புதுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

இராவணகாவியச் சொற்பொழிவு & பேரறிஞர் அண்ணா , தந்தை பெரியார் படத்திறப்பு, புதுவை

அகரமுதல

புரட்டாசி 14, 2049 ஞாயிறு 30.09.2018

மாலை 5.00 முதல் இரவு 8.00 வரை

புதுவைத் தமிழ்ச்சங்கம்

படத்திறப்பு :பேரறிஞர் அண்ணா & தந்தை பெரியார்
இராவணகாவியச் சொற்பொழிவு 10 :

பொழிவாளர்:  முனைவர் க.தமிழமல்லன்


– பகுத்தறிவாளர் கழகம்,  புதுவை தமிழ்நாடு

செவ்வாய், 15 மே, 2018

புதுவையில் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-3



புதுவையில் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-3

புதுவைத் தமிழகம் இணைந்த பகுத்தறிவாளர் கழகம் புலவர் குழந்தை இயற்றிய இராவண காவியம் என்னும் இலக்கியம் பற்றிய தொடர்சொற்பொழிவை முனைவர் க.தமிழமல்லன் ஆற்றி வருகிறார்.
சித்திரை 30, 2049  / 13.5.2018 அதன் மூன்றாவது சொற்பொழிவில் இராவணகாவியத்தின் இரண்டாம் காண்டத்தில் அமைந்துள்ள படலங்களின் பொருள்பற்றித் தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் உரையாற்றினார்.
 புதுவைத் தமிழ்ச்சங்க அரங்கில் அந்நிகழ்ச்சி நடைபெற்றது. தலைவர் மு.ந.நடராசன் தலைமை தாங்கினார்.
 புதுவைத் திராவிடர் கழகத்தலைவர் சிவ. வீரமணி தொடர்சொற்பொழிவைத் தொடங்கி வைத்தார்.செயற்குழு உறுப்பினர் நெ.நடராசன் வரவேற்றுப் பேசினார். திக.வின் மண்டலத்தலைவர் அரசும் அவர் துணைவியார் தி.க.மகளிர் அணித்தலைவர் விலாசினிஆகியோரும் சிற்றுரையாற்றினர்
இறுதியில் நெ.நடராசன்  க.தமிழமல்லன் உரையப் பாராட்டி நன்றிகூறினார்
முனைவர் க. தமிழமல்லன் உரை