வெள்ளி, 11 பிப்ரவரி, 2011
foreign tamils welfare board: தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல வாரியம் தொடக்கம்
ஞாயிறு, 12 டிசம்பர், 2010
variyam for foreign tahmizhar
முடியாதது ஒன்றும் இல்லையே! வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
ஞாயிறு, 18 ஏப்ரல், 2010
செய்திக்குப் பொருத்தமில்லாதவாறு போடப்பட்டுள்ள, புன்னகை பூத்த பழ.நெடுவின் படத்தை அகற்ற தினமணிக்கு வேண்டுகோள்.வேதனையின் வெளிப்பாட்டைப் படம் கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
4/18/2010 4:55:00 AM
காவல்துறை மூலம் தமிழக அரசுதெரிவித்துள்ள மழுப்பல் கருத்து ஏற்கக்கூடியது இல்லை. கொலைகாரர்களை அரசு மரியாதையுடன் வரவேற்பார்களாம். பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச் செல்ல அன்பர்கள் சென்றால் தடுப்பார்களாம். புதுவகையான நீதியாக உள்ளது. வீரமணியே கலைஞர் சினம் கொள்வாரோ என்ற அச்சத்தை மீறி (ஒரு வேளை அவரிடம் இசைவு பெற்று) கலைஞருக்கு அவப் பெயர் ஏற்படுத்த செய்த செயல் என அறிக்கை விட்டிருக்கும்போது (அவரின் முழு அறிக்கை காண்க) முதன்மைக் கட்சிகள் அமைதி காப்பதும் நமக்கு இழுக்கே. புகுவிசைவை (விசா) அளித்த பின்பு வானூர்தியில் இருந்து இறங்கவிடாமல் செய்ததில் இருந்தே மனித நேயமற்ற இச்செயல் அரசியலாக்கப்படட்டுள்ளது தெளிவாகிறது. அரசு அவரிடம் மன்னிப்பு கேட்டு அரசு செலவில் அழைத்து முழுப் பண்டுவமும் பார்க்க வேண்டும். இதுவே சரியான கழுவாயாக (பரிகாரமாக) அமையும். ஆள்வோரின் ஈவிரக்கமற்ற செயல் ஆளப்டுவோருக்கும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதை உணர வேண்டும். பக்சேவைக் குளிப்பாட்டும் பச்சோந்திகள் விலக வேண்டும். வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
4/18/2010 4:52:00 AM
செவ்வாய், 6 ஏப்ரல், 2010
உண்மைதான். அதே நேரம் தமிழ் நாட்டில் தமிழே தெரியாமல் வாழும் தமிழர்களுக்கும் அயல் மாநிலத்தவர்களுக்கும் தமிழ் கற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு முதற்கட்டமாகப் பொறியியல் கல்லூரிகளும நிகர் நிலைப் பல்கலைக்கழகங்களும் நடத்துவோர் தங்கள் நிறுவனங்களில் பயில்வோர் தமிழில் சான்றிதழ், பட்டயம் பெறும் வகையில் தமிழ்ப் பயிற்சி அளிக்க வேண்டும். திரு விசுவநாதன் தன் நிறுவனத்தில் முதலில் இதைத் தொடக்கி வைக்க வேண்டும.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
4/6/2010 2:53:00 AM