திங்கள், 18 ஜூன், 2012
தமிழ்நாடு இந்தியாவில்தான் உள்ளதா? இலங்கைக் கடற்படை மீண்டும் அட்டூழியம்
திங்கள், 12 ஏப்ரல், 2010
இராமேசுவரம் இந்தியாவில்தான் இருக்கிறதா என்னும் கேள்வி இன்று அனைவரிடமும் எழுந்துள்ளது. நாளை இந்த வினா தமிழ்நாடு இந்தியாவில்தான் இருக்கின்றதா என மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை. இந்தியக் கண்டத்தின் ஒற்றுமை கருதி உலகின் மூத்த இனமான, இக்கண்டம் முழுவதும் ஒரு காலத்தில் பரவியிருந்த இனமான, இலங்கையின் தாயக இனமான, தமிழ் இனத்தை மதிக்கக் கூடிய , போற்றக்கூடிய , காக்கக் கூடிய, நிறுவி ஆரியச் சார்பு ஆட்சியை அகற்ற வேண்டும். இராமேசுவரத்தை இலங்கையுடன் இணைத்துச் சிங்கள நாடாக மாற்ற வழி வகுக்கும் காங்கிரசு ஆட்சியையும் மத்திய அரசில் ஆதிக்கம் செலுத்தும் வரலாறு தெரியா வஞ்சக அதிகாரிகளையும் அகற்றினால் அன்றி நமக்கு விடிவு இல்லை. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
4/12/2010 2:33:00 AM
வெள்ளி, 26 மார்ச், 2010
இராமேசுவரம் மீனவர்கள் தமிழர் ஆக இருக்கலாம்; ஆனால் இந்தியரல்லர். எனவே, அவர்கள் எந்த நாட்டு உதவியுடனும் தமக்கெனத் தனியரசை அமைத்துக் கொள்ளலாம் இன்பதுதான் இந்திய அரசு கொள்கையோ என எண்ண வேண்டியுள்ளது. இந்தியக் கண்டத்து ஒற்றுமை கருதியும் வலிவு கருதியும் தன்மானம் கருதியும் உயிர்ப்பலிகளைத் தடுப்பது கருதியும் நம் நாட்டு நலன்களைக் காக்காத அரசுகளைத் தூக்கி எறிய மக்கள் முன்வருவார்களாக! (என்ன செய்வது? இப்படிப்பட்ட எண்ணம் வந்தாலும் தேர்தல் நேரத்தில் மயக்கத்தில் ஒன்றும் தெரிவதில்லையோ!)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
3/26/2010 3:43:00 AM