சருக்கரை நோய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சருக்கரை நோய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 14 அக்டோபர், 2013

நீரிழிவு நோய்க்குச் சிறந்த உணவுகள்

சருக்கரை நோயை க் கட்டுப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்

இன்றைய வாழ்க்கை முறையில் நாம் பார்க்கும் முக்கிய நோய்களில் ஒன்றான சர்க்கரை நோய் இன்றைய தலைமுறையினரை பாடாய்படுத்தி வருகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை குறிப்பிட்ட அளவு இல்லாமல், கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் இந்த பாதிப்பு ஏற்படும்.

ஆனால் இதனை உணவு முறை கொண்டும் கட்டுப்படுத்த முடியும். சரியான உணவு வகைகளை உட்கொண்டால், சர்க்கரை நோய் தீவிரத்தின் அளவை கட்டுப்படுத்தலாம். சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க, எதை சாப்பிடலாம், எதை சாப்பிட கூடாது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்று.

சர்க்கரை நோய் இல்லையென்றாலும் சரி அல்லது சர்க்கரையின் அளவு எல்லையில் இருந்தாலும் சரி அல்லது பரம்பரை வியாதி என்றாலும் சரி, சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடுவதோடு தவிர்க்கவும் செய்யலாம்.

இந்தியர்களுக்கு அதற்கான உணவில் கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரதம் 60:20:20 விகிதம் இருக்க வேண்டும். இப்போது சர்க்கரை நோய்க்கான மருத்துவர் மற்றும் உணவியல் வல்லுநர்கள், சர்க்கரை நோயை கட்டுப்படுத்த பரிந்துரைக்கும் முதன்மையான 15 வகை உணவுகளை பற்றி பார்ப்போம்.

1.வெந்தயம்: ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை, 100 மி.லி. தண்ணீரில் இரவில் தூங்கும் போது ஊற வைத்து விட்டு, மறு நாள் அந்த வெந்தயத்தை சாப்பிட்டால், உடலில் சர்க்கரை அளவானது கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

2.தக்காளி: நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த, உப்பு மற்றும் மிளகு கலந்த தக்காளி சாற்றை, தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்

3.பாதாம்: தினமும் தண்ணீரில் ஊற வைத்த 6 பாதாம் பருப்பை சாப்பிட்டால், சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்கும்.

4.தானிய வகைகள்: தானியம், ஓட்ஸ், கொண்டை கடலை மாவு மற்றும் இதர நார்ச்சத்து அடங் கிய உணவுகளை அன்றாடம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பாஸ்தா அல்லது நூடுல்ஸ் சாப்பிட தோன்றினால், அதனு டன் காய்கறி அல்லது முளைத்த பயறுகளை சேர்த்துக் கொள் ளவும்.

5.பால்: பாலில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தின் கலவை சரியான அளவில் இருக்கும். அதனால் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும். எனவே தினமும் இரண்டு முறை பால் குடிப்பது நல்லது.

6.காய்கறிகள்: அதிக நார்ச்சத்துள்ள காய்கறிகளான பட்டாணி, பீன்ஸ், ப்ராக்கோலி மற்றும் கீரை வகைகளை உணவோடு சேர்க்க வேண்டும். இந்த வகையான காய்கறிகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும்.

7.பருப்பு வகைகள்: பருப்பு வகைகள் மற்றும் முளைத்த பயறுகளை உணவோடு சேர்த்து கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் கலந்த மற்ற உணவுகளை விட, பருப்பு வகைகளால் ரத்த குளுக்கோஸ் தாக்கம் குறைவாகவே இருக்கும். அதனால் இது முக்கிய உணவாக கருதப்படுகிறது.

8.ஒமேகா3: ஒமேகா3 மற்றும் மோனோ அன்சாச்சுரேட் கொழுப்பினி போன்ற நல்ல கொழுப்புகள் கலந்த உணவை உட்கொண்டால் உடலுக்கு நல்லது. கனோலா எண்ணெய், சணல் எண்ணெய், கொழுப்பு மீன் மற்றும் பருப்பு வகைகள் போன்றவற்றில் இயற்கையாகவே இந்த கொழுப்புகள் அடங்கியுள்ளன. மேலும் இதில் கொழுப்பு அளவு குறைவாகவே இருக்கும்.

9.பழங்கள்: அதிக நார்ச்சத்துள்ள பழங்களான பப்பாளி, ஆரஞ்சு, பேரிக்காய் மற்றும் கொய்யாப் பழத்தை சாப்பிட வேண்டும். ஆனால் மாம்பழம், வாழைப்பழம் மற்றும் திராட்சை போன்ற பழங்களில் சர்க்கரையின் அளவு கூடுதலாக இருக்கிறது, அதனால் இதை அதிகமாக உண்ணக் கூடாது.

10.உணவு முறை: அதிகமாக உண்ணுவதால் ஒருவரின் உடலில் உள்ள ரத்த சர்க்கரையின் அளவு கூடுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் சிறிய அளவு உணவை போதிய இடைவேளையில் அடிக்கடி உண்ணவும். இது சர்க்கரை அளவு அதிகமாவதையும், கீழே இறங்காமலும் தடுக்கும். வேண்டுமெனில் நடுவே நொறுக்குத் தீனியாக பழங்கள், நார்ச்சத்துள்ள பிஸ்கட், மோர், தயிர், காய்கறியுடன் கலந்த உப்புமா போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

11.முக்கியமான உணவுகள்: சர்க்கரை நோய் உள்ளவர்கள் குறைவான கார்போஹைட்ரேட், அதிகமான நார்ச்சத்து, தேவையான அளவு புரதம், வைட்டமின் மற்றும் கனிமங்கள் கலந்த உணவை உண்ண வேண்டும். இனிப்பு மற்றும் கொழுப்பு அதிகமுள்ள பண்டங்களை உண்ணக் கூடாது. போதிய இடைவேளையில் (5 வேளை) சிறிய அளவில் உணவை உட்கொள்ள வேண்டும்.

12.இயற்கை இனிப்பு: சர்க்கரை நோயாளிகள், கேக் மற்றும் இனிப்பு பண்டங்களில் சர்க்கரைக்கு பதிலாக தேவையான அளவு இயற்கை இனிப்பான தேனை கலந்து கொள்ளலாம்.

13.தண்ணீர் மற்றும் மதுபானம்: நிறைய தண்ணீர், காய்கறி மற்றும் பழச்சாறுகளை பருகவும். மேலும் மதுபானம் குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

14.அசைவ உணவு: அசைவ உணவுகளில் மீன் அல்லது சிக்கனை உண்ணலாம். ஆனால் ஆடு மற்றும் மாட்டு இறைச்சியில் அதிக அளவில் தேங்கிய கொழுப்பு இருப்பதால், அதனை தவிர்க்க வேண்டும். மேலும் அதிக கொழுப்புச்சத்து உள்ளவர்கள், முட்டையின் மஞ்சள் கரு, ஆடு மற்றும் மாட்டு இறைச்சியை தவிர்க்க வேண்டும்.

15.உணவு பழக்கம்: இந்தியர்களுக்கான சர்க்கரை நோய் கட்டுப்பாடு உணவில் கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்புச் சத்து அடங்கியிருக்க வேண்டும். எப்போதும் சமநிலையான உணவு, உடல் ஆரோக்கியத்திற்கு பக்கபலமாக நிற்கும்.

மேற்காணும் உணவுப் பழக்கத்தை தொடர்ந்து கையாண்டு வந்தாலே சர்க்கரை நோயின் பிடியில் இருந்து 100 சதவீதம் தப்பலாம். சர்க்கரை நோய் கண்டவர்கள் தாங்களாகவே மருந்து கடைகளில் மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதை தவிர்த்து முறையான சிகிச்சையினை டாக்டரிடம் மட்டுமே எடுத்துக்கொள்வது சாலச் சிறந்தது. சர்க்கரை நோயற்ற வாழ்வை பெற முயன்ற அளவு முயற்சிப்போம்.

புதன், 14 நவம்பர், 2012

நீரிழிவு நோய்க்கு அழுத்தூசி மருத்துவம்

சருக்கரை நோய்க்கு அழுத்தூசி மருத்துவம் (அக்குபஞ்சர் சிகிச்சை)

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய நாடு பல துறைகளில் முன்னேற்றம் அடைந்தபோதிலும் உடல் நலத்தில் இந்தியர்கள் சரியான முன்னேற்றம் அடைந்துள்ளனரா என்று பார்த்தால் அது ஒரு பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது.
குறிப்பாக இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 56-ல் இருந்து 63 வயதாக உயர்ந்திட்ட போதிலும் என்ன பயன்? காரணம் சக்கரை நோய், இதயநோய், சிறுநீரக நோய், பக்கவாதம் மற்றும் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிப்புக்குள்ளானோர், இன்றைக்கு உள்ள மருந்து வகைகள் மூலம் தங்கள் வாழ்நாள்களை நீட்டித்துக் கொள்ளலாமே ஒழிய பயனுள்ளதாய் வாழ முடியாது. கடந்த 10 ஆண்டுகளில், மற்ற நாடுகளைவிட இந்தியாவில்
சர்க்கரை நோய் அபாயகரமாக அதிகரித்துள்ளதை உலக சுகாதார நிறுவனம் (டபிள்யு.எச்.ஓ.) அறிவித்துள்ளது.மற்ற நோய்களைவிட சர்க்கரை நோய் அதிக தீங்கிழைக்கும் நோயாக இருக்கிறது. பிற நோய்களால் ஒன்று அல்லது இரண்டு உறுப்புகள் மட்டுமே பாதிக்கப்படும்.
ஆனால், சர்க்கரை நோய் என்பது இரத்தத்தில் உள்ள பிரச்னை என்பதால் மூளை, கண், இருதயம், சிறுநீரகம், நரம்பு மண்டலம் என அனைத்தையும் உறுப்புகளையும் பாதிப்பதால் மனித குலத்தை அச்சுறுத்தும் நோயாக உள்ளது. ஏனெனில் சர்க்கரை நோய் ஏற்பட்டு விட்டால் வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டியுள்ளது.
2020-ம் ஆண்டில் உலகில் உள்ள சர்க்கரை நோயாளிகளில் 5-ல் ஒருவர் இந்தியராக இருப்பர் என்று உலக சுகாதார நிறுவனம் கணித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஒரு சராசரி இந்தியனின் வாழ்க்கை முறைகளில் பல மாறுதல்கள் ஏற்பட்டதுதான் இதற்கான காரணம். எல்லாவற்றுக்கும் இயந்திரத்தின் உதவி, உடற்பயிற்சியின்மை, உணவு முறையில் மாற்றம், இரவு கண்விழிப்பு, எதற்கெடுத்தாலும் அவசரம், பரபரப்பு ஆகியவற்றை முக்கியமாகக் குறிப்பிடலாம்.
அக்குபஞ்சர் மருத்துவ முறையில் சீனர்கள் 3000 ஆண்டுகளுக்கு முன்பே தங்களது குறிப்பில் எழுதி வைத்துள்ளனர். அதன்படி நாங்கள் சிகிச்சையளிக்கிறோம். எங்களது மருத்துவமனையில் இதுவரை 1000 - 1500 சர்க்கரை நோயாளிகள் நிவாரணம் பெற்று,மற்றவர்களைப் போலவே எந்த மருந்தோ, உணவுக் கட்டுப்பாடோ இன்றி வாழ்கின்றனர்.

சிகிச்சையின் பலன் என்ன? சர்க்கரை நோயாளிக்கு மாத்திரையின் அளவை சற்று மாற்றியமைத்து, அவர்களது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை 160 மில்லிகிராம் அளவுக்குக் கொண்டு வருவோம். பிறகு,நாள் ஒன்றுக்கு 40 நிமிஷங்கள் சிகிச்சை என 20 நாள்கள் செய்து கொண்டு, மாத்திரைகளை படிப்படியாக குறைத்து ஒரு காலகட்டத்தில் அவற்றை முழுமையாக நிறுத்திவிடலாம்.