புதன், 18 ஜனவரி, 2012

இதிலும் புதுமையா?

இதிலும் புதுமையா?

First Published : 15 Jan 2012 12:00:00 AM IST


ஆப்பிரிக்காவிலுள்ள கானா நாட்டைச் சேர்ந்த சவப்பெட்டி செய்யும் கலைஞர் அண்மையில் இங்கிலாந்தில் நடத்திய கண்காட்சி உலகப் புகழ் பெற்றுவிட்டது. சவப்பெட்டியில் அப்படி என்ன புகழ் என்று கேட்கிறீர்களா? நமக்கு அதிகம் விருப்பமான விமானம், செல்போன், அன்னாசிப்பழம், திமிங்கலம், கார், குளிர்பான பாட்டில்கள் உள்ளிட்ட பல்வேறு உருவங்களைப் போன்று சவப்பெட்டியை இவர் தயாரித்து காட்சிக்கு வைத்திருந்தார். ""1950-ம் ஆண்டில் இருந்து இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளேன். நான் இதுபோன்று பல உருவங்களில் சவப்பெட்டியைச் செய்வதால், எங்கள் பழங்குடியின இனத்தில் இறப்பு, பண்டிகை போன்று கொண்டாடப்படுகிறது. விமானம்தான் நான் முதலில் செய்த உருவம். அதை வாங்கிச் சென்றவர் "இதுவரைக்கும் விமானப்பயணம் எனக்கு வாய்க்கவில்லை. நான் இறந்த பின்பாவது இந்த விமானத்தில் பயணிக்கிறேன்' என்று சொல்லி வாங்கிச் சென்றார்'' என்கிறார் அந்தக் கலைஞர். இங்கிலாந்தில் நடைபெற்ற கண்காட்சியில் இவருக்கு எக்கச்சக்க ஆர்டர்கள் குவிந்துவிட்டனவாம். வாழைப்பழம், ரோபோ போன்ற உருவங்களுக்கான ஆர்டர்கள்தான் அதிகமாக குவிகிறதாம் இவருக்கு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக