சனி, 2 ஜூலை, 2011

srilanka fraud video against Channel 4 news "அலைவரிசை 4" ஆதாரத்திற்கு எதிராக இலங்கை அரசு காணொளி வெளியீடு

சிங்களத் தலைவர் விக்கிரமபாகு ௧௫௦,௦௦௦ தமிழர்கள் கொல்லப்பட்டதை வெளிப்படுத்தி உள்ளார். அவ்வாறிருக்க - சிங்களர்களே ஒப்புக் கொள்ளும் உண்மையை  மறைக்க -  உலகை ஏமாற்ற அயலகத் துணையுடன் சிங்களம் சதிச் செயலில் ஈடுபடுகிறது. இந்தியாவும் ஆமாம் போடும். என்றாலும் கொலைபாதகர்கள் விரைவில் தண்டிக்கப்படுவர்.மலர்க மனித நேயம்! வெல்க தமிழ் ஈழம்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
 
"சேனல் 4" ஆதாரத்திற்கு எதிராக இலங்கை அரசு விடியோ வெளியீடு

First Published : 02 Jul 2011 04:14:14 PM IST

Last Updated : 02 Jul 2011 04:16:26 PM IST
Publish Post

கொழும்பு, ஜூலை 2- இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பாக "சேனல் 4" தொலைக்காட்சி வெளியிட்ட விடியோ காட்சிகளுக்கு போட்டியாக இலங்கை அரசு ஒரு விடியோவை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.இலங்கை அரசுக்கு சொந்தமான ஸ்வர்ணவாகினி தொலைக்காட்சியில் நேற்றிரவு இந்த விடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது."சேனல் 4" வெளியிட்ட விடியோவில் இலங்கை ராணுவத்தினர் சிங்களத்தில் பேசியபடி தமிழர்களை சுட்டுக் கொல்வது காட்டப்பட்டது. இந்நிலையில், இலங்கை அரசு வெளியிட்டுள்ள விடியோவில் சீருடை அணிந்தவர்கள் தமிழில் பேசியபடி ஆண்களையும் பெண்களையும் சுட்டுக் கொல்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது."நாங்கள் வெளியிட்டுள்ள விடியோ தான் மூலப் பிரதி" என்று இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் உபய மெடவெல கூறியுள்ளதாக இலங்கை தமிழ் இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன."சேனல் 4" வெளியிட்டுள்ள விடியோ சர்வதேச அளவில் இலங்கைக்கு பெரும் நெருக்கடி ஏற்படுத்தியுள்ள நிலையில், இலங்கை அரசு போலியான விடியோவை வெளியிட்டுள்ளதாக அந்த இணையதளச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்

நீ என்ன வேணும்னாலும் பண்றா கொய்யாலே - நீ மண்ட செதறித்தான் சாவ -
By கௌரி
7/2/2011 8:26:00 PM
இலங்கை, இந்தியாவின் காலடியில் தான் கிடக்கிறது என்ற உண்மை, அந்த நாட்டுக்கு இன்னும் புரியவில்லை. தமிழர்களின் பொறுமை, என்னவென்று அதற்கு புரியவும் இல்லை. மயிலை பார்த்து, வான்கோழி நடனம் ஆட கூடாது. வேடதாரியை, உலக மக்கள் நம்ப மாட்டார்கள்.
By P.T.முருகன், திருச்சி
7/2/2011 7:46:00 PM
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பாக "சேனல் 4" தொலைக்காட்சி வெளியிட்ட விடியோ காட்சிகளில் 'இலங்கை ராணுவத்தினர் சிங்களத்தில் பேசியபடி தமிழர்களை சுட்டுக் கொல்வது காட்டப்பட்டது.' *கொலையை நேரில் கண்ட சாட்சி* என சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டு வருகிறது! இந்நிலையில், இலங்கை அரசு சீருடை அணிந்தவர்கள் தமிழில் பேசியபடி ஆண்களையும் பெண்களையும் சுட்டுக் கொல்வது போன்ற காட்சி இடம்பெற்று வெளியிட்டுள்ள விடியோ கொலையை பார்க்காதவர்களை ஆஜர் செய்து உலகை ஏமாற்றி கொலைகாரனை காப்பாற்ற முயற்சிக்கும் விசித்திரமான நடவடிக்கையாகத் தான் தெரிகிறது! நீதிமன்றங்களில் விசாரித்துத்தான் உண்மையை கண்டறிவார்களே தவிர ஜனநாயக ரீதியில் பெரும்பான்மை பார்த்து நீதி வழங்குவதில்லை!
By பொன்மலை ராஜா
7/2/2011 5:24:00 PM
இந்த விடியோவை முன்னாலே வெளீடு செய்து இருக்கலாமே ?ஏன் ,சானல் 4 ,வெளியட்ட பிறகு ,உண்மையை மறைக்க ,வேஷம் போடு கிறது ஸ்ரீலங்கா அரசு.
By கீஷ்டு
7/2/2011 5:20:00 PM
என்ன கொடுமையான நிலைமை ஈழதமிழனுக்கு இதுல்லாம் எபோது முடியுமோ,இதை எல்லாம் பார்க்கும் போது கடவுள் என்பது இல்லை என்று தோன்றுகிறது .
By அஜய்
7/2/2011 4:45:00 PM
ஹ ஹ ஹ மிக சிறந்த டப்பிங் லங்காவுக்கு கை வந்த கலை ஒரு வகையில் அங்கு எதோ நடந்து இருக்கிறது என்பதை உறுதி செய்கிறது இவர்களின் இந்த வெளிவிடல்
By அசு
7/2/2011 4:34:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக