பெருந்தொடரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெருந்தொடரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

துபாய்: வேட்டி அணிந்து சென்றவருக்குப் பெருந்தொடரியில் தடை

துபாய்: வேட்டி அணிந்து சென்றவருக்குப்  பெருந்தொடரியில் தடை
துபாய்: வேட்டி அணிந்து சென்ற இந்தியருக்கு மெட்ரோ ரெயிலில் பயணிக்க அனுமதி மறுப்பு
அபுதாபி, ஆக. 4-

வேட்டி அணிந்து சென்ற இந்தியரை மெட்ரோ ரெயிலில் பயணிக்க விடாமல் துபாய் போலீசார் தடுத்த சம்பவம் அங்கு வாழும் இந்தியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

துபாயில் வசிக்கும் 67 வயது முதியவர் தனது மகளுடன் அங்குள்ள எடிசலட் மெட்ரோ ரெயில் நிலையம் சென்றார்.

பயணச் சீட்டை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்த அவரை காவலுக்கு நின்ற போலீஸ்காரர் தடுத்து நிறுத்தினார்.

இதைப்போன்ற உடைகளுடன் ரெயிலில் பயணிக்க அனுமதிக்க முடியாது என்று கூறிய அவர், அந்த முதியவரின் மகளையும் வெளியே விரட்ட தொடங்கினார்.

வேட்டி எங்களின் பாரம்பரிய உடை. இதே உடையுடன் எனது தந்தை பலமுறை மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளார் என்று அவரது மகள் மதுமிதா விளக்கிக் கூறியும் காதில் வாங்க மறுத்த அந்த போலீஸ்காரர் அவர்களை விரட்டியடிப்பதிலேயே குறியாக இருந்துள்ளார்.

இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதை அடுத்து துபாய் மெட்ரோ ரெயில்வே இயக்குனர் ரமதான் அப்துல்லா இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மெட்ரோ ரெயிலில் பயணிப்பதற்கு எவ்வகை ஆடை கட்டுப்பாடுகளையும் நாங்கள் விதிக்கவில்லை. உடலை மறைக்கும் மரியாதையான ஆடையுடன் யார் வேண்டுமானாலும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்யலாம்.

தற்போது நடந்துள்ள சம்பவம் எனக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்த போலீஸ்காரர் வேட்டியுடன் வந்த நபரை தடுத்து நிறுத்தியது அவரது தனிப்பட்ட மனநிலையைதான் காட்டுகிறது. இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர் எங்களிடம் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.