திங்கள், 12 ஏப்ரல், 2010

இராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல்



ராமேசுவரம்,ஏப்.11: நடுக்கடலில் மீன் பிடித்த ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்கியதில், இருவர் காயமடைந்து ராமேசுவரம் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பெற்றனர்.ராமேசுவரத்தில் இருந்து ஏப்ரல் 10-ம் தேதி சுமார் 120 விசைப்படகுகள் மீன் பிடிக்கச் சென்றன. இப் படகுகள் இந்திய, இலங்கை கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு போர் கப்பலில் ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்தனராம்.பின்னர் உச்சிப்புளியைச் சேர்ந்த கே.டி.முனியசாமி என்பவரின் விசைப்படகை மடக்கிப் பிடித்தனர். இதில் இருந்த மீனவர்கள் சுப்பிரமணியன் (45), தங்கச்சாமி (50), மணி(47), முனியசாமி (40) ஆகிய 4 பேரையும் கம்பு, கயிறால் சரமாரியாகத் தாக்கினராம்.இதில் மீனவர்கள் சுப்பிரமணியன், தங்கச்சாமி இருவருக்கு கை, முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. இனிமேல் இப் பகுதியில் மீன் பிடிக்க வரக் கூடாது என எச்சரிக்கை செய்து விரட்டியனுப்பினராம். பின்னர் மீன் பிடிக்க முடியாமல் வெறும் படகுடன் ஞாயிற்றுக்கிழமை காலை கரை திரும்பியுள்ளனர். இதில் தாக்கப்பட்ட இரு மீனவர்களும் ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் வெளி நோயாளிகளாகச் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இவ்வாறு பாதிக்கப்பட்ட மீனவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
கருத்துக்கள்

இராமேசுவரம் இந்தியாவில்தான் இருக்கிறதா என்னும் கேள்வி இன்று அனைவரிடமும் எழுந்துள்ளது. நாளை இந்த வினா தமிழ்நாடு இந்தியாவில்தான் இருக்கின்றதா என மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை. இந்தியக் கண்டத்தின் ஒற்றுமை கருதி உலகின் மூத்த இனமான, இக்கண்டம் முழுவதும் ஒரு காலத்தில் பரவியிருந்த இனமான, இலங்கையின் தாயக இனமான, தமிழ் இனத்தை மதிக்கக் கூடிய , போற்றக்கூடிய , காக்கக் கூடிய, நிறுவி ஆரியச் சார்பு ஆட்சியை அகற்ற வேண்டும். இராமேசுவரத்தை இலங்கையுடன் இணைத்துச் சிங்கள நாடாக மாற்ற வழி வகுக்கும் காங்கிரசு ஆட்சியையும் மத்திய அரசில் ஆதிக்கம் செலுத்தும் வரலாறு தெரியா வஞ்சக அதிகாரிகளையும் அகற்றினால் அன்றி நமக்கு விடிவு இல்லை. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/12/2010 2:33:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக