்கெதிரான குற்றங்களின் விளைவு பற்றியும் பெற்றோர் புரியும்படி எடுத்துச் சொல்ல வேண்டும்.அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை நாம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். பெண் குழந்தைகள் நடவடிக்கைகளை பெற்றோர் கவனிக்க வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மொபைல் போன், இன்டர்நெட் ஆகியவற்றை வழங்குவதற்கு முன்யோசனை வேண்டும். குழந்தைகளுக்கு, அவர்களுக்கான அவசர உதவி போன் எண்ணை தெரிந்திருக்க செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.டூ கடத்தல், கற்பழிப்பு தொடர்ந்து உயர்கிறது டூ காதலில் விழும் பெண் குழந்தைகள் அதிகம்