புதன், 23 பிப்ரவரி, 2011
கிருட்டிணகிரி எழுத்தாளருக்கு முதல் சிற்றிதழ் விருது
திங்கள், 21 டிசம்பர், 2009
நல்ல முயற்சிக்குப் பாராட்டுகள். ஆனால், தமிழ் மரபு அறக்கட்டளையினர் இதுவரை சமய இலக்கியச் சுவடிகளில் மட்டுமே மிகுதியும் கருத்து செலுத்தி வந்துள்ளனர். தமிழ்ப்பல்கலைக்கழகத்துடன் இணைந்த பின்னாவது தமிழ் நலம் சார்ந்தபணிகளை மேற் கொள்ள வேண்டும். மேலும் இன்றைய தாள்கள் அன்றைய ஓலைச் சுவடிகள். அனைத்து நூலகங்களிலும் உள்ள கடந்த நூற்றாண்டு மலர்கள் அனைத்தும் கருத்து மணம் வீசுவனவே. இப்போது வருவன போல் துதிபாடும் விளம்பர மலர்கள் அல்ல. ஆனால், நூலகங்களில் இடமில்லை என இவை யனைத்தும் பழைய தாள்கடைகளுக்குப் போய்க் கொண்டிருக்கின்றன. இவற்றையும் மறு பதிப்புகளைப் பாரராமல் மறைந்தொழியும் நூல்களையும் இத்திட்டத்தின் கீழ் மின்னாக்கம் செய்ய வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
12/21/2009 4:34:00 AM
ஞாயிறு, 12 ஜூலை, 2009
சனி, 4 ஜூலை, 2009
அம்பலத்திற்குக் கொண்டு வர வேண்டிய செய்திகளைக் கமுக்கமாகத் தெரிவிக்க சரியான வழிமுறை. இதன் படி நடவடிக்கை எடுத்தாலும் இவ்வமைப்பு தொடர்ந்தாலும் உள்ளபடியே பாராட்டிற்குரியது. சோழ மன்னன் மணி அடிக்கச் செய்து குறைகளைக் கேட்டறிந்தான். இன்றைக்கு வெளிப்படையாகக் குறைகளைத் தெரிவித்தால் தெரிவித்தவர் என்ன ஆவார் என்று தெரியாது. எனவே, கமுக்கமாகத்தான் (இரகசியமாகத்தான்) தெரிவிக்க முடியும். இதை உணர்ந்து தமிழறிஞர் வ.ஐ.சுப்பிரமணியனார் நினைவு நாளைக் கொண்டாடித் தொடங்கப்பட்டுள்ளதும் பொருத்தமான நிகழ்வாக உள்ளது. இதனைத் தமிழக அரசும் பின்பற்றலாம். ஆனால், பயன் இருக்காது. ஏனெனில் அரசிற்குத் தெரி்ந்தே பல முறைகேடுகள் அரங்கேறுகின்றன. அவ்வாறிருக்க குறைகளைக் களையாமல் , இன்னார் தெரிவித்து இருப்பார் என ஊகித்து அவரைப் பழிவாங்கும் போக்குதான் தொடரும். பல புதிய எண்ணங்களை நடைமுறைப் படுத்தும் துணைவேந்தர் எண்ணங்கள் எண்ணியாங்கு நிறைவேறட்டும்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
7/4/2009 2:44:00 AM