நார்வே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நார்வே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை வேண்டும்: நார்வே

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும்: நார்வே முன்னாள் மந்திரி வலியுறுத்தல்
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும்: நார்வே முன்னாள் மந்திரி வலியுறுத்தல்
கொழும்பு, ஆக. 13-

நார்வே நாட்டின் சர்வதேச மேம்பாட்டு துறையின் முன்னாள் மந்திரி எரிக் சோலைம். 2006ம் ஆண்டு இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையே சமாதானம் ஏற்பட முயற்சித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது பெரு முயற்சி தோல்வியில் முடிந்ததால் 2009ம் ஆண்டு நடந்த உள்நாட்டு உச்சக்கட்டப் போரில் விடுதலை புலிகள் இயக்கத்தை முற்றாக அழித்தொழித்து விட்டதாக இலங்கை அரசு கொக்கரித்து வருகிறது.

இந்நிலையில், இலங்கையின் இறுதிக்கட்ட போர் காலத்தின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எரிக் சோலைம் தற்போது வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக சீன ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், 'இலங்கையின் இறுதிக் கட்ட போரின் போது லட்சக் கணக்கானவர்கள் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். இந்த போர்க் குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் நடந்தேறி பல ஆண்டுகள் கடந்தும் சர்வதேச சமுதாயம் கண்களை மூடிக்கொண்டு போர் குற்றச்சாட்டுகளில் இருந்து இலங்கை தப்பித்துக்கொள்ள அனுமதித்து விடக்கூடாது.

இலங்கையில் நம்பகத்துக்குரிய ஜனநாயக முறை நிலவாததால் இதுதொடர்பாக விசாரணை நடத்த சர்வதேச சமுதாயம் முன்வர வேண்டும்.

அடுத்த மாதம் இலங்கை செல்லும் ஐ.நா. மனித உரிமை சபையின் உயர் ஆணையர் நவீண் பிள்ளை, இவ்விவகாரத்தில் இலங்கை அரசுக்கு அழுத்தமான செய்தியை பதிவு செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார்.

திங்கள், 4 பிப்ரவரி, 2013

நார்வேயில் தமிழ்ப்பெயர்ப்பலகை

(Norway Vs Tamilnadu )உங்கள் நண்பர்களை க் கண்டிப்பாக இதில் இணைக்கவும் (Tag) நண்பர்களே........ அனைவரும் சேர்ந்து இழுத்தால் தான் தேர் நகரும்.... வெறும் பதிவாக போய்விடகூடாது என்று தான் கூறுகிறேன்.
 

புதன், 5 டிசம்பர், 2012

நார்வேயில் ஆந்திர வாழ்விணையருக்கு ஒன்றரை ஆண்டு ச் சிறை

மகனைத் தண்டித்த பெற்றோர்க்குத் தண்டனை  சரிதான். ஆனால்,  பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்றொழிக்கும் துணை நிற்பவர்களுக்கும் என்ன  தண்டனை? யார் வழங்குவது? நார்வே ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக மனித நேய அடிப்படையில் குரல் கொடுத்து இனப்படுகொலையாளர்களுக்குத் தண்டனை வாங்கித் தரலாமே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நார்வேயில் ஆந்திர த் தம்பதிக்கு ஒன்றரை ஆண்டு ச் சிறை


ஆசுலோ :நார்வே நாட்டில், மகனை கண்டித்ததற்காக, கைது செய்யப்பட்ட, சிறுவனின் தந்தைக்கு , ஒன்றரை ஆண்டு சிறை தண்டனையும், தாய்க்கு 15 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்தை சேர்ந்தவர் சந்திரசேகர்; நார்வே நாட்டில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிகிறார். இவரது மனைவி அனுபமா. இவர்களது ஏழு வயது மகன், ஆஸ்லோ நகர் பள்ளியில் படிக்கிறான். சமீபத்தில் இவர்களது மகன், பள்ளியில், பேன்ட்டிலேயே, சிறுநீர் கழித்து ஈரமாக்கிக் கொண்டான். இதற்காக சந்திரசேகர், மகனை கண்டித்துள்ளார். மறுநாள், பள்ளியிலிருந்து ஒரு பொம்மையை எடுத்து வந்து விட்டான். இதனால் கோபமடைந்த சந்திரசேகர், "இது போன்று செய்தால், உன்னை, ஐதராபாத்துக்கு திருப்பி அனுப்பி விடுவேன்' என, மிரட்டியுள்ளார்.இந்த விஷயத்தை சிறுவன், தன் பள்ளி ஆசிரியையிடம் தெரிவித்துள்ளான். சிறுவனை, அவனது பெற்றோர் தொடர்ந்து கொடுமைப்படுத்துவதாக ஆசிரியை, போலீசில் புகார் செய்துள்ளார்.
சமீபத்தில், இந்தியா வந்த சந்திரசேகர் தம்பதியர், மகனை, ஐதராபாத்தில், உறவினர் வீட்டில் விட்டு சென்று விட்டனர்.நார்வே திரும்பிய, சந்திரசேகரையும், அவரது மனைவியையும், அந்நாட்டு, போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து நார்வே, போலீஸ் அதிகாரி குர்த் லிர் குறிப்பிடுகையில், ""சிறுவனின் உடலில், சூடு வைத்த காயமும், பெல்ட்டால் அடித்த தழும்பும் உள்ளது. இதை வைத்து பார்க்கும் போது, சந்திரசேகர் தம்பதியர், மகனை அதிகமாகவே கொடுமைப்படுத்தியது தெரியவந்துள்ளது. எனவே, தான் அவர்களை கைது செய்துள்ளோம்,'' என்றார்.

ஆஸ்லோ மாவட்ட கோர்ட்டில், ஆஜரான அரசு தரப்பு வக்கீல்கள், சந்திரசேகருக்கு, 18 மாத சிறை தண்டனையும், அனுபமாவுக்கு, 15 மாத சிறை தண்டனையும் அளிக்கும் படி பரிந்துரைத்தனர். இதனை ஏற்ற நீதிபதிகள், அரசு தரப்பினர் கோரிய தண்டனையை அளித்து தீர்ப்பு கூறினர்.

ஆஸ்லோ மாவட்ட கோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து, மேல் முறையீடு செய்வதற்கு, தூதரகத்தின் சார்பில், அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இந்திய வெளியுறவு அமைச்சகம் உறுதியளித்துள்ளது.