mervin sylwa லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
mervin sylwa லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 11 ஆகஸ்ட், 2010

அதிகாரிக்குத் தண்டனை: இலங்கை அமைச்சர் பதவிநீக்கம்


கொழும்பு, ஆக.11: இலங்கை நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் பதவியிலிருந்து மெர்வின் சில்வா நீக்கப்பட்டுள்ளார்.டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தத் தவறியதற்காக அரசு அதிகாரி ஒருவரை மரத்தில் கட்டிவைத்து தண்டனை வழங்கியதாக மெர்வின் சில்வா மீது புகார் கூறப்பட்டது. இதையடுத்து அவரை அமைச்சர் பதவியிலிருந்து இலங்கை அதிபர் ராஜபட்ச நீக்கியுள்ளார்.அமைச்சரின் பதவிநீக்கம் உடனடியாக அமலுக்கு வருவதாக இலங்கை அதிபர் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.மேலும் இலங்கை சுதந்திரக் கட்சி உறுப்பினர் பதவியிலிருந்தும் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன.
கருத்துக்கள்

மிழர்களைக் கொன்று ஒழிப்பவர்களை ஊக்கப்படுத்தினாலும் சிங்கள ஊழியர் மீது கை வைத்தாலாவது தண்டனை கொடுக்கிறார்களே! மனித நேயம் உள்ள சிறுபான்மைச் சிங்களர்களே! தமிழர் உரிமை பெற நீங்களும் குரல் கொடுங்கள்! புத்தநெறிபோற்றுவது உண்மையானால் புத்த சமயத்தை உங்களுக்குத்தந்த உங்கள் மொழியை உங்களுக்குத் தந்த உங்களுக்குத் தங்கள் நிலத்தைத் தந்த தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ வழி செய்யுங்கள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/11/2010 3:22:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

செவ்வாய், 6 ஜூலை, 2010

பொன்சேகாவை உயிருடன் புதைக்க மயானம் தேவை: இலங்கை அமைச்சர்



கொழும்பு, ஜூலை 6- சரத் பொன்சேகாவை உயிருடன் புதைக்க மயானம் தேவை என்று இலங்கை நாடாளுமன்றத்தில் அமைச்சர் மேர்வின் சில்வா பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்ததாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
"பாலியல் குற்றச்சாட்டில் ராணுவ இலட்சினை பறிக்கப்பட்டவர் பொன்சேகா. பின்னர், அவரது ஜாதகம் நன்றாக இருந்ததால் மீண்டும் பதவி கிடைத்தது. அவருக்கு தேவையானதை அதிபர் ராஜபட்ச பெற்றுக் கொடுத்தார். ஆனால், அவர் அதிபரை குற்றம்சாட்டுகிறார். எனவே, சரத் பொன்சேகாவை உயிருடன் புதைப்பதற்கான மயானத்தை அமைக்க வேண்டும். இத்தகைய மயானம் அமெரிக்காவில் ஏற்கெனவே உள்ளது." என்று அமைச்சர் மேர்வின் சில்வா பேசியதாக அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

அதுதான் தண்டனை என்றால் உடன், பக்சே முதலான அனைத்துச் சிங்களத் தலைவர்களையும் படைத்தலைவர்களையும் கொலைவெறியில் தாண்டவமாடிய படைவீரர்களையும் உறுதுணை புரிந்த பன்னாட்டு அதிகாரிகள் தலைவர்களையும் புத்தர் கொள்கையைக் கொன்று புதைத்து வெறியாட்டம் ஆடும் போலிச்சாமியார்களையும் புதைக்க வேண்டும். அனைவரையும் தண்டிக்க வேண்டும் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/6/2010 4:03:00 PM
Buddha if he is alive he will ashamed about these Buddhists scoundrels of Lanka.
By Theravada
7/6/2010 3:39:00 PM
பொன்சேகாவிற்கு உயிருடன் புதைக்க மானம் தேவை என்றால்....சிங்கள நாய்களுக்கும்,அப்பாவி தமிழர்களை கொல்ல உதவி செய்தி " அத்தனை" பன்றிகளுக்கும் ...உயிருடன் கொல்லி தானடா போடவேண்டும்...அதுவும் சிக்கிரமே ...நடக்கும்
By Selva
7/6/2010 3:25:00 PM
அரியலூர் ரயில் விபத்துக்கு தார்மிக பொறுப்பு ஏற்று அன்றைய ரயில்வே மினிஸ்டர் லால்பகதூர் சாஸ்திரி தன் பதவியை துறந்தார் . அது போல் லட்சகணக்கான தமிழர்கள் சாகும் போது, முதல்வராக இருந்த கலைஞரை தார்மீக பொறுப்பு ஏற்று , பதவியை ராஜினாமா செய்ய சொலுங்கள் அம்மா அவர்களே .
By ....
7/6/2010 3:06:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *