புதன், 2 பிப்ரவரி, 2011

New party of K.P.: இலங்கை: புதுக் கட்சி தொடங்குகிறார் கே.பி.

சிங்களக் கொலைத்தலைவருக்குச் சார்பாகச் செயல்படும் என்பதில்  இருந்தே கு.ப. கட்சியின் நடுநிலைமை என்ன என்பது புரிந்து விடுகிறது. பாவம் கருணா! ஓரங்கட்டப்படுவாரா? உயிர் பறிக்கப்படுவாரா என்று தெரியவில்லை. இஙஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்

இலங்கை: புதுக் கட்சி தொடங்குகிறார் கே.பி.

First Published : 01 Feb 2011 05:04:39 PM IST


கொழும்பு, பிப்.1- விடுதலைப் புலிகளின் அரசியல் விவகாரத்துறையின் முன்னாள் பொறுப்பாளர் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் விரைவில் புதுக் கட்சி ஒன்றைத் தொடங்களவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு அக்கட்சி செயல்படும் என்றும், நடுநிலையான போக்கைக் கடைபிடிக்கும் என்றும் இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. எனினும், அதிபர் ராஜபட்சவுக்கு ஆதரவாக கே.பி.,யின் கட்சி செயல்படும் என்று கூறப்படுகிறது.கடந்த ஞாயிற்றுக்கிழமை, கே.பி. வடக்குப் பகுதிக்கு பயணம் மேற்கொண்டபோது, வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் பிரதிநிதிகளை அங்கு சந்தித்துப் பேசியதாகவும் அப்போது அரசியல் கட்சி குறித்தும் விவாதிக்கப்பட்டது என்றும் அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக