வியாழன், 9 ஜூன், 2011

kanimozhi bail rejected - D.M.K. take an important decision :கனிமொழி பிணை மனு தள்ளுபடி: உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் திமுக நாளை முக்கிய முடிவு?

குடும்ப நலன்களுக்காகக் கழகத்தைக் குழி தோண்டி புதைக்காமல் விட மாட்டார்களா? தன் வழக்கைத்  தயாநிதி மாறனே பார்த்துக் கொள்வது போல் இதனையும் கனிமொழியின் பொறுப்பில் விட்டு விடவேண்டும். கட்சியை வழக்கில் திணிக்கக்கூடாது. கனிமொழிக்கு இருக்கும் நம்பிக்கை  தந்தைக்கு இல்லையா? இப்பொருண்மையில் இருந்துகட்சியை ஒதுக்கி வைக்க ஒதுக்கி வைக்கக் கட்சி வலுப்படும். இல்லையேல் குடும்பம் இரண்டுபடும்; கட்சி சிதைவுறும். உலகத்தமிழ் மக்கள் நலனுக்காகத தம் குடும்ப மக்கள் நலனில் இருந்து விடுபடுவாராக! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


கனிமொழி ஜாமீன் மனு தள்ளுபடி: உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் திமுக நாளை முக்கிய முடிவு?

First Published : 09 Jun 2011 05:03:53 AM IST


சென்னை ஜூன் 8: தில்லி உயர் நீதிமன்றத்திலும் கனிமொழிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ள நிலையில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் கருணாநிதி தலைமையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 10) மாலை கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் திமுக முக்கிய முடிவு எடுக்கும் என்று தெரிகிறது.  2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் கருணாநிதி மகள் கனிமொழி கைது செய்யப்பட்டு தில்லி திகார் சிறையில் உள்ளார். சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அவருடைய ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்ததை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.  தில்லி உயர் நீதிமன்றமும் அவரின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது.  இந்த நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுவின் அவசரக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் கருணாநிதி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாகத்தில் நடைபெறுகிறது.  பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் ஆர்க்காடு வீராசாமி, துணைப் பொதுச்செயலாளர்கள் துரைமுருகன்,பரிதி இளம்வழுதி, சற்குணபாண்டியன், தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி உள்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.  கூடா நட்பு: கருணாநிதி தனது பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசும்போது, "கூடா நட்பு, கேடாய் முடியும் என்பதைப் புரிந்துகொண்டு பயணத்தை மேற்கொள்ள வேண்டும்' என்று தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.  கூடா நட்பு என்று காங்கிரûஸத்தான் குறிப்பிட்டுச் சொன்னார் என்று சொல்லப்பட்டது.  இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் "இதைத்தான் சகவாசதோஷம் என்று அப்போதிலிருந்தே கூறி வருகிறேன்' என்று பதிலடி கொடுத்திருந்தார்.  காங்கிரஸ் "கூடா நட்பு' என்று கருணாநிதி முன்பே கோடிட்டுக் காட்டிவிட்டார். அதைச் செயல்படுத்துகிற வகையில்தான் உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தில் முடிவு இருக்கும் என்று கூறப்படுகிறது.  சமச்சீர் கல்வி: கூட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் மாற்றப்பட்டது, சமச்சீர் கல்வி நிறுத்தி வைக்கப்பட்டதைக் கண்டித்து திமுக சார்பில் போராட்டம் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக