செவ்வாய், 10 ஜூன், 2014

செங்கொடி ஊடகம் புதிய இணையத் தளம்

செங்கொடி ஊடகம் (செங்கொடிமீடியா டாட் காம்) புதிய இணையத் தளம்

கவிஞர் காசி ஆனந்தன் தொடங்கி வைத்தார்!
kasiananthan_sengodi_innagurate01
செங்கொடி வெளியீட்டு நடுவத்தின், sengodimedia.com என்ற இணைய தளம் இன்று (7.6.2014) உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
இணையப் பயன்பாடு, இணைய வழி வணிகம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே  கொண்டே வருகிறது. இக் காலக்கட்டத்தில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை இணையம் மூலம் ஒன்றிணைப்பதும்,  இணையவழி வணிகத்தை ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்துவதும் இன்றியமை யாதது.
இதனடிப்படையில், செங்கொடி வெளியீட்டு நடுவம் என்ற தயாரிப்பு நிறுவனம் sengodimedia.com என்ற இணையத் தளத்தை உருவாக்கி உள்ளது. தமிழர் நலன் சார்ந்து உலகம் முழுவதும் இருந்து வெளிவரும் புத்தகங்கள், ஆவணப்படம்-குறும்படப்பேழைகள் இந்த இணையத் தளத்தில் அறிமுகப்படுத்தப் பட்டு, விற்பனை செய்யப்படும்.
sengodimedia.com இணையத் தளத்தில் இடம்பெறும் புத்தகங்கள் பேழைகளை இணைய வழி பணம் செலுத்திப் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொலைப் பேசி, மின்னஞ்சல் மூலமாகவும் விரைவாக தங்களுக்கு வேண்டிய புத்தகங்கள், பேழைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் sengodimedia.com இணையத் தளத்தை உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
அத்துடன் “தமிழர் நலனை முன்னிறுத்தி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை ஒன்றிணைக்கும் புதிய முயற்சி இது” என்று பாராட்டினார்.  இந் நிகழ்வில் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் கவிபாசுகர் முதலான பலர் பங்கேற்றனர்.
மேலும் இந்த இணையத் தளத்தில் கட்டுரைகள், கதைகள் முதலானபடைப்புகளும் இடம்பெறுவதால் ஆர்வமும் விருப்பமும் உள்ளவர்கள் தங்கள் படைப்புகளை senkodimedia@gmail.com அல்லது info@sengodimedia.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்.
[செங்கொடித்தளத்தில் பதிவுகள் பல உள்ளன. ஆனால், திறக்க இயலவில்லை. உங்களுக்கும் அந்த நிலை எனில், மின்னஞ்சலில் உரியவர்களிடம் தொடர்பு கொள்ளுங்கள்.]

அகரமுதல இதழ் 30
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக