உதிரும் தமிழ் மலர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உதிரும் தமிழ் மலர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 3 டிசம்பர், 2023

தோழர் தியாகு பகிர்கிறார் : உதிரும் தமிழ் மலர்கள் 4/4

 

   03 December 2023      அகரமுதல



(தோழர் தியாகு பகிர்கிறார் : உதிரும் தமிழ் மலர்கள் 3/4 – குலோத்துங்கன்-தொடர்ச்சி)

உதிரும் தமிழ் மலர்கள் 4/4

இந்திய நாட்டின் தட்பவெப்பநிலைகளைப் பொறுத்த வரையில் 300 ஆண்டுகளுக்கு மேல் இந்த ஓலைச் சுவடிகளால் வாழ முடியாது என்பதையும், 300 ஆண்டுகளுக்குள் இவை படி எடுக்கப்படவில்லையென்றால் அடியோடு அழிந்து விடும் என்பதையும், இவ்வாறே எங்கள் தமிழ்ச் சமுதாயம் அச்சு இயந்திரம் வருவதற்கு முன்னரே ஏராளமான தமிழ் ஓலைச் சுவடிகளை இழந்துவிட்டது என்பதையும் குறிப்பிட்டேன். அச்சு இயந்திரம் வந்த பின்பும் 53,000 ஓலைச் சுவடிகள் பாதுகாப்பார் இன்றி அழியும் நிலையில் உள்ளன. 300 ஆண்டுகளுக்கு மேல் வாழ முடியாத இச்சுவடிகளில் பெரும்பாலான சுவடிகள் 200 அல்லது 250 ஆண்டுகளை ஏற்கெனவே கடந்து விட்டன. இவற்றை விரைவில் காப்பாற்ற வேண்டும். இவற்றை அழியவிடுவது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, உலகத்திற்கே அவமானம் என்றும் நான் குறிப்பிட்டேன்.

இத்துறையில் ஆசியவில் ஆய்வு நிறுவனம் மேற்கொண்டு வரும் பணிகள் பற்றி நான் விரிவாக விளக்கியது பன்னாட்டு அறிஞர்களை மிகவும் கவர்ந்தது. எனது உரையினை அன்று நிகழ்த்தப்பட்ட உரைகளுள் மிகச் சிறப்பு வாய்ந்த உரையாக அனைவரும் பாராட்டினர். ஆபத்துக்கிடமான உலக ஆவணங்களின் வரிசையில் 53,000 தமிழ் ஓலைச் சுவடிளும், இணைக்கப்பட வேண்டுமென்று வல்லுநர் குழு பரிந்துரை செய்தது. இந்தக் குழுவின் கூட்டம் ஒருங்கே பிரெஞ்ச் மொழியிலும் ஆங்கிலத்திலும் நடந்தது.

கூட்டத்தின் இறுதிப் பகுதி பெரும்பாலும் பிரெஞ்சு மொழியில் நடத்தப்பட்டது. “இந்திய நாட்டின் ஒரு பகுதியான தமிழ்நாட்டில் 53,000-த்திற்கும் மேற்பட்ட தமிழ் ஓலைச் சுவடிகள் பாதுகாப்பார் இன்றி அழிந்து கொண்டிருக்கின்றன. இவை பற்றிய போதுமான தகவல்கள் பன்னாட்டு அறிஞர்களைக், குறிப்பாக ஐரோப்பிய சமுதாயத்தை வந்து எட்டவில்லை. இந்த ஓலைச் சுவடிகள் மனித குலத்தின் அறிவு வளர்ச்சியில் மிகக் குறிப்பிடத் தகுந்த இடத்தைப் பெறுகின்றன என்று இந்திய நாட்டின் சார்பாளர் மிகச் சிறப்பாக விளக்கினார். அவற்றைப் பாதுகாக்கும் முயற்சியை யுனெசுகோ நிறுவனம் மேற்கொள்ள வேண்டுமென்று பரிந்துரைக்கப்படுகிறது.” என்று பிரெஞ்சு மொழியில் பன்னாட்டு வல்லுநர் குழுவின் பரிந்துரை படிக்கப்பட்ட போது கரை காணாத மகிழ்ச்சியில் என் உள்ளம் துள்ளிக் குதித்தது. வார்சாவில் பன்னாட்டு அறிஞர்களின் பரிந்துரையைப் பெற்று, ஐக்கிய நாடுகளின் அமைப்பான யுனெசுகோ நிறுவனத்தின் வாயிலாகச் செயல்பட இருப்பதை எண்ண எண்ண நெஞ்சில் பெருமிதம் ஏற்பட்டது.

அன்றிரவு போலந்து நாட்டு மரபுப்படி ஒரு பெரிய விருந்துக்கு யுனெசுகோ நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. குளிரால் நடுங்கும் போலந்து நாட்டின் இயற்கை எழில்மிக்க அரண்மைனையின் பக்கத்தில் அமைதியாகப் பனியைப் போர்த்துக் கொண்டு அசைந்தாடிச் செல்லும் ஆற்றின் கரையில் பன்னாட்டு அறிஞர்களுக்கு இரவில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைதியான சூழலில் எங்கள் ஆய்வுப் பயணத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் இந்த விருந்து நடைபெற்றது. உலகின் நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் முழு வெற்றி பெற்று விட்டது போன்ற மகிழ்ச்சியில் பன்னாட்டு அறிஞர்கள் ஒருவரோடு ஒருவர் கை குலுக்கிக் கொண்டனர்.

“அன்றிரவு ஆசியவில் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வுப் பணிகளைப் பற்றி நானும், டாக்டர் சீ ஃகிகோசகாவும், சப்பானியச்சார்பாளர் முனைவர் அகியோபாசுவும், சில ஐரோப்பிய நாட்டு அறிஞர்களும் இணைந்து விரிவாகக் கலந்துரையாடினோம். அடுத்த நாள் காலை வார்சாவில் உள்ள தலைமை ஆவணக் காப்பகத்தைப் பார்வையிட்டு விட்டு மறு நாள் இலண்டன் செல்வதாகத் திட்டமிட்டோம்” என்று திரு சி. சான் சாமுவேல் அவர்கள் முப்பது வருடங்களுக்கு முன்னர் போலந்து நாட்டின் தலைநகரம் வார்சா நகரத்தில் நடைபெற்ற யுனெசுகோ கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளை (1994இல் வெளியான) அவரது நூல்களில் வெளிப்படுத்தினார்.

தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மை உலகம் தழுவிய நிலையில் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்ற இக்காலத்தில் பழந்தமிழ்ச் சுவடிகள் தாங்கி வந்துள்ள அறிவுக் கருவூலங்களையெல்லாம் உலகுக்குக் கொண்டு காட்டுவது தமிழரின் கடமையாகும்..

ஆங்காங்கே அழிந்து கொண்டிருக்கும் தமிழ் ஓலைச் சுவடிகளில் ஏறத்தாழ 40,000க்கும் மேற்பட்ட சுவடிகள் மருத்துவம், போன்ற தொன்மையான அறிவியல் துறைகளைச் சார்ந்தனவாக உள்ளன. ”தமிழ் ஓலைச் சுவடிகள் காட்டும் மரபு அறிவியல்” என்ற தலைப்பில் ஆசியவியல் ஆய்வு நிறுவனம் ஒரு பெரிய ஆய்வுத் திட்டத்தைத் தீட்டிச் செயல்படுத்தி வருகின்றது.

மேலைநாட்டு அறிவியல் சிந்தனைகள் இங்கு வந்து சேரும் முன் நமது அறிவியல் சார்ந்த முயற்சிகளின் நிலை என்ன என்பதையும், அவை மேலைநாட்டு ஆதிக்கத்தால் எவ்வாறு அழிந்தன என்பதையும் ஆய்ந்து காணும் இந்நிறுவனத்தின் முயற்சியால் தோன்றியதே மேற்கூறிய ஆய்வுத் திட்டம்.

மேற்கின் தொடர்பு நமக்கு ஏற்படுவதற்கு முன்னர் நமது நாடு மருத்துவம், கட்டடக் கலை போன்ற பல்வேறு அறிவியல் சார்ந்த துறைகளில் மிக உயர்ந்த நிலையைப் பெற்றிருந்ததை யாராவது மறுக்க முடியுமா?

மருத்துவக் கலையிலும், பிற கலைகளிலும் நாம் பெற்றிருந்த திறமைகள் உலகத்தையே வியக்க வைக்கின்றனவே. நமது தொன்மையான அறிவியல் சிந்தனைகளைத் தாங்கி நிற்கும் இந்தப் பழந்தமிழ் ஓலைச் சுவடிகளைப் படியெடுத்து அவற்றின் கருத்துகளை ஆய்வது கல்வி வளர்ச்சிக்கு மிகவும் தேவை. இந்தத் திட்டத்தைப் பன்னாட்டு நிலையில் பல்வேறு நாட்டு அறிஞர்களின் துணையோடு இந்நிறுவனம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.

மரபு அறிவியல் சார்ந்த தமிழ் ஓலைச் சுவடிகள் பல்வேறு தலைப்புகளில் கிடைக்கின்றன.

  1. சித்தவைத்தியம், ஆயுர்வேதம், யுனானி முறையிலமைந்த மருத்துவச் சுவடிகள்.
  2. வருமம், போன்ற போர்க்கலையும், மருத்துவம் பற்றிய சிந்தனைகளும் இணைந்த சுவடிகள்.
  3. விலங்குகள் வைத்தியம் அல்லது வாகடம் தொடர்பான சுவடிகள்.
  4. பயிர்த்தொழில் சார்ந்த கூவநூல், சரநூல் போன்ற சுவடிகள்.
  5. கட்டடக் கலை, கப்பல் கட்டுதல், கோயில்கள் அமைத்தல், சிற்ப வேலைப்பாடு, உலோகத்தை மையமாகக் கொண்ட கலைகள், ஓவியம் போன்றன தொடர்பான சுவடிகள்.
  6. இசை நூல்கள், இசைக் கருவிகள் செய்யும் முறை ஆகியன பற்றிய சுவடிகள்..
  7. கணிதம், வானநூல் தொடர்பான சுவடிகள்.
  8. ஓகம் தொடர்பான சுவடிகள்.
  9. விலங்குகளைப் பழக்குதல் போன்றன தொடர்பான சுவடிகள்.
  10. போர்க்கலை சார்ந்த சுவடிகள்.
  11. உடற்கூறு அல்லது அங்கசாத்திரம் (சாமுத்திரிகா இலட்சணம்) தொடர்பான சுவடிகள் போன்றன.

மேற்குறிப்பிட்ட மரபு அறிவியல் சார்ந்த தமிழ் ஓலைச் சுவடிகள் ஆய்வும், நூல்களாக வெளியிடுவதும் இன்றைய மனித அறிவு வளத்திற்கு மிகவும் தேவை. இந்த ஓலைச் சுவடிகளை அழிய விடுவது மனித குலத்திற்கே பேரிழப்பாக அமைந்து விடும்…
என்று ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் முனைவர் திரு சி.சான் சாமுவேல் தனது நூல்களில் தனது கவலையை வெளிப்படுத்துகிறார்.

ஆசியவியல் ஆய்வு நிறுவனம் தற்பொழுது சென்னையில் செம்மஞ்சேரியில் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனம் மூலமாக நாட்டுப்புற இலக்கியங்களைத் தாங்கிய ஓலைச் சுவடிகளில் வெளிப்பட்ட வாய்வழி இலக்கியங்கள் நூல்களாகப் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்திருக்கின்றன.


நாட்டுப்புற இலக்கியங்கள் , வாய்மொழி இலக்கியங்களாகத் திகழ்கின்றன. இந்த வாய்மொழி இலக்கியங்களும், ஓலைச் சுவடிகளில் பதிவு செய்யப்பட்டு ஆவணப் பதிவுகளாக கிடைக்கின்றன. இத்தகைய ஆவணப் பதிவுகளே ”ஒடுக்கப்பட்டவர்கள், சமுதாயத் தகுதியைப் பெறாதவர்கள், தோல்வி கண்டவர்கள், சூழ்ச்சியால் முறியடிக்கப்பட்டவர்கள், அதிகார வருகத்தை எதிர்த்துக் குரலெழுப்பியவர்கள், ஆளும் வருக்கத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டிச் சிறைகளில் செத்தவர்கள் பற்றிய வரலாறுகளை வெளிப்படுத்துகின்றன. இத்தகைய நாட்டுப்புற இலக்கியங்களைத் தாங்கிய ஓலைச் சுவடிகளை திரு.சான் சாமுவேல் அவர்களது தலைமையிலான ஆசியவியல் ஆய்வு நிறுவனமே சேகரித்துப் பாதுகாத்து நூல்களாகத் தமிழ், ஆங்கிலத்தில் வெளியிட்டார்கள்..

இந்த வரிசையில் “சின்னத் தம்பி” கதை, ”குருக்களாஞ்சி” கதை, ”உச்சினி மாகாளியம்மன்” கதை என்ற மூன்று கதைப் பாடல்களை ஓலைச் சுவடிகளிலிருந்து பதிப்பித்து விளக்க உரையுடனும், ஆங்கில மொழிபெயர்ப்புடனும் நூல்களாக வெளியிட்டார்கள்.. இது தவிர ஆசியவியல் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ”பலவேசஞ் சேர்வைக்காரன்” கதை, ”வெங்கலராசன்” கதை, ”பூலித் தேவன் கதைப் பாடல்”, “சந்தனத் தேவன் கதைப் பாடல்”, ”அண்ணன்மார் கதைப்பாடல், ”பெருமாள் சுவாமி கதைப் பாடல்” போன்ற நூல்கள் முக்கியமானவை..

ஆசியவியல் ஆய்வு நிறுவனர் திரு சி. சான் சாமுவேல் அவர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் ஓலைச் சுவடிகளைப் பாதுகாப்பதற்காக யுனெசுகோவில் பேசிய தலைசிறந்த வரலாற்றுச் சாதனை நிகழ்வை அவர் எழுதிய இரண்டு நூல்கள் மூலமாக அறிந்து கொண்டு இந்தக் கட்டுரை எழுதப்பட்டது.

திரு. சி. சான் சாமுவேல் அவர்கள் எழுதிய அந்த இரண்டு நூல்கள்:

1) குமரி முதல் வார்சா வரை.

2) உதிரும் தமிழ் மலர்கள்.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::;

கட்டுரை ஆக்கம் –

மா. குலோத்துங்கன் (தொன்மை தரிசனம் டி.வி – யூடியுப் சேனல்)

குறிப்பு- கட்டுரை எழுதப் பயன்பட்ட நூல்கள் –

  1. குமரி முதல் வார்சா வரை
  2. உதிரும் தமிழ் மலர்கள்.
  3. தமிழர் பண்பாட்டுப் பதிவுகள்,
    ஆசிரியர்: திரு குடவாயில் பாலசுப்பிரமணியன்
  4. மதுரையில் சமணம்.
    ஆசிரியர்: முனைவர் திரு சாந்தலிங்கம்..

(தொடரும்)
குலோத்துங்கன்
தோழர் தியாகு
தாழி மடல் 304

சனி, 2 டிசம்பர், 2023

தோழர் தியாகு பகிர்கிறார் : உதிரும் தமிழ் மலர்கள் 3/4 – குலோத்துங்கன்

 






(தோழர் தியாகு பகிர்கிறார் : உதிரும் தமிழ் மலர்கள் 2/4 – குலோத்துங்கன்-தொடர்ச்சி)

உதிரும் தமிழ் மலர்கள் 3/4

உலகம் முழுவதும் சிதறிக் கிடக்கும் தமிழ் ஓலைச் சுவடிகள் பற்றிய புள்ளிவிவரங்களை ஆசியவியல் ஆய்வு நிறுவனம் சேகரித்தது. 1993இல் எடுக்கப்பட்ட ஆய்வின் படி 53,000 தமிழ் ஓலைச் சுவடிகள் உலகமெங்கும் உள்ள தனிநபர்கள், மற்றும் அமைப்புகள், நூலகங்களில் பாதுகாக்கப்பட்டு வருவதை வெளிப்படுத்தியது. மேலும் இந்த 53,000 தமிழ் ஓலைச் சுவடிகளில் ஏறத்தாழ 30,000க்கு மேற்பட்ட ஓலைச் சுவடிகள் மருத்துவம் போன்ற பழைய தொன்மையான அறிவியல் துறைகளைச் சார்ந்தனவாக இருந்ததை ஆசியவில் ஆய்வு நிறுவனம் கண்டறிந்து வெளிப்படுத்தியது.

அறிவியல் துறைகளைச் சார்ந்த ஓலைச் சுவடிகள் அனைத்தும், தமிழனின் தொன்மைச் சிறப்பை, பழம்பெருமையைப் பறை சாற்றியது. ஆனால் இன்று அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் மேற்கத்திய நாடுகளின் முயற்சியால் வெளிப்பட்டன என்ற தவறான தோற்றம் புகுத்தப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளின் தொடர்பு ஏற்படுவதற்கு முன்னரே நம் நாடு மருத்துவத்திலும், கட்டடக் கலையிலும், மிக உன்னத நிலையைப் பெற்றிருந்தது. இதற்கு எடுத்துக்காட்டாகக் கரிகாலன் கட்டிய “கல்லணை“ யின் தொழில் நுட்பம் அனுபவம் வாய்ந்த ஆங்கிலேயப் பொறியாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. தஞ்சைப் பெரிய கோயிலின் கட்டடக் கலை நுட்பத்தை இன்றும் நம் நாட்டு அறிஞர்களும், பிறநாட்டு அறிஞர்களும் வியந்து பாராட்டுகின்றனர். மருத்துவக் கலை, கட்டடக் கலை, மற்றும் பிற கலைகளிலும் நாம் பெற்றிருந்த திறமைகள் உலகத்தையே வியக்க வைத்தன. ஆகவே “தமிழ் ஓலைச் சுவடிகள் காட்டும் தொன்மையான அறிவியல்” என்ற தலைப்பில் மிகப் பெரிய ஆய்வுத் திட்டத்தை உருவாக்க திரு.சான் சாமுவேல் தீர்மானித்தார். இத்தகைய தொன்மையான அறிவியல் சிறப்புகளைக் கொண்ட ஓலைச் சுவடிகளைப் படியெடுத்து அவற்றின் கருத்துகளை ஆராய்வது, நூல்களாக வெளியிடுவது போன்றவை கல்வி வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்பதை திரு சான் சாமுவேல் உணர்ந்தார். மேலும் அறிவியல் சார்ந்த ஓலைச் சுவடிகளைக் குறித்த தனது ஆய்வுத் திட்டத்தை அமெரிக்கா, சப்பான், இங்கிலாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த நண்பர்களோடும் திரு சான் சாமுவேல் விவாதித்தார். மேலும் வெளிநாடுகளைச் சார்ந்த சில நிறுவனங்களிடம் தனது ஆய்வுத் திட்டத்திற்கு உதவுமாறு வேண்டினார். ஆனால் இத்திட்டத்தைப் பாராட்டிய அனைத்து வெளிநாட்டவர்களும், இத்திட்டத்திற்கு நிதியுதவி செய்வதில் சில இடையூறுகள் இருப்பதை விளக்கினார்கள். தனது ஆய்வுத் திட்டத்திற்கான நிதியுதவி வேண்டிப் பெரிய முயற்சிகளை எடுக்கத் திரு.சான் சாமுவேல் மேற்கொண்டார்.

ஐக்கிய நாடுகளின் கல்வி, பண்பாட்டு நிறுவனமான “யுனெசுகோ” நிறுவனத்துக்குத் தனது ஆய்வுத் திட்டத்தின் விரிவான கருத்துருவினை அனுப்பி வைத்தார். சில வாரங்களில் யுனெசுகோ நிறுவனத்திலிருந்து திரு சான் சாமுவேலின் முயற்சிக்குப் பதில் கிடைத்தது. உலகம் முழுவதிலுமுள்ள தொன்மையான நினைவுச் சின்னங்களை அடையாளங்கண்டு அந்த நினைவுச் சின்னங்களை உலகத்திற்கு அறிமுகப்படுத்தும் வகையிலான திட்டம் இருப்பதாகவும், அத்திட்டத்தோடு இணைத்து ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தின் திட்டத்தையும் செயல்படுத்தலாம் என்றும் யுனெசுகோ அமைப்பு தெரிவித்தது. யுனெசுகோவின் பதிலில் மிகவும் மகிழ்ச்சியடைந்த திரு சான் சாமுவேல் தனது மகிழ்ச்சியை நண்பர்களிடமும் பகிர்ந்து கொண்டார்.

(யுனெசுகோவோடு இணைந்து தமிழ் ஓலைச் சுவடிகளைச் சர்வதேச அறிஞர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல முயன்ற மாபெரும் வெற்றியை நண்பர்களோடு மகிழ்ச்சியாக கொண்டாடினார்.)

1992ஆம் ஆண்டு போலந்து நாட்டின் தலைநகரம் வார்சாவில் யுனெசுகோவின் வல்லுநர் குழுக் கூட்டத்திற்கு யுனெசுகோ ஏற்பாடு செய்திருந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு திரு சான் சாமுவேல் தனது ஓலைச் சுவடிகள் பற்றிய ஆய்வுத் திட்டத்தின் உட்கருத்தை வெளியிடலாம் என்று யுனெசுகோ திரு சான் சாமுவேலுக்கு அழைப்பிதழ் அனுப்பியது.

1992 செட்டம்பர் மாதம் 12ஆம் நாள் யுனெசுகோவின் கூட்டம் வார்சாவில் கூடியது. தொடக்க நாள் கூட்டத்தில் யுனெசுகோ நிறுவனத்தின் பொது இயக்குநர் தொடக்கவுரையாற்றினார். அவரது உரையில் உலகத்தின் நினைவுச் சின்னங்களைக் காக்க வேண்டிய சமுதாயப் பொறுப்பு மிகச் சிறப்பாக வலியுறுத்தப்பட்டது. இயற்கைச் சீற்றங்களினாலும், மனிதனின் அறியாமை, மற்றும் மனிதனின் ஆதிக்கப் போர்களினாலும் எத்தனையோ தொன்மையான நினைவுச் சின்னங்கள் அழிந்தன. இந்த அழிவிலிருந்து தப்பிப் பிழைத்து உயிருடன் இருக்கின்ற நினைவுச் சின்னங்களைக் காப்பாற்றியாக வேண்டும். என்பது அவரது பேச்சின் உட்கருத்தாக அமைந்தது.

இதன் பின்னர் சப்பானிய அறிஞர் திரு அகியோயாசு ஆசிய நாட்டுச் சுவடிகள் பற்றிச் சுருக்கமாகப் பேசினார். இவர் உரையாற்றி அமர்ந்தவுடன் ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தின் திரு.சான் சாமுவேல் அவர்கள் பேச எழுந்தார்.

அவரது பேச்சில் ”1,500க்கும் மேற்பட்ட மொழிகளைக் கொண்ட இந்திய நாடு பல்வேறு மொழிகளின், இனங்களின், பண்பாடுகளின் சங்கமமாகக் காணப்படுகிறது. 1,500க்கும் மேற்பட்ட மொழிகள் வழங்கப்பட்டு வந்த போதிலும் 22 மொழிகள் மட்டுமே வரி வடிவங்களைப் பெற்றுள்ளன. வரி வடிவங்களைப் பெற்றுள்ள இம்மொழிகளிலும் வரி வடிவங்கள் பெறாத பிற மொழிகளிலும் காலத்தை எதிர்த்து எதிர் நீச்சலிடும் தகுதி வாய்ந்த ஏராளமான வாய்மொழி இலக்கியங்கள் உள்ளன” என்றார். இவற்றையும் உலகின் நினைவுச் சின்னங்களின் ஒரு பகுதியாகக் கொள்ள வேண்டும். என்ற திரு.சான் சாமுவேல் அவர்களது வாதத்தை வல்லுநர் குழு உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டனர்.

“எழுத்து வடிவம் பெற்ற இந்திய மொழிகளில் உள்ள ”ஆபத்துக்கு இடமான ஓலைச் சுவடிகள்” குறைந்தபட்சம் (8,00,000 ) எட்டு இலட்சம் வரை இருக்கும். இவற்றுள் ஏறத்தாழ நான்கு இலட்சம் ஓலைச் சுவடிகள் “சமற்கிருத மொழியைச் சார்ந்தவை”. சுவடிகளைக் காக்கும் முயற்சிகளைப் பொறுத்த வரையில் “சமற்கிருதச் சுவடிகளைக் காப்பதில் பல இந்திய நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. இம்முயற்சிகளுக்கு வெளிநாட்டு அறிஞர்களின் ஆதரவும் போதிய அளவிற்கு உள்ளது. ஆனால் சமற்கிருதம் தவிர்த்த பிறமொழி ஓலைச் சுவடிகள், குறிப்பாகத் திராவிட மொழிகளைச் சார்ந்த ஓலைச் சுவடிகள் கவனிப்பாரற்று, ஆதரவின்றி இந்திய நாட்டின் சிற்றூர்ப் புறங்களில் இயற்கையின் கோரத் தாண்டவத்திற்கும், மக்களின் மூடநம்பிக்கைகளுக்கும், கறையானின் கொடிய வாய்க்கும் இடையில் சிக்கிக் காலந்தோறும் அழிந்து கொண்டிருக்கின்றன.

இந்தியவியல் என்றால் சமற்கிருதவியல்” மட்டும்தான் என்று தவறாக கருதப்பட்ட நிலை 19ஆம் நூற்றாண்டின் இறுதி வரை நிலவிவந்தது. “காலப்போக்கில் திராவிடவியல் பற்றி முழுமையாக ஆய்வு இல்லையென்றால் இந்தியவியல் பற்றிய ஆய்வு முழுமை பெறாது. என்பதைப் பல அறிஞர்களும், அனுபவபூர்வமாக உணரத் தொடங்கினர். எனவே 20 ஆம் நூற்றாண்டில் அது வரை புறக்கணிக்கப்பட்டிருந்த திராவிடவியல் ஆய்வு ஓரளவிற்குப் புத்துயிர் பெற்றது. இந்தியாவின் ஒரே செவ்வியல் மொழியாகச் சமற்கிருத மொழி மட்டும் கருதப்பட்ட நிலை மாறித் தமிழும் செவ்வியல் மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய அவசியத்தை உலக அறிஞர்கள் ஒத்துக்கொள்ளத் தொடங்கினர்.

சான் சாமுவேல் சொல்கிறார்: கிறித்து பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இலக்கிய, இலக்கண வளங்களைக் குறைவறப் பெற்று இன்றும் இளமை குன்றாமல் திகழும் இந்தக் கன்னித் தமிழ் மொழியின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளாமலோ, தமிழ் பற்றிய அறிவு இல்லாமலோ, இந்தியவியல் பற்றிய ஆய்வு முழுமை பெறாது என்பதை நான்.. அழுத்தமாகக் குறிப்பிட்டேன். மேலும் இந்தியவியல் ஆய்வுக்கு அடித்தளமாக அமைகின்ற தென்னிந்திய ஆவணங்கள், குறிப்பாகத் திராவிட மொழிகளின் ஓலைச் சுவடிகள் பாதுகாக்கப்பட வேண்டியவை என்று எடுத்துரைத்தேன்.

100 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையில் இருந்த ஓலைச் சுவடிகள் வெள்ளைக்காரப் பிரபு ஒருவனின் குதிரைக்கு வெந்நீர் காய்ச்சுவதற்காக அடுப்பில் விறகாகப் போட்டு எரிக்கப் பயன்பட்டதையும், மூட நம்பிக்கை மிக்க இந்நாட்டு மக்கள் பொங்கல் திருநாளின் போது சுவடிகளைத் தீயிலிட்டுக் கொளுத்துவதையும், வைகை ஆற்றில் ஆடிப் பெருக்கின் போது புது வெள்ளம் வரும் போது நீரிலிட்டு ஆற்றுத் தேவதையின் பசியை நிறைவு செய்வதையும் நான் விரிவாக எடுத்துப் பேசியது பன்னாட்டு அறிஞர்களை வியப்பில் ஆழ்த்தியது. போர்களினாலும், இயற்கையின் சீற்றத்தாலும் ஐரோப்பிய நாடுகளின் ஆவணங்கள் அழியும் போது எங்கள் நாட்டின் கலைக் கருவூலங்களில் பெரும்பாலானவை மண்மூடிப் போக வேண்டிய கண்மூடிப் பழக்கங்களாலும், மூடநம்பிக்கைகளாலும் அழிகின்றன என்று நான் எடுத்துரைத்தேன்.

(தொடரும்)
குலோத்துங்கன்,
தோழர் தியாகு
தாழி மடல் 304

வெள்ளி, 1 டிசம்பர், 2023

தோழர் தியாகு பகிர்கிறார் : உதிரும் தமிழ் மலர்கள் 2/4 – குலோத்துங்கன்

 





(தோழர் தியாகு பகிர்கிறார் : உதிரும் தமிழ் மலர்கள் 1/4 – குலோத்துங்கன்-தெ்ாடர்ச்சி)

உதிரும் தமிழ் மலர்கள் 2/4


பக்தி இயக்கம் எழுந்தபோது சமயக் காழ்ப்பின் காரணமாகப் பல ஏடுகள் எரிக்கப்பட்டன என்ற வரலாறு உண்டு. ஆனால் சமண சமயத்தைத் தழுவிய மக்களின் வீடுகளில் அத்தகைய ஏடுகள் பாதுகாக்கப்பட்டு வந்தன. பிற்காலத்தில் ஆதீன மடங்களிலும், சமண சமயத்தின் மீது இருந்த காழ்புணர்ச்சி நீங்கிச் சமண சமய இலக்கிய ஏடுகளையும் பாதுகாத்தார்கள் என்பது வரலாறு..

ஐரோப்பியர் ஆட்சிக் காலத்தில் பல ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த ஓலைச் சுவடிகளைச் சேகரித்துப் பாதுகாத்தார்கள் என்பதும் தனி வரலாறு. இவர்களுள் முக்கியமானவர் காலின் மெக்கன்சி ஆவார். தற்காலத்திலும் சுவடிகள் திரட்டும் பணியினைப் பல்வேறு நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. தமிழ்ப் பல்கலைக்கழகம் பல இடங்களில் உள்ள ஓலைச் சுவடிகளைப் பெற்றுப் பாதுகாத்து வருவதுடன் தனி நபர்களிடமிருந்தும் விலை கொடுத்தும் ஓலைச்சுவடிகளை வாங்கிச் சேகரித்து வருகின்றார்கள். சென்னையில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், ஆசியவியல் ஆய்வு நிறுவனம் போன்ற பல்வேறு அமைப்புகளும் ஓலைச்சுவடிகள் திரட்டும் பணியில் தற்போது ஈடுபட்டுப் பல அரிய தமிழ்ச் சுவடிகளை அழிவிலிருந்து காத்து வருகின்றன.

ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்கும் நிறுவனங்களில் ஆசியவியல் ஆய்வு நிறுவனம் மிகவும் குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனமே ஓலைச் சுவடிகளை சேகரித்து நூலாகப் பதிப்பிக்கும் போற்றுதலுக்குரிய பணியைச் செய்து வருகிறது.

முனைவர் சி. சான் சாமுவேல் 1982இல் ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தை ஏற்படுத்தினார். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் நெய்யூர் என்ற சிற்றூரில் பிறந்தார். குமரி மாவட்டத்தில் உள்ள ஊர்களில் மேற்கத்திய நாட்டு மொழி, கலாச்சாரம் அதிகமாகப் பாதித்த ஊர்களில் நெய்யூர் முதன்மையான இடத்தைப் பிடித்தது. தமிழ் மொழியின் தொன்மையான கலை இலக்கியம் பண்பாடு அனைத்தும் ஊர் மக்களின் நினைவுத் திரையில் சீரழிந்த சிறப்பிலந்த ஓவியங்களாக முடங்கி விட்டன. ஆங்கிலம் பேசத் தெரிந்தவன் மட்டுமே அறிஞன், மேற்கத்திய கலாச்சாரத்தில் வளர்ந்தவன் மட்டுமே உயர்ந்த நாகரிக மதிப்பீடுகளைக் கொண்டவன் என்ற நெய்யூர் மக்களின் மனப்போக்கு மத்தியில் தனிமைப்படுத்தப்பட்டு நின்றவர் திரு சி. சான் சாமுவேல் என்பது வியக்கத்தக்கது..

பள்ளிப் படிப்பை முடித்து நாகர்கோவிலில் உள்ள இசுகாட்டு கிறித்தவக் கல்லூரியில் சேர்ந்தார். தமிழைச் சிறப்புப் பாடமாக எடுத்துப் படித்தார். அதனால் மற்றக் கல்லூரி மாணவர்களை விட அதிகமாகத் தமிழை பகிரும் வாய்ப்பு கிட்டியது. தமிழ்ப் பேராசிரியர் திரு சேது இராமு ஐயர் வகுப்பில் பாடம் நடத்தும் போது உ. வே. சாமிநாத ஐயர் எழுதிய ”உதிர்ந்த மலர்கள்” என்ற கட்டுரையைப் பாடமாக நடத்தி இருக்கிறார். அந்தக் கட்டுரையில் பத்துப் பாட்டுள் ஒன்றான குறிஞ்சிப் பாட்டினை ஓலைச் சுவடியிலிருந்து பதிப்பிக்க முனைவர் உ வே சாமிநாதையர் அவர்கள் மேற்கொண்ட கடினமான முயற்சிகளை மாணவர்களது உள்ளங்கள் கவரும் வண்ணம் விளக்கி இருந்தார். ஆனால் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஆங்கிலக் கலாசார மோகம் ஆட்டிப்படைத்து இருந்தது. பேராசிரியர் திரு சேது இராமு ஐயர் வேட்டியுடனும் சிப்பாவும் குடுமியமாக கல்லூரிக்கு வந்தது மாணவர்களின் கலாட்டா கேலி பேச்சுகளுக்கு உள்ளானார். அதனால் பேராசிரியரைப் பற்றிய கேலிப் பேச்சுகளை வெறுத்து ஒதுக்கிய திரு சான் சாமுவேல் அவர்கள் பேராசிரியரின் பாடத்திற்கு உள்ளே கவனத்தை செலுத்தினார்.. பேராசிரியரின் பாடம் பச்சை மரத்தில் பதிந்த பசுமரத்தாணி போல் மாணவர் சான் சாமுவேலின் மனதில் ஆழமாகப் பதிந்தது. குறிஞ்சிப் பாட்டில் 99 மலர்கள் பற்றிய பட்டியல் இசையோடும் அருமையான பெயர் அடைகளோடும் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் 99 மலர்களைக் குறிப்பிட்ட ஏடுகள் முதல் முயற்சியில் கிடைக்கவில்லை. இதில் நான்கு மலர்களின் பெயர்கள் ஏடுகளில் இல்லை. இந்த நான்கு மலர்களின் பெயர்களை அறிந்து கொள்ள அந்த ஏடுகளைத் தேடி உ.வே.சா. அலைந்தார். அயராத முயற்சியில் அந்த நான்கு மலர்களின் பெயர்களைத் தாங்கிய ஏடுகளும் கிடைத்தன. ஆனால் குறிஞ்சிப்பாட்டில் இந்த நான்கு மலர்களும் சேர்த்து மொத்தம் 99 மலர்களின் பெயர்கள் மட்டுமா உள்ளன? மேற்கொண்டு மலர்கள் பெயர் உள்ளதா? என்று ஆய்விற்காக மீண்டும் ஏடுகளைத் தேடி அலைந்தார். தமிழ்த் தாத்தா உவேசா ஓலைச்சுவடிகளைத் தேடி அலைந்து கிடைத்த ஓலைச்சுவடிகளைப் பாதுகாத்து அச்சுப் படியாக நூலாகப் பதிப்பித்து வெளியிட்டது போன்ற பணிகள் பச்சை மரத்தில் பதித்த பசுமரத்தாணி போல் மாணவர் சான் சாமுவேலின் மனத்தில் ஆழமாகப் பதிந்தது.

நாமும் ஓலைச்சுவடிகளைத் தேடி சேகரித்தால் என்ன? என்ற ஆர்வம் திரு சி. சான் சாமிவேல் என்ற அந்த மாணவருக்குத் தலைதூக்கியது. பின்னர் பி.ஏ இளங்கலை பட்டத்தை நாகர்கோவில் இந்து கல்லூரியில் முடித்தார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ தமிழ் இலக்கியம் சேர்ந்து படித்துக் கொண்டிருந்த காலத்தில் தான் ஓலைச்சுவடிகளை தேடிச் சேகரிக்க வேண்டும் என்ற தனது எண்ணங்களுக்கு வடிவத்தை திரு. சான் சாமுவேல் உண்டாக்கினார். மேலும் இதே காலகட்டத்தில் தான் உ.வே. சாமிநாதையருக்கு எந்த வகையிலும் குறையாமல் விளம்பரம் இன்றி யாழ்ப்பாணத்து தமிழ்ப் புலவர்களின் ஓலைச்சுவடிகளைத் தேடி சேகரித்து பாதுகாக்கும் அளப்பரிய பணி என் பார்வைக்கு வெளிப்பட்டது என்று திரு. சான் சாமுவேல் தனது நூலில் பதிவு செய்கிறார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ படித்து முடித்தவுடன் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

மதுரையில் அமெரிக்கன் கல்லூரியில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய காலத்தில் நான்காம் தமிழ்ச் சங்கம் செயல்படுகின்ற செந்தமிழ்க் கல்லூரிக்குச் சென்றும், ஓலைச் சுவடிகளைப் பார்வையிட்டார்.

ஆனால் தொடர்ச்சியான ஓலைச் சுவடிகளைச் சேகரித்துப் பாதுகாக்கும் தனது தலையாய கனவை மெய்பிக்கும் முயற்சியிலிருந்து பின்வாங்கத் தொடங்கினார். இவரது பார்வை ஆங்கில இலக்கியம் கற்பதில் சென்றது. பெரும்பகுதி நேரத்தை முதுகலை ஆங்கில இலக்கியம் படிப்பதில் செலவிட்டார்.

இவர் தனது மனத்தில் தேக்கி வைத்திருந்த கனவுகள் இவரை ஊக்கப்படுத்தி சென்னையில் உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தில் பணியில் சேரத் தூண்டுகோலாக இருந்தன. சுவடி பதிப்பித்தல், சுவடியியல். தொடர்பான வகுப்புகள் நடத்துதல் ஆகிய முயற்சிகள் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் செயல் வடிவம் பெறத் தொடங்கின.

இங்கே பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில்தான் “ஆசியவியல் ஆய்வு“ நிறுவனம் என்ற ஓர் ஆராய்ச்சி நிறுவனத்தை அமைப்பதற்குரிய திட்டங்கள் அவரது மனத்தில் செயல் வடிவம் கொண்டன. தமிழ் ஓலைச் சுவடிகளின் ஆய்வில் ஈடுபட்டு வியத்தகு சாதனைகள் புரிந்து உலக நாடுகளின் பாராட்டுதலைப் பெற வேண்டும் என்ற மிகையான கனவு “ஆசியவியல் ஆய்வு” நிறுவனத்திற்கான திட்டமிடுதலைத் தூண்டினாலும், ஓலைச் சுவடிகள் ஆய்வு பற்றிய துறையில் திரு சான் சாமுவேல் அவர்களுக்குத் தெளிவு ஏற்படவில்லை. உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த திரு மு.கோ. இராமன், பேராசிரியர் மு.சண்முகம் பிள்ளை ஆகியோர் இவருக்குத் தெளிவு ஏற்படுத்தி நெறிப்படுத்தினார்கள்.

முனைவர் உ.வே.சாமிநாதையர் நூலகத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமிக்க திரு.மு.கோ. இராமன் என்ற தமிழ் அறிஞர் தமிழ் ஓலைச் சுவடிகள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் தெரிந்து வைத்திருந்தார். ஓலைச் சுவடிகள் அச்சு நூல்களாகப் பதிப்பிக்கப்படாமல் கரையானின் கொடிய வாய்க்கும், இயற்கையின் சீற்றத்திற்கும், மனிதனின் மூட நம்பிக்கைக்கும் நாள்தோறும் இரையாகிக் கொண்டிருக்கும் அவலநிலையைத் திரு மு.கோ.இராமன் அவர்கள் திரு சான் சாமுவேல் அவர்களிடம் பேசித் தமிழ் மொழியின் அறிவுச் செல்வங்கள் அழிவதைப் பற்றிய அவலநிலையை உணர்த்தினார்.

திரு சான் சாமுவேல் அவர்களது மனத்தில் விதைத்த விதையானது விருட்சமாகத் தொடங்கியது. தமிழ் ஓலைச் சுவடிகளைப் “பாதுகாத்தல்” , “படியெடுத்தல்” , “பதிப்பித்தல்”, ”மொழிபெயர்த்தல்”, மூல ஏடுகளை ஒப்புநோக்கி ஆய்தல் என்ற நிலையில் பன்முக ஆய்வுத் திட்டமொன்றை மிக விரிவாகத் திரு சான் சாமுவேல் தயாரித்தார். இதன் பின்னர் 1982ஆம் ஆண்டு “ஆசியவியல் ஆய்வு” நிறுவனம் பிறப்பெடுத்தது.

(தொடரும்)
குலோத்துங்கன்தோழர் தியாகு
தாழி மடல் 304


வியாழன், 30 நவம்பர், 2023

தோழர் தியாகு பகிர்கிறார் : உதிரும் தமிழ் மலர்கள் 1/4 – குலோத்துங்கன்

 





(தோழர் தியாகு எழுதுகிறார் : கல்லூரியில் சாதி விளையாட்டு-தொடர்ச்சி)

உதிரும் தமிழ் மலர்கள் (ஓலைச் சுவடிகள்)

உதிரும் தமிழ் மலர்கள் 2/4


பக்தி இயக்கம் எழுந்தபோது சமயக் காழ்ப்பின் காரணமாகப் பல ஏடுகள் எரிக்கப்பட்டன என்ற வரலாறு உண்டு. ஆனால் சமண சமயத்தைத் தழுவிய மக்களின் வீடுகளில் அத்தகைய ஏடுகள் பாதுகாக்கப்பட்டு வந்தன. பிற்காலத்தில் ஆதீன மடங்களிலும், சமண சமயத்தின் மீது இருந்த காழ்புணர்ச்சி நீங்கி சமண சமய இலக்கிய ஏடுகளையும் பாதுகாத்தார்கள் என்பது வரலாறு..

ஐரோப்பியர் ஆட்சி காலத்தில் பல ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த ஓலைச் சுவடிகளை சேகரித்துப் பாதுகாத்தார்கள் என்பதும் தனி வரலாறு. இவர்களுள் முக்கியமானவர் காலின் மெக்கன்ஷி ஆவார். தற்காலத்திலும் சுவடிகள் திரட்டும் பணியினை பல்வேறு நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. தமிழ்ப் பல்கலைக்கழகம் பல இடங்களில் உள்ள ஓலைச் சுவடிகளைப் பெற்றுப் பாதுகாத்து வருவதுடன் தனி நபர்களிடமிருந்தும் விலை கொடுத்தும் ஓலைச்சுவடிகளை வாங்கி சேகரித்து வருகின்றார்கள். சென்னையில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், ஆசியவியல் ஆய்வு நிறுவனம் போன்ற பல்வேறு அமைப்புகளும் ஓலைச்சுவடிகள் திரட்டும் பணியில் தற்போது ஈடுபட்டுப் பல அரிய தமிழ்ச் சுவடிகளை அழிவிலிருந்து காத்து வருகின்றன.

ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்கும் நிறுவனங்களில் ஆசியவியல் ஆய்வு நிறுவனம் மிகவும் குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனமே ஓலைச் சுவடிகளை சேகரித்து நூலாகப் பதிப்பிக்கும் போற்றுதலுக்குரிய பணியைச் செய்து வருகிறது.

முனைவர் ஜி. ஜான் சாமுவேல் 1982இல் ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தை ஏற்படுத்தினார். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் நெய்யூர் என்ற சிற்றூரில் பிறந்தார் குமரி மாவட்டத்தில் உள்ள ஊர்களில் மேற்கத்திய நாட்டு மொழி, கலாச்சாரம் அதிகமாகப் பாதித்த ஊர்களில் நெய்யூர் முதன்மையான இடத்தைப் பிடித்தது. தமிழ் மொழியின் தொன்மையான கலை இலக்கியம் பண்பாடு அனைத்தும் ஊர் மக்களின் நினைவுத் திரையில் சீரழிந்த சிறப்பிலந்த ஓவியங்களாக முடங்கி விட்டன. ஆங்கிலம் பேசத் தெரிந்தவன் மட்டுமே அறிஞன், மேற்கத்திய கலாச்சாரத்தில் வளர்ந்தவன் மட்டுமே உயர்ந்த நாகரிக மதிப்பீடுகளைக் கொண்டவன் என்ற நெய்யூர் மக்களின் மனப்போக்கு மத்தியில் தனிமைப்படுத்தப்பட்டு நின்றவர் திரு ஜி. ஜான் சாமிவேல் என்பது வியக்கத்தக்கது..

பள்ளிப் படிப்பை முடித்து நாகர்கோவிலில் உள்ள ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் சேர்ந்தார். தமிழை சிறப்பு பாடமாக எடுத்துப் படித்தார். அதனால் மற்றக் கல்லூரி மாணவர்களை விட அதிகமாகத் தமிழை பகிரும் வாய்ப்பு கிட்டியது. தமிழ்ப் பேராசிரியர் திரு சேது ராமு ஐயர் வகுப்பில் பாடம் நடத்தும் போது உ. வே. சாமிநாத ஐயர் எழுதிய ”உதிர்ந்த மலர்கள்” என்ற கட்டுரையைப் பாடமாக நடத்தி இருக்கிறார். அந்தக் கட்டுரையில் பத்துப் பாட்டுள் ஒன்றான குறிஞ்சிப் பாட்டினை ஓலைச் சுவடியிலிருந்து பதிப்பிக்க டாக்டர் உ வே சாமிநாதையர் அவர்கள் மேற்கொண்ட கடினமான முயற்சிகளை மாணவர்களது உள்ளங்கள் கவரும் வண்ணம் விளக்கி இருந்தார். ஆனால் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஆங்கிலக் கலாசார மோகம் ஆட்டிப்படைத்து இருந்தது. பேராசிரியர் திரு சேது ராமு ஐயர் வேட்டியுடனும் ஜிப்பாவும் குடுமியமாக கல்லூரிக்கு வந்தது மாணவர்களின் கலாட்டா கேலி பேச்சுகளுக்கு உள்ளானார். அதனால் பேராசிரியரைப் பற்றிய கேலிப் பேச்சுகளை வெறுத்து ஒதுக்கிய திரு ஜான் சாமுவேல் அவர்கள் பேராசிரியரின் பாடத்திற்கு உள்ளே கவனத்தை செலுத்தினார்.. பேராசிரியரின் பாடம் பச்சை மரத்தில் பதிந்த பசுமரத்தாணி போல் மாணவர் ஜான் சாமுவேலின் மனதில் ஆழமாகப் பதிந்தது. குறிஞ்சிப் பாட்டில் 99 மலர்கள் பற்றிய பட்டியல் இசையோடும் அருமையான பெயர் அடைகளோடும் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் 99 மலர்களைக் குறிப்பிட்ட ஏடுகள் முதல் முயற்சியில் கிடைக்கவில்லை. இதில் நான்கு மலர்களின் பெயர்கள் ஏடுகளில் இல்லை. இந்த நான்கு மலர்களின் பெயர்களை அறிந்து கொள்ள அந்த ஏடுகளைத் தேடி உ.வே.சா. அலைந்தார். அயராத முயற்சியில் அந்த நான்கு மலர்களின் பெயர்களைத் தாங்கிய ஏடுகளும் கிடைத்தன. ஆனால் குறிஞ்சிப்பாட்டில் இந்த நான்கு மலர்களும் சேர்த்து மொத்தம் 99 மலர்களின் பெயர்கள் மட்டுமா உள்ளன? மேற்கொண்டு மலர்கள் பெயர் உள்ளதா? என்று ஆய்விற்காக மீண்டும் ஏடுகளைத் தேடி அலைந்தார். தமிழ்த் தாத்தா உவேசா ஓலைச்சுவடிகளைத் தேடி அலைந்து கிடைத்த ஓலைச்சுவடிகளைப் பாதுகாத்து அச்சுப் பிரதியாக நூலாக பதிப்பித்து வெளியிட்டது போன்ற பணிகள் பச்சை மரத்தில் பதித்த பசுமரத்தாணி போல் மாணவர் ஜான் சாமுவேலின் மனதில் ஆழமாக பதிந்தது.

நாமும் ஓலைச்சுவடிகளைத் தேடி சேகரித்தால் என்ன? என்ற ஆர்வம் திரு ஜி. ஜான் சாமிவேல் என்ற அந்த மாணவருக்குத் தலைதூக்கியது. பின்னர் பி.ஏ இளங்கலை பட்டத்தை நாகர்கோவில் இந்து கல்லூரியில் முடித்தார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ தமிழ் இலக்கியம் சேர்ந்து படித்துக் கொண்டிருந்த காலத்தில் தான் ஓலைச்சுவடிகளை தேடி சேகரிக்க வேண்டும் என்ற தனது எண்ணங்களுக்கு வடிவத்தை திரு. ஜான் சாமுவேல் உண்டாக்கினார். மேலும் இதே காலகட்டத்தில் தான் உ.வே. சாமிநாதையருக்கு எந்த வகையிலும் குறையாமல் விளம்பரம் இன்றி யாழ்ப்பாணத்து தமிழ் புலவர்களின் ஓலைச்சுவடிகளை தேடி சேகரித்து பாதுகாக்கும் அளப்பரிய பணி என் பார்வைக்கு வெளிப்பட்டது என்று திரு. ஜான் சாமுவேல் தனது நூலில் பதிவு செய்கிறார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ படித்து முடித்தவுடன் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றினார்.

மதுரையில் அமெரிக்கன் கல்லூரியில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய காலத்தில் நான்காம் தமிழ்ச் சங்கம் செயல்படுகின்ற செந்தமிழ்க் கல்லூரிக்குச் சென்றும், ஓலைச் சுவடிகளைப் பார்வையிட்டார்.

ஆனால் தொடர்ச்சியான ஓலைச் சுவடிகளைச் சேகரித்துப் பாதுகாக்கும் தனது தலையாய கனவை மெய்பிக்கும் முயற்சியிலிருந்து பின்வாங்கத் தொடங்கினார். இவரது பார்வை ஆங்கில இலக்கியம் கற்பதில் சென்றது. பெரும்பகுதி நேரத்தை முதுகலை ஆங்கில இலக்கியம் படிப்பதில் செலவிட்டார்.

இவர் தனது மனதில் தேக்கி வைத்திருந்த கனவுகள் இவரை ஊக்கப்படுத்தி சென்னையில் உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தில் பணியில் சேரத் தூண்டுகோலாக இருந்தன. சுவடி பதிப்பித்தல், சுவடியியல். தொடர்பான வகுப்புகள் நடத்துதல் ஆகிய முயற்சிகள் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் செயல் வடிவம் பெறத் தொடங்கின.

இங்கே பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில்தான் “ஆசியவியல் ஆய்வு“ நிறுவனம் என்ற ஓர் ஆராய்ச்சி நிறுவனத்தை அமைப்பதற்குரிய திட்டங்கள் அவரது மனத்தில் செயல் வடிவம் கொண்டன. தமிழ் ஓலைச் சுவடிகளின் ஆய்வில் ஈடுபட்டு வியத்தகு சாதனைகள் புரிந்து உலக நாடுகளின் பாராட்டுதலைப் பெற வேண்டும் என்ற மிகையான கனவு “ஆசியவியல் ஆய்வு” நிறுவனத்திற்கான திட்டமிடுதலைத் தூண்டினாலும், ஓலைச் சுவடிகள் ஆய்வு பற்றிய துறையில் திரு ஜான் சாமுவேல் அவர்களுக்குத் தெளிவு ஏற்படவில்லை. உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த திரு மு.கோ. இராமன், பேராசிரியர் மு.சண்முகம் பிள்ளை ஆகியோர் இவருக்குத் தெளிவு ஏற்படுத்தி நெறிப்படுத்தினார்கள்.

டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூலகத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமிக்க திரு.மு.கோ. இராமன் என்ற தமிழ் அறிஞர் தமிழ் ஓலைச் சுவடிகள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் தெரிந்து வைத்திருந்தார். ஓலைச் சுவடிகள் அச்சு நூல்களாகப் பதிப்பிக்கப்படாமல் கரையானின் கொடிய வாய்க்கும், இயற்கையின் சீற்றத்திற்கும், மனிதனின் மூட நம்பிக்கைக்கும் நாள்தோறும் இரையாகிக் கொண்டிருக்கும் அவலநிலையை திரு மு.கோ.இராமன் அவர்கள் திரு ஜான் சாமுவேல் அவர்களிடம் பேசித் தமிழ் மொழியின் அறிவுச் செல்வங்கள் அழிவதைப் பற்றிய அவலநிலையை உணர்த்தினார்.

திரு ஜான் சாமுவேல் அவர்களது மனத்தில் விதைத்த விதையானது விருட்சமாகத் தொடங்கியது. தமிழ் ஓலைச் சுவடிகளைப் “பாதுகாத்தல்” , “படியெடுத்தல்” , “பதிப்பித்தல்”, ”மொழிபெயர்த்தல்”, மூல ஏடுகளை ஒப்புநோக்கி ஆய்தல் என்ற நிலையில் பன்முக ஆய்வுத் திட்டமொன்றை மிக விரிவாக திரு ஜான் சாமுவேல் தயாரித்தார். இதன் பின்னர் 1982ஆம் ஆண்டு “ஆசியவியல் ஆய்வு” நிறுவனம் பிறப்பெடுத்தது.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 304