தமிழ்ப் பல்கலைக்கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்ப் பல்கலைக்கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 23 பிப்ரவரி, 2011

கிருட்டிணகிரி எழுத்தாளருக்கு முதல் சிற்றிதழ் விருது


பாராட்டுகள- விருதாளருக்கும் விருது வழங்கிய
தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கும்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
 < தமிழே விழி! தமிழா விழி! >
கிருஷ்ணகிரி எழுத்தாளருக்கு முதல் சிற்றிதழ் விருது


கிருஷ்ணகிரி, பிப்.22: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை சேர்ந்த எழுத்தாளர் மனோன்மணி (எ) சுகவன முருகனுக்கு முதல் சிற்றிதழ் விருது வழங்கப்பட்டுள்ளது. விருதுடன் ரூ.1.5 லட்சம் ரொக்கம், சான்றிதழ் வழங்கி தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் கெüரவித்துள்ளது.காவேரிப்பட்டணம் அருகே உள்ள சவுளூர் நடுநிலைப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் சுகவன முருகன். 30 ஆண்டுகளாக கவிதை, கட்டுரைகளை எழுதி வரும் இவர், வரலாற்று ஆய்வாளரும்கூட."புது எழுத்து' என்னும் சிற்றிதழை, மனோன்மணி என்ற புனைபெயரில் நடத்தி வருகிறார். மறைந்த மலையாள கவிஞர் ஏ.அய்யப்பனின் கதைத் தொகுப்பை முதலில் தமிழில் கொண்டுவந்தது இவரது புது எழுத்து. தகடூர் என்னும் அரிய வரலாற்று நூலை மீள்பதிப்பு செய்ததும், கிருஷ்ணதேவராயர் காலத்தில் நூனிஸ் என்ற போர்ச்சுகீசிய வியாபாரி தமிழகத்துக்கு வருகை புரிந்ததை பயண நூலக வெளிட்டுள்ளதும் இவரது புது எழுத்து பத்திரிகை. கிருஷ்ணகிரி காசுகள் என்ற வரலாற்று நூல் இவரது முதல் நூலாகும்.தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் நடப்பாண்டு முதல் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் சிற்றிதழுக்கான விருதை ஏற்படுத்தியுள்ளது. இது ரூ.1.5 லட்சம் ரொக்கப் பரிசும், பாராட்டு பத்திரமும் அடங்கியது.நோபல் பரிசு பெற்ற "ஒரு நூற்றாண்டு காலத்தனிமை' என்னும் நாவல், தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு புது எழுத்து சிற்றிதழில் தொடராக வெளிவந்து கொண்டிருக்கிறது. இப்பணியைப் பாராட்டி சிற்றிதழ்களுக்கான விருதுக்காக புது எழுத்து தேர்வு செய்யப்பட்டது.தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கடந்த 19-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் அதன் துணைவேந்தர் ம.இராசேந்திரன், மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி, அமைச்சர் உபயத்துல்லா ஆகியோர் முன்னிலையில் எழுத்தாளர் மனோன்மணிக்கு விருது வழங்கப்பட்டது.முதல் சிற்றிதழ் விருது பெற்றுள்ள மனோன்மணி, பரிசுத் தொகையுடன் பாராட்டுப் பத்திரமும் வழங்கி கெüரவிக்கப்பட்டார். 
 

திங்கள், 21 டிசம்பர், 2009

தமிழ் ஓலைச் ​சுவடிகளைத் திரட்டி,​​ மின் படியாக்கம் செய்ய இங்கிலாந்து அறக்கட்டளையுடன் தமிழ்ப் பல்கலை.​ ஒப்பந்தம்



தஞ்சாவூர், ​​ டிச.​ 19:​ தமிழ் ஓலைச்சுவடிகளைத் திரட்டுதல் மற்றும் மின் படியாக்கம் செய்யும் பணிக்காக இங்கிலாந்து தமிழ் மரபு அறக்கட்டளையுடன் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.​ ​ தமிழகத்தில் மட்டும் 548134 தமிழ்,​​ தெலுங்கு,​​ மோடி உள்ளிட்ட எழுத்துச் சுவடிகள் இருப்பதாக மத்திய அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது.​ இதில் தூத்துக்குடி,​​ கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிகளவில் ஓலைச் சுவடிகள் உள்ளன.​ ​ தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் உள்ள ஓலைச் சுவடிகளைப் பெற்று அதிலிருந்து தமிழ் ஓலைச் சுவடிகளை மின்படியாக்கம் செய்து பாதுகாப்பதற்கான பணிகளை தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடங்கியது.​ இப்பணிக்காக தமிழக அரசு முதல் கட்டமாக ரூ.​ 20 லட்சம் நிதியுதவி அளித்தது.​ நிகழாண்டு தமிழக முதல்வர் மு.​ கருணாநிதியின் பிறந்தநாளில் இருந்து தமிழ் ஓலைச் சுவடிகளைத் திரட்டும் பணி தொடங்கியது.​ ​ ஆனால்,​​ பொதுமக்களின் தயக்கத்தால் திட்டமிட்டபடி ஓலைச் சுவடிகளை திரட்டுவதில் சுணக்கம் ஏற்பட்டது.​ பெரம்பலூர் உள்ளிட்ட சில ஊர்களில் மட்டுமே குறிப்பிட்ட ஓலைச் சுவடிகளை மக்களிடமிருந்து பெற முடிந்தது.​ இதையடுத்து ஓலைச்சுவடி வைத்துள்ளவர்களின் வீடுகளுக்கே மடிக் கணினி,​​ ஸ்கேனருடன் சென்று,​​ ​ ஓலைச் சுவடிகளை மின் படியாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.​ ​ இப்பணிகளை இங்கிலாந்து நாட்டில் உள்ள தமிழ் மரபு அறக்கட்டளை,​​ அயல் நாடுகளில் உள்ள இப்பணிகளில் அனுபவம் வாய்ந்த தமிழர்களைக் கொண்டு இந்த ஓலைச்சுவடிகளை மின்னாக்ககம் செய்யவும்,​​ வகைப்படுத்தவும் உதவ முன்வந்தது.​ ​ அதன்படி தமிழ் ஓலைச் சுவடிகளைத் திரட்டி அவற்றை ​ மின் படியாக்கம் செய்யும் பணிக்காக வெள்ளிக்கிழமை நடைபெற்ற இப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இங்கிலாந்து நாட்டு தமிழ் மரபு அறக்கட்டளை துணைத் தலைவர் சுபாசினி,​​ தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.​ ராசேந்திரன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.பல்கலை. ​ பதிவாளர் ஆ.​ கார்த்திகேயன்,​​ சுவடிப் புலத் தலைவர் வே.இரா.​ மாதவன்,​​ பேராசிரியர்கள் ந.​ அதியமான்,​​ பா.​ ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துக்கள்

நல்ல முயற்சிக்குப் பாராட்டுகள். ஆனால், தமிழ் மரபு அறக்கட்டளையினர் இதுவரை சமய இலக்கியச் சுவடிகளில் மட்டுமே மிகுதியும் கருத்து செலுத்தி வந்துள்ளனர். தமிழ்ப்பல்கலைக்கழகத்துடன் இணைந்த பின்னாவது தமிழ் நலம் சார்ந்தபணிகளை மேற் கொள்ள வேண்டும். மேலும் இன்றைய தாள்கள் அன்றைய ஓலைச் சுவடிகள். அனைத்து நூலகங்களிலும் உள்ள கடந்த நூற்றாண்டு மலர்கள் அனைத்தும் கருத்து மணம் வீசுவனவே. இப்போது வருவன போல் துதிபாடும் விளம்பர மலர்கள் அல்ல. ஆனால், நூலகங்களில் இடமில்லை என இவை யனைத்தும் பழைய தாள்கடைகளுக்குப் போய்க் கொண்டிருக்கின்றன. இவற்றையும் மறு பதிப்புகளைப் பாரராமல் மறைந்தொழியும் நூல்களையும் இத்திட்டத்தின் கீழ் மின்னாக்கம் செய்ய வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/21/2009 4:34:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

ஞாயிறு, 12 ஜூலை, 2009

தமிழின் வறுமையை தன் வறுமையாக கருதியவர் வ.அய். சுப்பிரமணியம்



தஞ்சாவூர், ஜூலை 11: தமிழின் வறுமையை தன் வறுமையாகக் கருதி, பலரிடம் நிதி கேட்டு தமிழை வளர்த்தவர் வ.அய். சுப்பிரமணியம் என்றார் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம. ராசேந்திரன். மறைந்த துணைவேந்தர் வ.அய். சுப்பிரமணியத்தின் அஸ்தி புதைக்கும் நிகழ்ச்சி, பல்கலைக்கழகத்தின் "அம்பலம்' வளாகச் செய்தி மடல் வெளியீட்டு நிகழ்ச்சி ஆகியவை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது: "தமிழில் புலமை பெற்றிருத்தல், வீட்டு வறுமையை வெளிப்படுத்திப் பொருள் கேட்டல், அவமதிப்பு நேரிட்டால் பட்டினிக் கிடத்தல் ஆகிய மூன்று பண்புகளிலும் புலவர்களை அடக்கிவிட முடியும். இந்த மூன்று பண்புகளையும் கொண்டிருந்தவர் வ.அய். சுப்பிரமணியம். அவரது ஆழ்ந்த மொழித் திறனுக்கு எடுத்துக்காட்டாக, வியாசர் எழுதிய மகாபாரதத்தில் தமிழ் இலக்கியங்களுக்கு செல்வாக்கு இருக்கிறதா, இல்லையா என்று அவர் கட்டுரை எழுதியதைக் குறிப்பிடலாம். வ.அய். சுப்பிரமணியத்தின் எண்ணங்கள் நிறைவேறும் வகையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்துச் செல்லும்' என்றார் ம. ராசேந்திரன். மேலும், வ.அய். சுப்பிரமணியம் பெயரில் பல்கலைக்கழக ஊழியர்கள், மாணவர்கள் சார்பில் தொடங்கப்படும் அறக்கட்டளைக்கு, ஊழியர்களின் ஒரு நாள் ஊதியமாக வசூலிக்கப்பட்ட ரூ. 2,01,700-க்கான காசோலையை துணைவேந்தரிடம் வழங்கினார் மத்திய இணையமைச்சர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம். "வ.அய். சுப்பிரமணியம் சிலையை நிறுவ வேண்டும்': தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரான மறைந்த வ.அய். சுப்பிரமணியத்தின் திருவுருவச் சிலையை, பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவ வேண்டும் என்று நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதித் துறை இணையமைச்சர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம் தெரிவித்தார். "தமிழறிஞருக்கான அனைத்துத் தகுதிகளையும் கொண்டிருந்தவர் வ.அய். சுப்பிரமணியம். மற்ற துணைவேந்தர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவரே முதன்மையாகத் தெரிகிறார். இந்தப் பல்கலைக்கழகத்தின் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். ஓய்வு பெற்ற பேராசிரியர்களைக் கொண்டு தமிழ் வளர்ச்சிப் பணியில் ஈடுபட்டவர் அவர். இந்தப் பல்கலைக்கழகத்தின் தற்போதைய வளர்ச்சிக்கு அவரே அடிப்படை. வ.அய். சுப்பிரமணியத்தை நினைவுகூரும் வகையில் பல்கலை. வளாகத்தில் அவரது மார்பளவு சிலையையோ, முழு உருவச் சிலையையோ நிறுவ வேண்டும். சிலை நிறுவும் பணியில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஈடுபடும்போது, அதற்கு தஞ்சாவூர் தமிழ்தஞ்சை தமிழ்ப் பல்கலை.யில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், "அம்பலம்' அமைப்பின் வளாகச் செய்தி மடலை மத்திய நிதித் துறை இணையமைச்சர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம் வெளியிட, அதைப் பெறுகிறார் மூத்த வழக்குரைஞர் தஞ்சை அ. ராமமூர்த்தி. உடன் துணைவேந்தர் ம. ராசேந்திரன் (இடமிரு

சனி, 4 ஜூலை, 2009

தஞ்சை தமிழ்ப் பல்கலை.யில் "அம்பலம்'
தினமணி


தஞ்சாவூர், ஜூலை 3: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் "அம்பலம்' என்னும் புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. சமூகத்தில் நிலவும் அநீதிகளை வெளிப்படுத்துவதற்காக இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் ம. ராசேந்திரன் கூறியது: இன்றைய சமூகத்தில் நிகழும் அநீதிகளைக் கண்டும் காணாமல் போகும் மனித சமுதாயத்தை ஒழுங்குபடுத்தும் நிலை பல்கலைக்கழகத்துக்கு ஏற்பட்டுள்ளது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நிகழ் கல்வியாண்டின் தொடக்க நாளான புதன்கிழமை (ஜூலை 1), இந்தப் பல்கலை.யின் முதல் துணைவேந்தரான மறைந்த வ.அய். சுப்பிரமணியத்தை நினைவு கூரும் வகையில், "அம்பலம்' என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. படிப்புடன், பாடத் திட்டத்துடன், பட்டத்துடன் சுயநலமின்றி வாழவும், ஊக்கப்படுத்தவும் தாங்கள் வாழும் பகுதியில் அகத்தில் நேர்மை, புறத்தில் தூய்மை, அறிவில் மேன்மை ஆகியவற்றைப் போற்றவும், காக்கவும், வளர்க்கவும், பின்பற்றவும், புறம்பானவற்றை நீக்கவும் இந்த அமைப்பின் மூலம் தமிழ்ப் பல்கலைக்கழகம் முயற்சி மேற்கொண்டுள்ளது. அநீதிகளுக்கு அடிபணியும் கட்டாயம் ஏற்படும் போது தட்டிக் கேட்கும் தகுதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும். இதில் ஏற்படும் இடர்பாடுகளில் தமிழ்ப் பல்கலை. துணை நிற்கும். இந்த அமைப்பு மூலம் பல்கலைக்கழகக் குடும்பத்தினருக்கு குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவை பெறவும் உதவி செய்யப்படும். துணைவேந்தர் அலுவலகம் அருகில் தன்னெஞ்சறிவது என்ற வாசகத்துடன் ஒரு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் பல்கலை.யில் நிலவும் குறைகளைக் கடிதமாக எழுதிப் போடலாம். கைபேசி மூலம் குறுந்தகவல் அனுப்பலாம். அனுப்பியவர் பற்றிய தகவல் ஏதும் இல்லாத கடிதமாக இருந்தாலும், அந்தக் கடிதத்தின் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாணவர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் மூலம் தொடங்கப்பட்டுள்ள இந்த அமைப்பு பல்கலைக்கழகத்தில் உள்ள நிறை, குறைகளைச் சுட்டிக் காட்டும். அதோடு, வெளியிடங்ளிலும் இந்த அமைப்பின் நோக்கத்தை பரப்புவதாக அமைப்பைச் சேர்ந்தவர்கள் உறுதியளித்துள்ளனர். அம்பலம் என்பது வெளிப்படையாக இருத்தல், எந்த ஒன்றையும் வெளிப்படுத்துதல், அதிகாரத்துடன் இருத்தல் ஆகும். இந்த மூன்றும் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும் என்பதே அமைப்பின் நோக்கமாகும். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் வ.அய். சுப்பிரமணியத்தின் விருப்பப்படி அவரது அஸ்தி பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து மரியாதை செய்யப்படுவதுடன், நிகழ் கல்வியாண்டில் அவரது எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் உறுதி ஏற்று, கல்விப் பணியைத் தொடர உள்ளோம் என்றார் ராசேந்திரன்.
கருத்துக்கள்

அம்பலத்திற்குக் கொண்டு வர வேண்டிய செய்திகளைக் கமுக்கமாகத் தெரிவிக்க சரியான வழிமுறை. இதன் படி நடவடிக்கை எடுத்தாலும் இவ்வமைப்பு தொடர்ந்தாலும் உள்ளபடியே பாராட்டிற்குரியது. சோழ மன்னன் மணி அடிக்கச் செய்து குறைகளைக் கேட்டறிந்தான். இன்றைக்கு வெளிப்படையாகக் குறைகளைத் தெரிவித்தால் தெரிவித்தவர் என்ன ஆவார் என்று தெரியாது. எனவே, கமுக்கமாகத்தான் (இரகசியமாகத்தான்) தெரிவிக்க முடியும். இதை உணர்ந்து தமிழறிஞர் வ.ஐ.சுப்பிரமணியனார் நினைவு நாளைக் கொண்டாடித் தொடங்கப்பட்டுள்ளதும் பொருத்தமான நிகழ்வாக உள்ளது. இதனைத் தமிழக அரசும் பின்பற்றலாம். ஆனால், பயன் இருக்காது. ஏனெனில் அரசிற்குத் தெரி்ந்தே பல முறைகேடுகள் அரங்கேறுகின்றன. அவ்வாறிருக்க குறைகளைக் களையாமல் , இன்னார் தெரிவித்து இருப்பார் என ஊகித்து அவரைப் பழிவாங்கும் போக்குதான் தொடரும். பல புதிய எண்ணங்களை நடைமுறைப் படுத்தும் துணைவேந்தர் எண்ணங்கள் எண்ணியாங்கு நிறைவேறட்டும்!


அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thilruvalluvan
7/4/2009 2:44:00 AM