prayer in tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
prayer in tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 26 ஜூலை, 2010

தமிழில் அர்ச்சனை: நடைமுறைக்கு வருமா?


வேதாரண்யம்: இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்ய கடந்த காலத்தில் தமிழக அரசு வகை செய்தது. இதைச் செயல்படுத்தும் வகையில், பல கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற விளம்பரத் தட்டிகள் எழுதி வைக்கப்பட்டுள்ளன. ஆனால், பல கோயில்களில் இந்த நடைமுறை இன்று வரை சாத்தியமில்லாத  நிலையே நீடிக்கிறது. தமிழ் ஆட்சி மொழியாகவும், நீதிமன்ற வழக்கு மொழியாகவும், பொறியியல், மருத்துவம், அறிவியல் போன்றவற்றின் பயிற்று மொழியாகவும் மாற வேண்டும் எனப்  போராட்டங்கள் நடைபெறும் அதேநேரத்தில், அதற்கான நடவடிக்கைகளும்  சாத்தியமாகி வருவதை மறுப்பதற்கில்லை. ஆனால், இறைவனை வழிபட மட்டும் இன்று வரை பொருள் புரியாத மொழி சார்ந்தே இருக்க வேண்டிய நிலை உள்ளது.நாகை மாவட்டம், வேதாரண்யேசுவரர் கோயில்  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட சிறப்புப் பெற்றது. இந்தக் கோயிலில் இறைவனை வழிபட்டு வந்த ரிக், யஜுர், சாம, அதர்வண ஆகிய வேதங்கள் நான்கும் கோயிலின் பிரதானக் கதவுகளை மூடிச் சென்றுவிட்டதாகவும், பின்னர் இங்கு வந்த  சமயக்குரவர்கள் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் இருவரும் தேவாரத் தமிழ்ப் பதிகம்பாடி கதவுகளைத் திறக்கவும், அடைக்கவும் செய்ததாக செவிவழித் தகவல்களாகச் சொல்லப்படுகிறது.இது இறைவனை வழிபட வடமொழிகளுக்கு நிகரானது தமிழ்  என்பதை விளக்குவதாக அமைந்துள்ளது. இதை நினைவுகூரும் வகையில்,  ஆண்டுதோறும் மாசி மகப் பெருவிழாவின் போது, தமிழ்ப் பதிகம் பாடி கதவு திறக்கும் திருவிழாவும் நடந்து வருகிறது.  இது தமிழுக்கு எடுக்கப்படும் விழாவாகவே  பலரும் கருதுகின்றனர்.அதேநேரத்தில், இங்கு தமிழில் அர்ச்சனை செய்து இறைவனை வழிபட வகை  செய்யப்படவில்லை.     ஆதனூரைச் சேர்ந்த முருகையன் தனது மகனின் பிறந்த நாளான வெள்ளிக்கிழமை தமிழில் அர்ச்சனை செய்ய கோயிலுக்குச் சென்றுள்ளார். தமிழில் அர்ச்சனை செய்வது இல்லை என மறுத்த அர்ச்சகர், பூஜைக்குரிய பொருள்களைத் திருப்பிக் கொடுத்துள்ளார்.    இதுகுறித்து கோயில் தக்காரும், இந்து சமய அறநிலையத் துறை நாகை உதவி ஆணையருமான தென்னரசு கூறியது: அர்ச்சகர்களுக்கு தமிழில் அர்ச்சனை செய்ய புத்தகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.  அரசின் உத்தரவும் உள்ளது. தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. மறுப்பு குறித்து முறையான புகார் அளித்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர். நாங்கள் 5 ஆண்டுகள் கற்றுக் கொண்டதைத்தான் செய்கிறோம். தமிழில்  அர்ச்சனை செய்யப் பயிற்சியோ, வழிகாட்டுதலோ இல்லை என்கின்றனர் அர்ச்சகர்கள்.
கருத்துக்கள்

சமயம் வழித் தமிழ் வளர்த்ததாகப் பெருமை பேசிக் கொள்ளும் மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தமிழி்ல் வழிபாடு கிடையாது. காரணம் கேட்டால் அரசின் கட்டுப்பாட்டில் தங்கள் மடம் வராது என்கிறார்கள். உண்மையில் இம்மடத்தினர்தான் முன் முறையாகத் தமிழ் வழிபாட்டை மட்டுமே நடைமுறைப் படுத்தியிருக்க வேண்டும். அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் தமிழ் வழிபாடு என்று கேட்டால் சமற்கிருதத்தில் ஓதி விட்டுத்தான் தமிழ் வழிபாட்டைத் தொடங்குவர். மூலவர் தவிரப் பிற இறையிடங்களில் தமிழில் வழிபாடு செய்யுமாறு கேட்டால் மூலவர்க்கு மட்டுமே தமிழில் வழிபாடு என்று மறுக்கின்றனர். தமிழ் வழிபாட்டிற்கு எதிரான பூசாரிகள் விலக்கப்படுவார்கள் என்பதை நடைமுறைக்குக் கொண்டு வந்து தமிழில் மட்டுமே வழிபாடு நடைபெறும் சமசுகிருத வழிபாடு வேண்டுமென்றால் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வேண்டுகோள் அடிப்படையில் நடத்தப்படும் என்ற நடைமுறையைக் கொண்டு வர வேண்டும். இச் செய்தியை வெளியிட்ட அம்பிகாபதிக்கும் தினமணிக்கும் பாராட்டுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/26/2010 3:19:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வியாழன், 8 ஏப்ரல், 2010

'தினமணி' தலையங்கமும் முதல்வரின் அறிவிப்பும்



சென்னை, ​​ ஏப்.7:​ சட்ட மேலவையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று 'தினமணி' தலையங்கமும் விடுத்த வேண்டுகோளை ஏற்று,​​ அதற்கான அறிவிப்பை ​முதல்வர் கருணாநிதி பேரவையில் செய்துள்ளார்.​ ​ தினமணியில் கடந்த மார்ச் 15-ம் தேதியன்று 'முதல்வர் முயன்றால்...' என்ற தலைப்பில் வெளியான தலையங்கத்தில் 'கலைக்கப்பட்ட சட்ட மேலவையை மீண்டும் முதல்வர் கருணாநிதி கொண்டு வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.​ ​ இவ்வாறு தினமணியின் ஆக்கபூர்வமான யோசனைகளை உடனுக்குடன் ஏற்று அறிவிப்புகளை வெளியிடும் முதல்வர் கருணாநிதிக்கு வாசகர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
கருத்துக்கள்

கலைஞர் தான் அறிவிக்க இருக்கும் திட்டம் பற்றித் தினமணியில் எழுதச் சொல்வதாகும் பின் அதைத் தான் ஏற்பதாக நாடகம் ஆடுவதாகவும் பொது மக்கள்பேசிக் கொள்கிறார்களே! உண்மையா? இல்லையெனில் தினமணி உடனடியாக முன்னரே பன்முறை வலியுறுத்தியதை நினைவு படுத்தும் வகையில் 1) வரும் கல்வியாண்டு முதலே எல்லா வகுப்புகளிலும் தமிழ் மொழி கட்டாயமாகக் கற்றுத் தரப்படும். 2) உயர்கல்வி வரை தமிழ்வழிக் கல்வி நடைமுறைப்படுத்தப்படும்.3) தமிழ் வழி பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படும். 4) தமிழர் சமயத்திற்கு எதிரான ஆரிய வழிபாடு நிறுத்தப்பட்டுத் தமிழ் வழிபாடே கோயில்களில் நடத்தப்பெறும். 5)தமிழ் நாட்டில்தமிழே ஆட்சி மொழியாகவும் எல்லா நிலை மொழியாகவும் உடனே நடைமுறைப்படுத்தப்படும். 6) தமிழ்நாட்டில் தமிழுக்கே தலைமை தமிழர்க்கே முதன்மை எனத் தமிழ் நலச்சசூழலை உருவாக்கும் என முதல்வர் அறிவிக்கும் வகையில் ஒரு தலையங்கத்தை எழுதட்டும்! முதல்வர் ஏற்றுக் கொணடார் என்றால் காலம் உள்ளளவும் பாராட்டுவோம்! இல்லையேல் அற்பமகிழ்ச்சி இனி வேண்டா. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/8/2010 3:03:00 AM

Well. If you look at the way the TN assembly is functioning, you'll see it is a waste. Nothing but one man/woman worship or altercation or fist fight. Do you need another such floor ? Tanil Nadu politics has gone down so much that the legislative council is going to be such another drain on tax payer money.

By gkh
4/8/2010 12:57:00 AM

Kalaigar realy honest C M in tamil nadu if you requst enything with good reason he was approve immidiatly. Not only this matter all things, thanks kalaiigar.

By Vedai Tamilan
4/8/2010 12:30:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

ஞாயிறு, 6 டிசம்பர், 2009

சிதம்பரம் கோயிலின் தெற்கு வாயிலை திறக்க கோரிக்கை: தீட்சிதர் கண்டனம்



சிதம்பரம், டிச.5: சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் தெற்கு வாயிலை திறக்க கோருவதற்கு உ.ர. உமாநாத தீட்சிதர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

தெய்வபக்தி இல்லாதவர்கள் அடைக்கப்பட்டுள்ள நடராஜர் திருக்கோயில் தெற்கு வாயிலை நந்தனார் வந்த வழியென்று அடைத்திருக்கும் வாயிலை திறக்க வேண்டும் என ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

நந்தனார் தெற்குகோபுரத்தை தரிசனம் செய்து கொண்டே இறைவனோடு ஐக்கியமானார் என புராண வரலாறு கூறுகிறது. இருப்பினும், இதை தமிழ் ஆர்வலர்கள் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.

63 நாயன்மார்களில் ஒருவரான திருநாளைப் போவார் (நந்தனார்) மூலவர், உற்சவவருக்கு பூஜை செய்து வழிபட்டு வரும் தில்லைவாழ் அந்தணர்களுக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது என அந்த அறிக்கையில் உ.ர. உமாநாத தீட்சிதர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள்

தமிழ்நாட்டு மக்களால் தமிழ்நாட்டு மக்களின் செல்வத்திலும உழைப்பிலும் கட்டப்பட்ட தமிழ்நாட்டு மக்களின் இறைவனுக்குரிய கோயிலில் இருந்து ஆண்டாண்டு காலமாக ஏய்த்துப் பிழைத்து வரும் தீட்சிதர்கள் அனைவரையும் அப்புறப்படுத்த வேண்டும். அதுவே இறைவன் மக்களை அணுகுவதற்கு வழியாகும். தன்னைத் தமிழில் பாட வேண்டும் என்ற இறைவனின் விருப்பத்திற்கு மாறாகத் தமிழ்நாட்டு வழிபாட்டு முறை உள்ளதால் இறையருள் நமக்குக் கிடைக்கவில்லை. எனவே, தமிழக மக்களின் கோயில்களில் தமிழர்களைக் கொண்டே தமிழ் வழிபாடு நடத்துவதே இறையருள் கிடைக்க வழியாகும் என்பதை அனைவரும் உணர வேண்டும். தீட்சிதர்களுக்கும் தமிழரல்லாத பிற பூசாரிகளுக்கும் மறுவாழ்வு முகாம்கள் அமைத்து வேறு வேலைக்கான பயிற்சி அளித்தல் வேண்டும். இறையருள் இனிய தமிழாக இருந்தால்தான் இறையருள் நமக்குக் கிட்டும் என்பதை உணர வேண்டும்.


அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/6/2009 4:25:00 AM

NATHIGALAI THASIYAMAAKKA SOLLUNGADA!!THERKKU VAASALAI THURANTHAL MATTUM ORU M¨¨ M NADAKKA POAVATHU KIDAYAATHU!ITHU ORU SEITHI?THU!THU!

By EVR/EBU/PARIS
12/5/2009 9:58:00 PM

NANDANAR ATTAINED MUKTHI AS WAS SAMBANDHA PERUMAN ATTAINED AT THE TIME OF HIS MARRIAGE. WILL THE PRESENT DAY SIRUTHAIS SHALL GIVE COLOURS THAT SAMBANDHA PERUMAN WAS ALSO TORCHED BY BRAMINS?????? AT TIRUCHENDUR TEMPLE THE WEST GOPRA VAASAL IS NOT OPEN TO PUBLIC, FOS WILL THE SIRUTHAIS START DHARNAS???NANDANAR IS A NAYANMAR AMONG 63 ,WHOSE GURU POOJAS ARE BEING CONDUCTED FOR THOUSADS OF YEARS, BY ALL SAIVETS AND SAIVA MADAMS.

By l.C.NATHAN
12/5/2009 8:38:00 PM

Nandhanar is supposed to be member belonging to the scheduled castes. He was not supposed to enter the temple. How did it happen? How did he reach the lotus feet of God, and became part of Gods. Is it divine blessing or was Nandanar murdered by someone like Devanathan who does illegal things, because he entered the temple protesting the bar, and a story was given to it. Some reader may clarify the questions involved. If it is wrong, then say it is wrong with reasoning.

By AHindu
12/5/2009 7:28:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *