சந்திரகுமார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சந்திரகுமார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 7 ஜூலை, 2013

யானைகளை அதன் போக்கில் வாழவிடுங்கள் ... - சந்திரகுமார்

யானைகளை அதன் போக்கில் வாழவிடுங்கள் ... - சந்திரகுமார்

சுமார் 12 வருடங்களாக மலையாள மாத்ருபூமியின் புகைப்படக்கலைஞராக இருந்துவிட்டு தற்போது திருவனந்தபுரத்தில் புகைப்பட பயிற்சி பள்ளி வைத்து நடத்துகிறார்.
பத்திரிகை புகைப்படக்காரராக இவர் பணியாற்றிய காலத்தில் இவர் அதிகம் ரசித்து படமெடுத்தது யானைகளை மட்டுமே, இதற்காக ரொம்பவே அலைந்து படங்களை பதிவு செய்துள்ளார். இதனால் இவருக்கு "யானை' சந்திரகுமார் என்றும் பட்டப்பெயரும் உண்டு.
நான் பார்த்தவரையில், பழகிய வரையில் யானைகள் சாதுவானவைதான். அவைகளை பழக்குகிறோம் என்ற பெயரில் மனிதர்கள் செய்யும் கொடுமைகளால்தான் அவைகளுக்கு மதம் பிடிப்பதும் மனிதர்களை தாக்குவதும் நடக்கிறது என்றவர் மேலும் கூறிய சுவராசியமான தகவல்களாவது:
யானைகள் ஒரு இடத்தில் நிரந்தரமாக நிற்காது. தட்பவெப்ப சூழலுக்கு ஏற்பவும், உணவு தண்ணீர் தேவைகளுக்காகவும் எங்கிருந்தாவது எங்கேயாவது நடமாடிக் கொண்டு இருக்கும்.
யானைகளுக்கு இடையே ஒழுங்கு உண்டு. தெளிவான தகவல் பரிமாற்றங்கள் உண்டு. அதிகமான பாசம் உண்டு, மனிதர்களை அவர்களிடம் இருந்து வரும் வாசனையை வைத்து அடையாளம் கண்டு கொள்ளும், எவ்வளவு ஆண்டுகள் பிரிந்துவிட்டு வந்தாலும் பாகன்களை அடையாளம் கண்டு அவர்களிடம் மிக பாசமாக இருக்க காரணம் பழகிய அவர்களின் வாசனை தான்.
காட்டுப் பகுதிக்குள் சுதந்திரமாக திரிந்த யானைகள், தங்கள் மீது அலங்காரம் என்ற பெயரில் ஜரிகை சார்ந்த துணிகளை போர்த்துவதையும், கூட்டத்தில் நெருக்கியடித்து நிற்க வைப்பதையும், பட்டாசு வெடிச்சத்தத்தையும் சுத்தமாக வெறுக்கின்றன, கடும் எரிச்சல் அடைகின்றன, இவ்வளவு பெரிய உருவத்தை லாரியில் ஏற்றிச் செல்வது இன்னும் கொடுமையான விஷயம். இதனால்தான் கோபம் கொண்டு மனிதர்களை தாக்குகின்றன.
மேலும் இதன் பாதப்பகுதிகள் காட்டுக்குள் நடப்பதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது, காட்டுப்பகுதியில் எவ்வளவு தூரம் நடந்தாலும் எதுவும் ஆகாது. ஆனால் மாறாக நகர்பகுதியில் கொதிக்கும் தார்ரோட்டில், அது வெளிப்படுத்தும் சூட்டில் நடக்கும் போது அதன் பாதங்கள் தாங்குவது இல்லை. இது எத்தனை பேருக்கு புரிகிறது.
உண்மையில் யானைகள் இருப்பது வன உயிர்ச்சுழல் பாதுகாப்புக்கு முக்கியமான விஷயம், எவ்வளவு தூரம் யானைகள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும், சந்தோஷமாகவும் காட்டில் இருக்கிறதோ, அந்த அளவிற்கு நாடு நன்றாக இருக்கும். ஆகவே யானைகளை அதன் காட்டுப்பகுதியில் அதன் போக்கில் வாழவிடுங்கள், இதைவிட நல்ல காரியம் எதுவும் நீங்கள் யானைகளுக்கு செய்துவிட முடியாது என்று சொல்லி முடித்தார்.
குறிப்பு: யானை சந்திரகுமார் எடுத்த யானை பற்றிய சில படங்களை சிவப்பு பட்டையில் உள்ள போட்டோ கேலரி பகுதியை கிளிக் செய்து பார்க்கலாம்.
- எல்.முருகராசு

வியாழன், 4 ஏப்ரல், 2013

சிறப்பு முகாமில் 9- ஆவது நாளாக உண்ணா நோன்பு

பூந்தமல்லி ச் சிறப்பு முகாமில் ஈழத் தமிழர்  9- ஆவது நாளாக உண்ணா நோன்பு
  
பூந்தமல்லி சிறப்பு முகாமில் ஈழத் தமிழ் அகதி 9-வது நாளாக உண்ணாவிரதம்
சென்னை, ஏப். 4-

இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வரும் தமிழர்கள் இங்குள்ள 100-க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கு லட்சக்கணக்கான தமிழர்கள் தற்போது வசித்து வருகிறார்கள்.

இப்படி அகதிகளாக வருபவர்களில் விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்படுபவர்கள் மற்றும் வெடி பொருட்களை கடத்த முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தனிமைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள செங்கல்பட்டு சிறப்பு முகாமில், 48 பேரும், பூந்தமல்லி சிறப்பு முகாமில் 4 பேரும் கடந்த பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளனர்.

பூந்தமல்லி முகாமில் உள்ள அகதி சந்திரகுமார் தன்னையும், தன்னுடன் இருக்கும் மற்ற கைதிகளான கங்காதரன், ஜெயமோகன், பகீரதன் ஆகியோரையும் திறந்த வெளி முகாமுக்கு மாற்றக்கோரி கடந்த 27-ந்தேதி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

இதைத் தொடர்ந்து அவரது மனைவி ஜெயநந்தினி, மகன்கள் பரிதி அழகன் (வயது 6), பிருந்தாவன் (3) ஆகியோருடன் சந்திரகுமாரை பார்ப்பதற்காக சென்றார். அங்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சிறை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர் கைது செய்யப்பட்டார்.


இதனால் மனமுடைந்த சந்திரகுமார் அதிக அளவில் மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை முடிந்து கடந்த 1-ந்தேதி அன்று முகாமுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டார்.

27-ந்தேதியில் இருந்து இன்றுவரை 9 நாட்களாக எதுவும் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து வரும் சந்திரகுமாரை போனில் தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 2010-ம் ஆண்டு இலங்கையில் போர் நடந்தபோது காயங்களுடன் குடும்பத்துடன் நான் தமிழகத்துக்கு தப்பி வந்தேன். இந்த சமயத்தில்தான் போலீசார் என்னை கைது செய்து சிறையில் அடைந்தனர்.

3.5 ஆண்டுகளாக தனிமைச் சிறையில் நான் வாடி வருகிறேன். என் மீது தொடரப்பட்ட வழக்கு முடிந்த பின்னரும் தனிமைச் சிறையிலேயே தொடர்ந்து இருந்து வருகிறேன். அயல் நாட்டவர் சட்டப்படி வெளிநாடுகளில் இருந்து அகதிகளாக வருபவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டால் குடும்பத்தினருடனேயே அவர்கள் தங்கியிருந்து வழக்கை நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.

இந்த வாய்ப்பு எனக்கும், என்னைப்போல் சிறையில் அடைக்கப்பட்டு இருப்ப ர்களுக்கும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்துள்ளது. எனவே என்னைப் போன்ற அனைவரையும் திறந்த வெளி முகாமுக்கு மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் சிறையில் நாங்கள் கொடுமைகளை அனுபவித்து வருகிறோம். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள எழுச்சி ஈழ விடுதலைக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு சந்திரகுமார் கூறினார்.