புதன், 7 ஏப்ரல், 2010

நளினியை விடுவிக்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்



சென்னை, ஏப்.6- ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை பொது மன்னிப்பு முறையின் கீழ் தண்டனைக் காலத்திற்கு முன்பாக விடுவிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீதிபதிகள் எலிப் தர்மராஜ், கே.கே. சசிதரன் ஆகியோர் அடங்கிய குழு இத்தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது.

""முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை மிகத் தந்திரமாக திட்டமிட்டு அவரது உயிரைப் பறித்துள்ளனர். நளினியை மற்ற ஆயுள் தண்டனைக் கைதிகளைப் போல சமமாக கருத முடியாது. எனவே, தண்டனைக் காலத்திற்கு முன்பாக விடுதலை செய்வதை அவர் உரிமையாக கோர முடியாது. '' என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

நளினியின் கோரிக்கை தொடர்பாக ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஆய்வுக் குழு பரிந்துரைப்படி அவரை விடுதலை செய்ய முடியாது என்று தமிழக அரசு சமீபத்தில் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இதனிடையே அவரை பொது மன்னிப்பு முறையின் கீழ் விடுவிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

கருத்துக்கள்

¼) எந்த ஒருவருக்கும் சட்டங்களின்படி தண்டனை வழங்கும் அதிகாரம் மட்டுமே நீதி மன்றங்களுக்கு உண்டு. மன்னிக்கும் அதிகாரம் கிடையாது. அது போல் முன்கூட்டி விடுதலை செய்யும் அதிகாரமும் அரசிற்குத்தான் உண்டு. நீதிமன்றங்களுக்குக் கிடையாது. விரைவில் முடிக்குமாறு நெறியுரை வழங்கலாமே தவிர வேறு கூற இயலாது. அவ்வாறிருக்க நீதிபதிகள் தெரிவித்த கருத்தும் கருத்தின் அடிப்படையிலான தள்ளுபடித் தீர்ப்பும் மிக மிகத் தவறானது. தண்டனை வழங்கிய பின் தண்டனைக் குறைப்பின் பொழுது அவரது எதிர்கால வாழ்முறையைக் கருத்தில் கொள்ள வேண்டுமே தவிர ஏற்கெனவே தண்டித்த குற்றத்தின் அடிப்படையில் ஆராய்வது என்பது ஒரே குற்றத்திற்கு இரு முறை தண்டனை வழங்கிய குற்றமாகும். மேலும், தண்டனைக் குறைப்பின் பொழுது மத்திய அரசு குறுக்கே வர எச்சட்டத்திலும் இடமில்லை. மக்களைக் கொத்தடிமையாக வைத்திருக்கும் அரசு மத்திய அரசிற்குக் கொத்தடிமையாக இருந்து வேறு தனிப்பட்ட நன்மைகளை அடைவதற்காக அதன் கருத்திற்கு இணங்க விடுவிக்க மறுப்பதும் அறமல்ல. (தொடர்ச்சி காண்க.) மீளாய்வு வேண்டும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/7/2010 3:51:00 AM

2/4) தண்டனை என்பது குற்றச் செயலுக்கு. ஆனால், மன்னிப்பு என்பது குற்றவாளிக்கு. தண்டனையின் நோக்கம் சீர்திருத்துவதே யன்றி மேலும் வதைப்பதன்று. அவ்வாறிருக்க முன்கூட்டி விடுவிப்பதற்குரிய நோக்கத்தைத் தண்டனை வழங்கக் காரணமாக அமைந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பார்ப்பது நல்லாட்சிக்கு அடையாளம் ஆகாது. சிறைவாசியின் சிறைக்கால நன்னடத்தை அடிப்படையில் சிறைக் கண்காணிப்பாளர் சிறைவாசியை முன்கூட்டி விடுதலை செய்வதற்கு ஆய்வு செய்ய அறிவுரைக் கழகத்தின் முன் வைக்க வேண்டும். இதனை நிறைவு செய்வதால் நளினியின் கோப்பு வைக்கப்பட்டது. விடுதலைக்குப்பின் அமையும் திருந்திய வாழ்க்கை குறித்து நன்னடத்தை அலுவலர் கருதிப் பார்த்து உரிய பரிந்துரையை வழங்க வேண்டும். இதன்படி நன்னடத்தை அலுவலர் முன் கூட்டி விடுதலை செய்யப் பரிந்துரைகத் துள்ளார். காவல் துறை பெரும்பாலும் மறுக்கும். எனவே, அதன் பரிந்துரையைக் கருதிப் பார்க்கத் தேவையில்லை. எனினும் விடுதலை பெறுவதால் குற்றவாளிக்கு மறு தரப்பினால் ஊறு நேரும் எனத் தெரிவிப்பின் அப்பகுதியில் வாழ வேண்டா என அறிவிக்கலாம். (தொடர்ச்சி காண்க.)மீளாய்வு வேண்டும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/7/2010 3:50:00 AM

3/4) (முன்பதிவின் தொடர்ச்சி.) மேலும், விடுதலைக்குப்பின் 3 ஆண்டுக் காலம் நன்னடத்தை அலுவலர் கண்காணிப்பில்தான் இருக்க வேண்டும். அப்பொழுது அரைகுறை அரசியல்வாதிகள் சொல்வது போல் நடத்தை பிறழும் போக்கு அறியப்பட்டால் உடனே நன்னடத்தை அலுவலர் அறிக்கையின் அடிப்படையில் முன் விடுதலை நீக்கப்பட்டு மீண்டும் சிறைக்கு அனுப்பப்படுவார். மேலும் நளியைப்போல் 21 பேர் இவ்வாறு நீதி மறுக்ப்பட்டுச் சிறையில் உள்ளனர். எனவே, இவர்கள் முன் கூட்டி விடுவிக்கப்படுவது என்பது சட்டத்தின்படியான செயலே என்றி நீதிக்கு எதிரானது அன்று. இது குறித்து ஒன்றும் அறியாமல் இந்தியப்பற்றாளர் போல் காட்டிக் கொள்வதாக எண்ணிக் கொண்டு விடுதலையை மறுத்துக் கருத்துஎழுதுவது மிகவும் அறியாமையின்பாற்பட்டதே. தண்டனை வழங்கிய பின்பும் குற்றச் செயல் குறித்த ஐயப்பாடு இருக்கையில் அதனை ஒருவர் மேல் சார்த்தி நீதிபதிகள் கருத்து தெரிவிப்பதும் முறையாகாது. (தொடர்ச்சி காண்க.) மீளாய்வு வேண்டும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/7/2010 3:50:00 AM

4/4) (முன்பதிவின் தொடர்ச்சி.) பொன்பரப்பியில் காவலர்கள்தாம் பொது மக்கள் போர்வையில் கொன்றனர். எனவே, வழக்கினை மூடி மறைத்தனர். நகர்வாலா தொடர்பிலான தொடர் கொலைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. மனித நேயம் பார்க்க வேண்டிய நேரத்தில் ஆதாய பேரம் பார்த்து நடவடிக்கை எடுப்பது கொடுமையிலும் கொடுமை. இது குறித்த முழுக் கட்டுரையை அனுப்பினால் தினமணி வெளியிடாது என்ற எண்ணத்தில் இணையப்பதிப்பில் நடுநிலையுடன் நடந்து கொள்வதைப் பாராட்டி இக் கருத்துகளைப் பதிகின்றேன்.தேசிய மனித உரிமை ஆணையம் அளித்துள்ள பரிந்துரைக்கு முரணாக நளினியின் முன் விடுதலை மறுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியப் பற்றாளர் என்னும் மு்த்திரை கிடைக்காது. இனப்பகை முத்திரைதான் விழும். மீளாய்வு செய்ய வேண்டி இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/7/2010 3:49:00 AM

Also Tamil - தமிழ் அடையாளத்தை வைத்துக் கொண்டு தமினை தூற்றாதே! Also என்றால் பாதி நீ சிங்களனா? புலிகள் மீது கோபம் என்றால் ஈழத்தமிழர்களை கேவலமாக எழுதுவதேன்?

By Murugan
4/6/2010 11:12:00 PM

Also Tamil - தமிழ் அடையாளத்தை வைத்துக் கொண்டு தமினை தூற்றாதே! என்றால் பாதி நீ சிங்களனா? புலிகள் மீது கோபம் என்றால் ஈழத்தமிழர்களை கேவலமாக எழுதுவதேன்? நீ ராஜிவ் கான்க்கு ஆதரவு அளிக்க இலங்கை வாழ் இஸ்லாமியனா? அல்லது காசுக்காக அடிமையாக சிங்களனிடம் சேவகம் செய்கிறாரயா? இந்திரா இறந்த போது பல்லாயிரக்கனக்கான சிங்குகள் படுகொலை செய்யப்பட்டபோது படுகொலையை நியாயப்படுத்தியது ராஜிவ் என்று உனக்கு தெரியுமா? அதற்கு இன்று வரை வழங்கப்ட்ட தண்டனை என்ன தெரியுமா? சட்டம் அணைவருக்கும் சமமே, ராஜிவ் ஒரு இந்திய குடிமகனே! ஒரு குடிமகன் கொலைக்கு என்ன தண்டனையோ அதுவே வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதிகாரம் கைகளில் உள்ளது என்பதற்காக இஷ்டம் போல் படுகொலை செய்பவர்களுக்கு தண்டனை யார் வழங்குவது? இங்கு ஒரு தமிழனை கொன்ற டக்ளஸ் தேவானந்தாவை இலங்கையில் நீங்கள் வைத்திருப்பது எதனால்? இதை இங்குள்ளவர்கள் கண்டும் காணமல் விடுவது எதனால்? சாமனிய தமிழனின் உயிரென்றால் துச்சமா?

By Murugan
4/6/2010 11:11:00 PM

நளினி ராஜீவ் அளவுக்கு தவறு செய்யவில்லை.9 உறவினர்களை பட்டப் பகலில் கொன்ற தூக்குதண்டனைக் கைதி ஜெயப்ரகாஷ் விடுதலை பெற்று ஜாலியாக இருக்கும் போது,கொள்கைக்காக ஒரு காரியம் செய்த நளினி ஏன் அறிந்தோ அறியாமலோ இந்தியாவுக்கு ஒரு நன்மை செய்த நளினி 18 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த பின்பும் உள்ளே

By Raman Abdulla
4/6/2010 10:20:00 PM

Also Tamil,where were u when dozens of innocent Tamils where killed by Sinhala govt during jaffna Tamil conference?/FKG any sinhala girl?were there any Tamil uprisings before? don't defend Sinhalese. Pirabha is a creation of Sinhala Violence. Piraba might have committed mistakes. But he was provoked by the Terrorist Sinhala Govt which never considered Tamils as Humans.Don't behave like Sinhalese. They only defend every cruel action of other brothers'.Are u one more mattu vedhakkaaran? Traitors..

By Raman Abdulla
4/6/2010 10:14:00 PM

ராஜீவ் என்ற மனிதனை கொன்ற கூட்டத்தில் இந்த நளினி ஒரு கூட்டாளி. அதன் பலனை அவள் அனுபவிக்க வேண்டும். தன் வாழ் நாளில் இது வரை தனது தவறை உணர்ந்ததாக அன்றி மன்னிப்பு கேட்காத இந்த பேய் இவ்வளவு பெரிய பேய் கூட்டத்தின் ஆதரவை பெற்று இருக்கிறாள். இவளை வெளியே விட்டால் இந்த பன்னாடை பேய்கள் அவளுக்கு விழா எடுத்து கொண்டாடும். அதை அனுமதிக்க கூடாது. வாந்தி எடுக்கும் மிருகங்களுக்கு வேண்டுமானால் ராஜீவின் கொலை மட்டும் தெரியும். அவருடன் அப்பாவி பதினெட்டு பேர் கொலையுண்டது எதற்கு. அதற்க்கு யார் பதில் சொல்ல முடியும். இந்த வாந்தி எடுக்கும் எழ சனியன்களே இன்றைய தினம் யாழ் போய் புலி கொடி ஆட்டிப் பார். கல்லால் அடிபட்டு சாவாய்

By Also Tamil
4/6/2010 10:01:00 PM

வாந்தி எடுக்கும் மிருகங்களே!. நளினி என்றே பெண் இந்தியப் பெண். அவள் சேர்ர்ந்து இருந்தது இந்திய முன்னாள் பிரதம அமைச்சரை கொன்ற கூட்டத்தோடு. அதற்க்கு தண்டனை கொடுத்தது இந்திய நீதிமன்றங்கள். இலங்கையை சேர்ந்த சொறி நாய்களே இந்த விழயத்தில் உங்களுக்கு என்ன்ன வேர்வை. ஏனென்றால் கொன்றது ஈழத்தின் பெயர் சொல்லி பிழைத்த ஒரு அட்டைகள் கும்பல். அந்த காசில் மஞ்சள் குளிப்பவன் தான் பழம் நெடுமரம், போய்க்கோ மற்றும் போல்.குருமா. இந்த நாட்டில் தினமும் எத்தனையோ கொலை கைதிகள் தண்டனை அனுபவித்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் இவளின் விடுதலை உங்களுக்கு பெரிய இன விடுதலையா பெற்று தரபோகிறது. மானம் கெட்ட மந்திகளே சூத்திரம் வலை தளத்தில் க்ராசியன் என்பவர் எழுதியுள்ள அட்டை புலிகளின் ஆட்சியில் சகோதர தமிழர்களை கொன்றது மனிதாபிமானமற்று நடந்த அனைத்தும் எழுதியுள்ளான். படியுங்கள். அட்டை தலை பிரபாகரன் ஒரு கடத்தல்கரன். மிருகங்களை வைத்து இயக்கம் அமைத்தவன். அந்த மிருகங்களை பற்றி போற்றி பாடி வயிறு வளர்த்து பிழைப்பு இனிமேல் நடத்த முடியாது.

By Also Tamil
4/6/2010 9:53:00 PM

THAMARAI SISTER I LIKE YOUR BRAVENESS. AND YOUR AFECTION TO TAMILS. SEMMALAI

By SEMMALAI
4/6/2010 9:29:00 PM

Ravi..Listen..Best comment.. பொன்பரப்பியில் நக்சல்கள் பாங்க்கை கொள்ளையடிக்க முயன்றபோது பொது மக்களே அவர்களை அடித்துக்கொன்றனர்.யார் மீதாவது கொலைக்குற்றம் சாட்டி வழக்கு நடந்ததா?அந்தக் கொலையை அரசாங்கமே பாராட்டியது. சாதாரண பாங்க்கில் சில லட்சம் கொள்ளையடித்தால் அங்கேயே மரணதண்டனை.போபோர்சில் 64 கோடி அடித்தால் .., நினைவுச்சின்னம், மனைவி மக்களுக்குப் பதவி, ஏன் நாடே இப்போது அவர்கள் கையில்! Sooper comment..welcome.உயிருடன் இருக்கும்போது ஊழல்வாதி.இறந்தவுடன் அவன் தியாகியா?அவன் பிணத்தை வைத்துத்தான் காங்கிரஸ் இன்றுவரை கேடுகெட்டப் பிழைப்பு நடத்துகிறது.நளினி ராஜீவ் அளவுக்கு தவறு செய்யவில்லை.9 உறவினர்களை பட்டப் பகலில் கொன்ற தூக்குதண்டனைக் கைதி ஜெயப்ரகாஷ் விடுதலை பெற்று ஜாலியாக இருக்கும் போது,கொள்கைக்காக ஒரு காரியம் செய்த நளினி ஏன் அறிந்தோ அறியாமலோ இந்தியாவுக்கு ஒரு நன்மை செய்த நளினி 18 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த பின்பும் உள்ளே?

By Dawood
4/6/2010 9:11:00 PM

1.போபோர்ஸ் ஊழலினான்ல்தான் ராஜீவ் மக்களால் பதவியிலிருந்து தூக்கியடிக்கப்பட்டார்.திரும்ப பதவிக்கே வரமுடியவில்லை.அந்த ஆளுக்கு எதற்கு நினைவுச்சின்னம்?அது அவமானச் சின்னமே!.2 அவர் சோனியா+சந்திராசாமி வகையராவால் கொல்லப்பட்டபோது சுமார்200 தொகுதிகளில் வாக்குப்பதிவு ஏற்கனவே முடிந்துவிட்டது3.அதில் காங்கிரஸ் 25 இடம் கூட வெல்லமுடியவில்லை. அதாவது ராஜீவ் தோற்கப்போவது அறிந்தே இந்தக்கொலை நடந்தது.(கருத்துக்கணிப்புகள் எல்லாம் இதையே கூறின)4.தோல்வியடைந்துகொண்டிருந்தவரைக் கொல்ல புலிகளுக்கு என்ன அவசியம்?5.அதெப்படி குண்டுவெடித்தபோது,எப்போதும் ராஜீவையே மொய்த்துக்கொண்டிருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் ஒருவரும் அருகில் இல்லை?6.எனவே காங்கிரசார்தான் இந்தக் கொலையை திட்டமிட்டு செய்து புலிகளின் மேல் போட்டனர் என்பது ஊர்ஜிதம்.இயக்கத்திலிருந்து வெளியேறிய புலிகள் சிலர் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் 7.ஜெயின் கமிஷன் உறுதியாகக்கூறியும் சந்திராசாமியை இதுவரை ஏன் விசாரணை செய்யவில்லை?உண்மை வெளிவரும் என்பதால்தானே?கடைசியாக ஒன்று உங்களைப்போல் இளிச்சவாயர்கள் இருக்கும்வரை தமிழ்நாடு விளங்காது.

By MANI
4/6/2010 9:03:00 PM

Ravi,Why u write like an illeterate1 1.ராஜீவ் குற்றவாளியே. போபோர்சிலும் சரி.IPKFஐ அனுப்பி தமிழர்களை அழித்தபோதும் சரி..போபோர்ஸ் வழக்கு விசாரணையின்போது சிபிஐ உயர்மட்டஅதிகாரிகள் அனைவரும்(மாதவன் தவிர)இந்திரா,ராஜீவால் பதவி உயர்வு பெற்றவர்கள்.அவர்கள் நியாயமான விசாரணை நடக்கவிடாமல் செய்தது உலகறிந்தது 2.மாதவன் மட்டும் இதனை எதிர்த்ததால் பதவியைவிட்டே விரட்டப்பட்டார். சிபிஐ வக்கீலே அரசுக்கு எதிராக கோர்ட்டில் பேசினார்(KTS துளசி)3.இந்த வழக்கில் நேர்மைக்காகப் பாடுபட்ட ஸ்வீடன் பிரதமர் ஒலோபாமே இத்தாலிய மாபியாவால் நடுரோட்டில் மனைவி முன்னாலேயே சுட்டுக்கொல்லப்பட்டார்.சோனியா இதற்கு துக்கம் கூட விசாரிக்கவில்லை.இந்துஜாவையும் , குத்ரோக்கியையும் காப்பாற்ற CBIஎடுத்த முயற்ச்சிகள் உலகப் பிரசித்தம்.இந்த ஊழல் நடக்கவே இல்லை என பலமுறை விசாரணையே நடக்கவிடாமல் ராஜீவ் தடுத்ததற்கு என்னிடம் பல ஆதாரங்கள் உள்ளன.. இனிமேல் மறந்தும் ராஜீவ நல்லவர்.அந்த கொள்ளைக்காரனை ஒழித்தது தவறு என தேசபக்தியில்லாமல் மறந்தும் எழுதாதீர்கள்.அவன் ஒழிந்த தினத்தைக் கொண்ட்டடினாலும் தவறில்லை!உங்களைப்போல் இளிச்சவாயர்கள் இருக்கும்வரை தமிழ்நாடு விளங்க

By MANI
4/6/2010 8:58:00 PM

ஊழல் குற்றம் சாட்டப்படாத ஒரு அரசியல்வாதியை உலகில் எந்தநாட்டிலாவது காட்ட முடியுமா? ராஜீவ் காந்தி ஊழல் செய்திருந்தால் வி.பி. சிங் அரசினாலோ அன்றி பிஜேபி அரசினாலோ என் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை கொடுக்க முடியவில்லை? ஏனெனில் அவையெல்லாம் ஒரு அரசியல்வாதியை கொச்சைப்படுத்துவதற்காக் கூறப்படுபவை. ஏன் காமராஜர் ஊழல் செய்தார் என்று கூறியபோது அதனை நம்பி அதனால் அவர் தோற்கவில்லையா? ஆனால் நளியின் விடயம் அப்படியல்ல. ஒரு நாட்டின் அதியுயர் பதவியில் இருந்த ஒருவர் கொலையில் உடந்தையாக இருந்தவருக்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியதே ஏற்புடையதல்ல. மேலும் அவர் பெண் என்பதாலும், தாய் என்பதாலும் அவருக்கு மன்னிப்பளிக்க முடியாது. ஏனெனில் இவற்றையெல்லாம் நளினியே தெரிந்துகொண்டுதான் திட்டமிட்டு இக்கொலையைச் செய்தார். இவருக்கான தண்டனை இனிவருங்காலங்ளில் இதுபோன்ற குற்றங்களுக்கு திட்டமிடுவோருக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். வேறு எந்த நாட்டிலாவது இதுபோன்ற செயல்கள் நடைபெற்றிருந்தால் தண்டனை எப்போதோ வழங்கப்பட்டிருக்கும். இந்திய ஜனநாயகம் அப்படிப்படடது. இலங்கைத்தமிழர் பலர் இந்தியாவைப்பறிறியும், அதன் சட்டத்தைப் பற்றியு

By Ravi
4/6/2010 7:56:00 PM

சட்டம் அணைவருக்கும் சமமே. ராஜிவ் ஒரு ஊழல் பேர்வழி என்று அவருடைய நன்பரும் ராணுவ அமைச்சருமான வி.பி.சிங் தெரியப்படுத்தி கருணாநிதி அதை சுவரொட்டியாக ஊரெல்லாம் ஒட்டி ஒட்டு வாங்கி பதவியிலும் அமர்தனர். ஊழல் பேர்வழி ஒழிந்தற்கு வருத்தப்பட வேண்டியதில்லை. சட்டம் எப்படியெல்லாம் வலைக்கப்படும் எனபதற்கு குத்ரேச்சியே சாட்சி. இந்திய மக்களின் வரிப்பணம் இத்தாலிய சோனியாவின உறவினருக்கு. நீதிமன்றங்கள்அரசியல் வாதிகளுக்கு பழிவங்கும் ஆயுதம்! பணக்காரர்களுக்கு பொழுது போக்கு!! சட்டம் சார்ந்தவர்களுக்கு பணம் சுரக்கும் காமதேணு!!! அப்பாவிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் இடம்!!!! பாமரனுகோஅது ஏதோ சில கட்டிடங்கள்!!!!! சட்டம் ஏழைகளை அறைக்கிறது அதை பணக்காரர்கள் ஆள்கிறர்கள் - ஒரு அறிஞர்.

By Unmai
4/6/2010 7:09:00 PM

Kudos to Chennai High court verdict.

By K.Sugavanam
4/6/2010 7:00:00 PM

The ceturies biggest cheate is KARUNANINHI.

By Ragu
4/6/2010 6:50:00 PM

சம்பந்தப்பட்டவர்கள் மனது வைத்தால், பேச வேண்டியவர்களிடம் பேசி, (தனது இயலாமையையும் பொருட்படுத்தாமல், பிள்ளைகளுக்காக டில்லிவரை பறக்கவில்லையா? பறந்து பேசவில்லையா?), எளிதாக விடுதலை செய்ய முடியும். தன்னை நம்பி, தனக்கு கீழே வேலை செய்த மூன்று அப்பாவி தொழிலாளிகளை உயிரோடு கொளுத்தி சாகடித்து, இன்று அந்த வழக்கு பற்றியே ஒன்றும் இல்லாமல் செய்துவிட வில்லையா?? அதுவும் உயிர்கள்தானே??

By Abdul Rahman - Dubai
4/6/2010 6:44:00 PM

150000 person killed in ELAM by KILLER RAJEV GANDHI, SONIA GANDHI, RAGUL AND KARUNANIDHI. Is any court or Country given punishment to them. Time will do that

By PRABHAKARAN RETURN
4/6/2010 6:41:00 PM

KARUNANITHI REALEASED 100'S OF LIFE SENTENCED PRISONERS DURING ANNADURAI'S BIRTH CENTENARY !!! WHERE WAS THESE JUDGES THEN??INDIAN LAW IS A PARADISE FOR THE LAW BREAKERS ONLY!!!KARUNANITHI IS NOW KNELT BEFORE SONIA, FOR THE FURTHER CONTIUANCE OF THE ALLIANCE, AND THAT IS WHY HE IS NOT INTERESTED IN THE RELIESE OF A LADY ,NALINI ..

By Er.L.C.NATHAN
4/6/2010 6:00:00 PM

நண்பர்களே! அப்பாவி போல முகத்தை வைத்திருக்கும் சோனியாவையும், ராகுலையும் நல்லவர்கள் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு கூடிய சீக்கிரம் வருத்தப்படுவீர்கள். இவர்களது குலம், கோத்திரம் அப்படிப்பட்டது. இதுவரை சந்திராசாமியையும், சுப்பிரமணிய சாமியையும், ராஜீவ் கொலை சம்பந்தமாக விசாரிக்க கூட இல்லை. போபர்ஸ் ஊழல் குவாற்றோட்சியை வழக்கிலிருந்து விடுவித்து விட்டார்கள். ராஜீவ் செத்தவுடன் போபர்ஸ் வழக்கில் ராஜீவ் பெயரை நீக்கி விட்டார்கள். தமிழர்களுக்கு எதிராக ஐ.நாவில் ஒட்டு போட்டார்கள். சஞ்சய் காந்தி குடும்பத்தை அப்படியே ஒதுக்கி தள்ளி விட்டார்கள். திரை மறைவில் இருந்து ஆட்சி செய்து கொண்டு நல்லவர்கள் போல் வேசம் மட்டும் போடுகிறார்கள்.

By usanthan
4/6/2010 5:32:00 PM

உயர்நீதிமன்றமும் மண்னாங்கட்டியும் யாருக்கு யார் நீதிபதி? எலிப் தர்மராஜ், கே.கே. சசிதரன் அவர்களே! நீங்கள் யார் நீதி சொல்ல? எங்கள் நாட்டின் ஒவ்வொரு தமிழ் குடும்பத்தையும் எதோ ஒரு வகையில் இழப்பில் ஆழ்த்திய உங்கள் தலைவனையும் அவனது மனிதாபினம் அற்ற இராணுவத்திற்கும் முதலில் தண்டனை கொடுங்கள் கற்ற்பழிப்பும் கொலையும் உன் நாட்டில் சர்வ சாதரணமாக இருக்கலாம்... அனால் எங்கள் நாட்டில் அப்படி இருக்கவில்லை உங்கள் ராஜீவ் தலைவரின் வெறி இராணுவன் வரும் வரையில்

By usanthan
4/6/2010 5:23:00 PM

உங்கடை வறட்டுத் தைரியத்துக்குத்தான் நக்சல்களும் பாகிஸ்தான் தீவிரவாதிகளும் சீனாவும் வைக்கிறாங்கள் ஆப்பு. அப்படியிருந்தும் இன்னும் திருந்தவில்லை இவர்கள். எவன் உண்மையான பயங்கரவாதியோ அவனை சுதந்திரமா விட்டிட்டு இந்த பெண் கைதியோட உங்கடை வீரத்தை காட்டுறீங்கள்

By Thurai
4/6/2010 5:18:00 PM

அவர் உரிமையாக கோர முடியாதுதான். ஆனால், எல்லாம் நடந்து முடிந்தாகி விட்டது - முடித்தாகி விட்டது என்ற அடிப்படையிலும், உங்கள் கருத்துப்படி எய்யப்பட்ட அம்பையும் சட்டப்படி தண்டித்தாகி விட்டது என்ற அடிப்படையிலும், இனி, அவர் குழந்தையின் எதிர்காலத்தை மனத்தில் வைததாவது, மஹாத்மா நமக்கு போதித்த அஹிம்சையை மனதில் வைத்து, அதை ஒரு "வேண்டுகோளாக" பரிசீலனை செய்யலாமே! ஒருவேளை அவர் விடுதலை பெற்றாலும்கூட எப்படியும் நிச்சயமாக உளவுத்துறையின், காவல்துறையின் தீவிர கண்காணிப்பில் இருக்கத்தான் போகிறார்.

By Abdul Rahman - Dubai
4/6/2010 5:05:00 PM

Sooopper comment.. போபோர்சில் ஊழல் நடந்தது 100 % உண்மை. ராஜீவ் உயிரோடிருந்தால் அந்த குற்றத்திற்காக கம்பி எண்ணியிருப்பாரா? பொன்பரப்பியில் நக்சல்கள் பாங்க்கை கொள்ளையடிக்க முயன்றபோது பொது மக்களே அவர்களை அடித்துக்கொன்றனர். யார் மீதாவது கொலைக்குற்றம் சாட்டி வழக்கு நடந்ததா?அந்தக் கொலையை அரசாங்கமே பாராட்டியது. சாதாரண பாங்க்கில் சில லட்சம் கொள்ளையடித்தால் அங்கேயே மரணதண்டனை. போபோர்சில் 64 கோடி அடித்தால் .., நினைவுச்சின்னம், மனைவி மக்களுக்குப் பதவி, ஏன் .நாடே இப்போது அவர்கள் கையில்..Sooopper comment.. .

By Kalai
4/6/2010 5:04:00 PM

peoples are known that

By South tamilan
4/6/2010 4:56:00 PM

Poor Nalini wants to take care of her child. Now she is aware of the responsibility of looking after her offspring. this girl did not imagine the suffering of the family of Rajiv Ghandhi when they planned. What she is facing is poetic justice. Had she been imposed the death penalty her suffering would have been short lived. By the remission she is made to suffer for her participation inthe heinous crime. Rajiv's family might have pardened her but not God or nature -in whatever name you call it.

By rajamohan
4/6/2010 3:45:00 PM

HEE..HEEEE........HEEE........HEEEEEEE Vomiting people are all welcome with scratching armpit and legpit......One type of vomit is that Rajiv was killed because of the conspiracy by Chandraswamy and Qattrochi. The same people will again vomit with the point his killing was justified based on the IPKF operations. Anyway vomit will be there.

By Also Tamil
4/6/2010 3:43:00 PM

சட்டத்துக்குமுன் எல்லோரும் சமம். ஆனால் தன்மானமுள்ள தமிழனாய்ப் பிறந்தால்? போபோர்சில் ஊழல் நடந்தது 100 % உண்மை. ராஜீவ் உயிரோடிருந்தால் அந்த குற்றத்திற்காக கம்பி எண்ணியிருப்பாரா? பொன்பரப்பியில் நக்சல்கள் பாங்க்கை கொள்ளையடிக்க முயன்றபோது பொது மக்களே அவர்களை அடித்துக்கொன்றனர். யார் மீதாவது கொலைக்குற்றம் சாட்டி வழக்கு நடந்ததா?அந்தக் கொலையை அரசாங்கமே பாராட்டியது. சாதாரண பாங்க்கில் சில லட்சம் கொள்ளையடித்தால் அங்கேயே மரணதண்டனை. போபோர்சில் 64 கோடி அடித்தால் .., நினைவுச்சின்னம், மனைவி மக்களுக்குப் பதவி, ஏன் நாடே இப்போது அவர்கள் கையில்...ஏனெனில் .. தன்மானமுள்ள தமிழனாய்ப் பிறந்தால்..நிரபராதி எனினும்...இதுதான் கதி - நளினியாயிருந்தாலும்

By MANI
4/6/2010 3:39:00 PM

NALINI CAN APPLY AGAIN TO PRESIDENT FOR RELEASE ON MERCY BASIS.

By R Manimaran
4/6/2010 3:20:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
முன்கூட்டியே விடுதலை கோரும் நளினியின் மனு தள்ளுபடி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக