சேமிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சேமிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 17 ஜனவரி, 2013

குழந்தைகளுக்குச் சேமிப்பைக் கற்றுக் கொடுங்கள்!


சொல்கிறார்கள்

குழந்தைகளுக்கு ச் சேமிப்பை ்றக் ள்!


பினான்சியல் பிளானர் பி.பத்மநாபன்: இன்றைய இளைய தலைமுறை, இ.எம்.ஐ., லேயே வாழ விரும்பும் தலைமுறையா மாறிக்கிட்டிருக்கு. 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் போது, இ.எம்.ஐ.,ல ஒரு பிளாட் வாங்குறாங்க. அடுத்து, சம்பளம், ஒரு லட்சம் ரூபாய் ஆகும் போது, அடுத்த, இ.எம்.ஐ., போட்டு, இன்னொரு பிளாட் வாங்குறாங்க. இவங்களுக்கு, பணத்தோட, "வேல்யூ'வும் தெரியறதில்லை; பொருளோட, "வேல்யூ'வும் தெரியறதில்லை. இதுக் கெல்லாம் முதன்மையான காரணம், பெத்தவங்க தான். உங்க குழந்தைக்கு, சின்ன வயசிலேயே, பணத்தை எப்படி சேமிக்கிறதுங்கிறதைக் கத்துக் கொடுங்க. அவங்க கேட்பதையெல்லாம் வாங்கித் தராதீங்க. வளர வளர, உங்க சம்பளத்தை, எந்த விஷயத்துக்கெல்லாம் செலவு செய்றீங்கன்னு சொல்லி, புரிய வைங்க. ஒரு அரசன்கிட்ட, புலவர் ஒருத்தர் வந்து, அரசனை புகழ்ந்து பாடறார். புலவரோட பாடல்ல மயங்கின அரசன், புலவர்கிட்ட, "என்ன வேணும்னாலும் கேளு; செய்றேன்'னு சொல்றார். புலவரோ, "சதுரங்க கட்டத்துல இருக்கிற கட்டங்கள் எத்தனை யோ, அத்தனை நெல் மணிகள் கொடுத்தா போதும்'னு கேட்கிறார். அரசரும், கொடுக்க ஏற்பாடு செய்கிறார். இரண்டாவது கட்டத்துக்கு, இரண்டோட மடங்கான, நாலு நெல்மணிகளை கேட்கிறார். மூன்றாவது கட்டத்துக்கு, நாலோட மடங்கான, பதினாறு நெல்மணிகளை கேட்கிறார். இப்படியே எண்ணிக்கை அதிகமாயிட்டே போகுது. 64வது கட்டத்துக்கு வந்த போது, நாட்டிலேயே அவ்வளவு நெல் இல்லைங்கிற நிலை ஏற்படுது. சேமிப்பு எப்படி பெருகும்கறதுக்கு, உதாரணமா, பொருளாதார நிபுணர்கள் சொல்ற கதை இது. எல்லா பெற்றோரும் தங்களோட குழந்தைகளுக்கு கட்டாயம் சொல்ல வேண்டிய கதையும் கூட! 

வெள்ளி, 23 நவம்பர், 2012

கூடங்குளம் அணுக்கழிவுகள் கோலார் தங்கவயலில் சேமிப்பு?: கடும் எதிர்ப்பு

கூடங்குளம் அணுக்கழிவுகள் கோலார் தங்கவயலில் சேமிப்பு?: கருநாடகத்தில் கடும் எதிர்ப்பு

First Published : 22 November 2012 03:18 PM IST
கர்நாடக மாநிலத்தில் உள்ள மூடப்பட்டுள்ள கோலார் தங்க வயலில் கூடங்குளம் அணுவுலைக் கழிவுகளைச் சேமிக்கவுள்ளதாகக் கூறப்பட்டதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கோலார் பகுதியில் நாளை பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின்போது, மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் நரிமன் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது அவர், கோலார் தங்கவயலில் உள்ள தங்கச் சுரங்கங்கள் பல ஆண்டுகளுக்கு முன்னரே மூடப்பட்டு விட்டன. அவற்றில் கூடங்குளம் அணுக் கழிவுகளை சேமித்து வைக்க அரசு முடிவு செய்துள்ளது என்று பதிலளித்தார்.
இந்த பதிலால் அச்சமடைந்த மக்கள், தமிழகத்தில் இருந்து அணுக் கழிவுகளை கர்நாடகம் கொண்டு வர அனுமதிக்கக் கூடாது என்று தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். மேலும், கோலார் தங்கவயலில் நாளை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு அங்குள்ள வர்த்தக நிறுவனங்கள், சுரங்கத் தொழிலாளர்கள், அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.