வியாழன், 31 மே, 2012

ஐரோப்பியப் புலம்பெயர் வாழ் தமிழ்மக்களுக்கான ஓர் அவசர வேண்டுகோள்!

ஐரோப்பிய புலம்பெயர் வாழ் தமிழ்மக்களுக்கான ஓர் அவசர வேண்டுகோள்!

TCC UK
பிரித்தானியாவில் உள்ள மான்சன் கவுஸில் (Mansion House) எதிர்வரும் யூன் மாதம் 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் (நேரம்: 09:00 தொடக்கம் 17:00) பொருளாதார மன்றம் நடைபெறவுள்ளது.
அந்த மன்றத்தில் உரையாற்றவிருக்கும் கொலைகாரன் மகிந்த ராஜபக்சவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு பொதுநலவாய வர்த்தக மன்றத்திற்கு கோரிக்கை விடுக்குமுகமாக புகார்செய்ய ஆங்கிலம் பேசத்தெரிந்த அனைவரும் உடனடியாக பின்வரும் தொலைபேசி இலக்கங்களினூடாகத் தொடர்புகொள்ளவும்: (44)2070248200 – (44)2070248239 – (44)2070248271
அதேவேளை, அன்றைய நாட்களில் எமது அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக கண்டன ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நாடாத்துவதற்கு பிரித்தானிய வாழ் தமிழ்மக்கள் ஒழுங்குகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்களுக்குத் துணைசேர்க்கும் வகையிலும் அனைத்து ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் அந்த பேரணியில் கலந்துகொள்ளுமாறு எமது மக்கள் அனைவரும் கேட்டுக்கொள்ளப் படுகின்றீர்கள்.
நன்றி.
மேலதிக தொடர்புகளிற்கு:-
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
பிரித்தானியா: 0044 75 50 33 64 14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக