சனி, 11 ஜூன், 2011

D.M.K. will continue with cong. : காங்கிரசுக் கூட்டணியில் நீடிப்போம்: திமுக முடிவு

நான் முன்னரே குறிப்பி்ட்டவாறு எதிர்பார்த்த முடிவுதான். கனிமொழி கைது குறித்து மட்டும் போராட்டம் நடத்தினால் வரவேற்பு இருக்காது; நீதிமன்ற அவமதிப்பு ஆகலாம் என்பதால் பத்தோடு ஒன்றாக ஒரு தீர்மானத்தை இயற்றித் தீர்மான விளக்கம் என்ற பெயரில் அதற்கு முதன்மை கொடுக்கும் முயற்சியே இது.  மக்களிடையே கொண்டு செல்லாமல் சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளித்து உரிய நடவடிக்கை எடுப்பின் நன்று. அல்லது அலைக்கற்றை ஊழலின் முதன்மைக் குற்றவாளிகளையாவது பகிரங்கப்படுத்த வேண்டும். அவர்கள் வெளியில் இருக்க, இவர்கள் உள்ளே இருப்பது முறையல்ல என்றாவது புரிய வைக்கலாம்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

காங்கிரஸ் கூட்டணியில் நீடிப்போம்: திமுக முடிவு

First Published : 10 Jun 2011 07:33:47 PM IST

Last Updated : 10 Jun 2011 07:45:52 PM IST

சென்னை, ஜூன் 10- காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்து நீடிப்போம் என்று திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுவின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.சென்னை அண்ணா அறிவாலயத்தில், இன்று மாலை நடைபெற்ற இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்:* காங்கிரஸ் கூட்டணியில் திமுக நீடிக்கும்* இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கக் கோரும் சட்டப்பேரவையின் தீர்மானத்திற்கு வரவேற்பு* 2 ஜி விவகாரத்தில் சிபிஐ.,க்கு கண்டனம்* சட்டமேலவை ரத்து செய்யப்பட்டதற்கு கண்டனம்* தலைமைச் செயலகத்தை மாற்றியதற்கு எதிர்ப்புஇவை உட்பட மொத்தம் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இத்தீர்மானங்களை விளக்கி திமுக சார்பில் ஜூன் 20-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டம் நடத்தப்படும்.
கருத்துகள்

போங்க அப்பா போங்க . தமிழன் தான் தீர்ப்பு சரியாய் எழுதிட்டானே இனியாவது தமிழனை உருப்படியா சிந்திக்க உடுங்க.
By சம்பு உங்கள் நண்பன்
6/10/2011 7:56:00 PM
We can now guess what T.R. Balu's might have discussed in the yesterday's meeting with PM. I believe he received an assurance from PM that bail for Kanimozhi will be given soon. That is why the DMK agreed to be continue the alliance with Congress. Let us wait and see the outcome of Kanimozhi's appeal to the Supreme Court.
By Subbu
6/10/2011 7:52:00 PM
காங்கிரஸ் கூட்டணியில் திமுக நீடிக்கும் என்று எடுத்த முடிவுடன், அமைச்சரவையிலிருந்து விலகி வெளியிலிருந்து ஆதரவை தொடரலாம் என்ற முடிவே சரியாக இருக்கும்.
By Gangadharan
6/10/2011 7:49:00 PM
உயர் மட்ட குழு உயர் மட்ட குழு அப்படின என்ன?
By valaikadal
6/10/2011 7:46:00 PM
dmk has taken this decision per force . they dont have any choice but to continue in upa. with out the alliance they will be politically orphaned. they are power monkers, with no power in tn they want to retain power in centre. but anycase things will change once dayanithi maran will be dropped from the cabinet for his involvement in 2g.
By viji varadan
6/10/2011 7:45:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக