சனி, 2 ஜூலை, 2011

இலங்கை இறுதிப்போரில் 1.50 லட்சம் பேர் கொல்லப்பட்டனர்: விக்கிரமபாகு

இலங்கை இறுதிப்போரில் 1.50 லட்சம் பேர் கொல்லப்பட்டனர்: விக்கிரமபாகு

First Published : 02 Jul 2011 11:54:00 AM IST


கொழும்பு, ஜூலை 2- இலங்கை இறுதிப்போரில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் கொல்லப்பட்டனர் என்று புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன கூறியுள்ளார்.மேலும், வடக்கு மற்றும் கிழக்குப் பகுதி மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்க ராஜபட்ச அரசு முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.இலங்கை அரசு தொடர்ந்து மெத்தனமாக இருந்தால், சர்வதேச அளவிலான தலையீடுகளை சந்திக்க நேரும் என்றும், இனவாதத்தை தூண்டும் அமைச்சர்களின் பேச்சை கேட்டு அதிபர் ராஜபட்ச செயல்படுகிறார் என்றும் விக்கிரமபாகு கருணாரத்ன கூறியுள்ளதாக இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்

இந்திய தமிழர்களுக்கு சினிமா மோகம் தான் பெரியதே ஒழிய மற்றவை எல்லாம் பொழுது போக்கு.சினிமா காரர்களுக்கு ஆட்சியை பிடிக்கவண்டும். தமிழக கட்சிகளுக்கு எம் எல் எ சீட்டு வேண்டும் தேசிய கட்சிகளுக்கு எம் பி மற்றும் எம்.எல்.ஏ சீட்டு க்கு யாருடன் கூட்டணி என்று வேலை தான் இப்படி உள்ள தமிழன் எப்படி இதையெல்லாம் கவனிக்க போகிறான்? .
By Gangadharan
7/2/2011 8:20:00 PM
பதவிப் பித்து பிடித்து உள்ளதால், இந்திய வளங்களை இத்தாலிக்கு சூறையாடி செல்லும் கடத்தல்காரியின் அடிவருடிகளாக மாறியுள்ள தமிழர்கள் முதலில் இந்த செய்தியை படிக்கட்டும்! ஒன்றரை லட்சம் உயிர்களை பணயம் வைத்து தாங்கள் சேர்த்துள்ள இரத்தக் கறை படிந்துள்ள சொத்துக்கள், 'நிலைக்குமா! அல்லது தம் நிம்மதியைக் குலைக்குமா!' என சற்றே சிந்தித்துப் பார்க்கட்டும்! கொடூர வெறியாட்டங்களினால் பாதிப்பு அடைந்த மக்களின் இரத்தப் பழி இன்னும் உங்களை மட்டுமல்லாது உங்கள் தலைமுறையை பீடித்து நீடிக்க வேண்டுமா! செய்த தவறுகளுக்கு, துரோகத்திற்கு துணை போனதற்கு மனம் வருந்தி, திருந்தி பிராயச்சித்தம் தேடுங்கள்! அதற்காக மனித நேயத்துடனும், இன உணர்வுடனும் நெடுமாறன், வைகோ போன்ற தலைவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் முழு மனதுடன் ஆதரவு தந்து, ஓரணியில் நின்று செயல்படுங்கள்!
By பொன்மலை ராஜா
7/2/2011 5:02:00 PM
கொலைகாரி சோனியா அரசில் வேறு எதை எதிர் பார்க்க முடியும் - சுளிக்கி
By sulikki
7/2/2011 3:33:00 PM
நன்றி அய்யா, கழிசடை மகிந்தவிற்கு நன்கு உறைக்கும்படி சொன்னதற்கு கோடானகோடி நன்றி. ஒன்றரை மணிநேரம் உண்ணாநிலைப் போராட்டம் செய்துவிட்டு போர்நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்றுரைத்த தமிழினக் காவலர்கள் எம்மினத்திற்கு தலைவர்களாக இருக்கும்போது ஒன்றரை இலட்சம் என்ன ஒன்றரை கோடிதமிழர் மாண்டாலும் கேட்க நாதியில்லை. ஆனால் வெடித்துச் சிதறும்முன் உள்ளுக்குள் கொதிக்கும் எரிமலைக் குழம்புபோல் குமுறிக்கொண்டிருக்கும் தூயத்தமிழரின் நெஞ்சத்து விம்மல்கள் ஓர்நாள் நெருப்பு ஊற்றாய் சீறிப்பாயும். அப்போது தமிழினப் பகைவர்கள் எரிமலைக்குழம்பின் அடியில் அகப்பட்ட புழு பூச்சிகளைப்போல் கருகி அருகிப்போவர். நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கை.
By குமரிநாடான்
7/2/2011 2:54:00 PM
புத்த நெறி பேசும் சிங்களவர்களை உண்மையாகவே புத்த நெறிப்படுத்தி, மண்ணின் மைந்தர்களான தமிழ் மக்கள் தன்னுரிமையுடன் தமிழ் ஈழ அரசில் வாழ இவரைப்போன்ற தலைவர்கள் முன் வர வேண்டும். ஓங்குக மனித நேயம்! வெல்க தமிழ் ஈழம்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
By Ilakkuvanar Thiruvalluvan
7/2/2011 12:51:00 PM
முதுகு எல்லும்பு இல்லாத காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் வரை தமிழர்கள் நிமிர்ந்து நிக்க முடியாது
By sathish
7/2/2011 12:15:00 PM
ஓர் இனத்தையே மிகப்பெரிய அளவில் அழித்தவன் ஹிட்லர்.60 லட்சம் யூதர்களைக் கொன்றான் என்று கூறுகிறது வரலாறு.அவனுக்கு ஏற்பட்ட கதி தற்கொலை. இறுதிப்போரில் மட்டும் ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்றிருக்கிறான் ராஜபட்சே. மொத்தத்தில் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை எவ்வளவோ?உலகம் துடிக்கும்போது இந்தியா மவுனம் சாதிக்கிறது.ஹிட்லருக்கு ஏற்பட்ட கதியை எண்ணியாவது சிங்களர் திருந்தட்டும்.தமிழர்களுக்கு சம உரிமை தரட்டும்.இல்லாவிட்டால் காலம் தன கடமையை செய்தே தீரும்.
By இராம.பில்லப்பன்
7/2/2011 12:14:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக