vanniyar லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
vanniyar லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

Reservation for Vanniyar -kalaignar promised: 'மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு'

சாதிமறுப்புக்கட்சியான தி.மு.க.  இவ்வாறு குறிப்பிட்ட ஒரு சாதிக்கு முன்னுரிமை அளிப்பது தவறாகும். எவ்வகை வேறுபாடுமின்றி அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்வதே அரசின் கடமையாகும. அதற்கு ஆவன  செய்ய முதல்வரை வேண்டுகின்றேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


'மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு'


திண்டிவனம்,ஏப் 8: திமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுமென திண்டிவனத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி அறிவிப்பு வெளியிட்டார்.  ÷விழுப்புரம் திமுக மாவட்ட செயலர் க.பொன்முடி தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பாமக சார்பில் திண்டிவனம்,மயிலம்,செஞ்சி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் மொ.ப .சஙகர், ரா.பிரகாஷ்,அ.கணேஷ்குமார் ஆகியோரை ஆதரித்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:  பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் இரண்டும் ஆதிக்க சக்திகளை வீழ்த்தக் கூடிய வல்லமை வாய்ந்த சக்திகளாகும். அம்பேத்கருக்கும், எனக்கும் நேரடி தொடர்பு கிடையாது. ஆனால் அவரை மும்பையில் அண்ணா சந்தித்தது பற்றி என்னிடம் கூறியுள்ளார். அதிலிருந்து அம்பேத்கர் மீது எனக்கு தனி மரியாதை.  வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 20 பேரின் குடும்பங்களுக்கும் மாதந்தோறும் கருணைத் தொகையை வழங்கி வருகிறேன். ராமதாஸின் இடஒதுக்கிடு கோரிக்கையை நான் கைவிட மாட்டேன் என்றார்.
கருத்துகள்

தி.மு.க விற்கே எனது ஓட்டு
By நீலா
4/9/2011 9:17:00 PM
தி.மு.க விற்கே எனது ஓட்டு
By நீலா
4/9/2011 9:15:00 PM
திரு தினமணி பத்திரிகை அசெரியர் அவர்களே .ஒரு கட்சியென் தலைவர் ஒரு குறுப்பிட்ட ஜாதிக்கு மட்டும் அதை செய்கிறேன் இதை என்று சொல்கிறார் .செட்டியார் ,நாயடு இன்னும் பிற ஜாதிகளு எல்லாம் வாரியம் அமைகவேண்டியதுதனே .எப்பபர்தலும் ஜாதி தமிழ் பற்றிய பேச்சுதான் .இந்த ஒரு மாநிலம் தான் அசிங்கம் ஆகிவிட்டது . தமிழ்நாடு அழிவின் வில்லிம்புக்கு வந்து விட்டது .மக்கள் புரட்சி வெகு விரைவில் வரபோகிறது .
By samy
4/9/2011 5:48:00 PM
மு.க அவர்களே தற்போது ஆதிக்க சக்தி தமிழ்நாட்டில் உங்கள் குடும்பம்தானே - அதை வீழ்த்தக் கூடிய வல்லமை வாய்ந்த சக்திகளா. பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் அழகரசன்
By alagaeasan
4/9/2011 1:34:00 PM
மு.க அவர்களே தற்போது ஆதிக்க சக்தி தமிழ்நாட்டில் உங்கள் குடும்பம்தானே - அதை வீழ்த்தக் கூடிய வல்லமை வாய்ந்த சக்திகளா. பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் அழகரசன்
By alagarsan
4/9/2011 1:09:00 PM
எதனை காலம்தான் இவ்வாறு சாதி சொல்லலி நாட்டை கெடுப்பீர்கள்??முதலில் உங்கள் பதவிக்கு ஒதுக்கீடு கொண்டு வாருங்கள் .பார்க்கலாம்.
By cheena
4/9/2011 11:15:00 AM
YOUR POLITICAL PARTNERS BOTH ARE KNOWN FOR THEIR ACTIVITIES LIKE STONING BUSES, CREATING DISTURBANCES FOR PUBLIC, DAMAGING PUBLIC PROPERTIES ETC. BUT YOU ARE KEEPING THEM FOR YOUR OWN WELFARE FOR YR PARTY. TAMILNADU PEOPLE ARE NOT GETTING BENEFITTED FROM YOU ALL THE 3 PARTIES JOINED IN THIS ELECTION. PEOPLE HAS THE RIGHT TO SELECT THEIR OWN CHOICED CANDIDATES !!!!!!!!!!!!! THEY WILL NOT ADHER TO ANYBODY'S FALSE PROPAGANDAS
By JEYAPRAKASH.
4/9/2011 10:47:00 AM
வன்னிய சகோதர்கள் சத்தியமாக நம்ப வேண்டாம் .
By muthu
4/9/2011 9:49:00 AM
குரங்கு ஆப்பத்தை பங்கிட்ட கதை சிறுவயதில் கேட்டதாக ஞாபகம்
By கணேசன்
4/9/2011 9:34:00 AM
மற்றவர்கள் என்ன வாயில் விரலை வைத்து சூபின்கொண்டிருப்பது தான. அருந்ததியர்களுக்கு தாழ்தபட்டவர்களுக்குள்ள சதவீதத்தில் தானே ஒதுக்கீடு செய்யப்பட்டு மற்றவர்களுக்கு குறைந்தது. என் நூறு சதவீதத்தில் கை வைக்கவில்லை. இவர் ஜாதிகளுக்குள்ளே புகுந்து பிரித்து ஒட்டு பிடிக்கிறார். பதவியை காப்பாற்றிக்கொள்ள கலைஞர் "என்னவேண்டுமானாலும், எதைவேண்டுமானாலும் செய்வர். இனி ஐந்தாண்டுகளுக்கு ஸ்ர்வதிகரன்க்தான்
By kala
4/9/2011 9:00:00 AM

சனி, 4 செப்டம்பர், 2010

நீதிபதிகள் தேர்வுக் குழுவில் வன்னியர்களுக்கு இடம்: ராமதாஸ் கோரிக்கை

First Published : 04 Sep 2010 12:58:48 AM IST


நீதிபதிகள் நியமனத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை சார்பில் சென்னை மெமோரியல் ஹால் அருகே வெள்ளிக்கிழமை நட
சென்னை, செப். 3: நீதிபதிகளை தேர்வு செய்வதற்காக அமைக்கப்படும் மூவர் குழுவில் வன்னியர்களுக்கு இடம் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்தார்.உயர்  நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பாமகவின் வழக்கறிஞர் அமைப்பான வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவை சார்பில் சென்னை மெமோரியல் ஹால் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியது:தமிழகத்தில் 20 சதவீத வன்னியர்கள் உள்ளனர். ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரே ஒரு வன்னியர் மட்டுமே நீதிபதியாக இருக்கிறார். இதனை வன்னியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவும், அவமானமாகவும் கருதுகிறோம்.இது பற்றி பாமக, காங்கிரஸ் தவிர வேறு எந்தக் கட்சியும் பேசுவதில்லை. திமுக, அதிமுகவில் உள்ளவர்கள் இது பற்றி பேசினால் அவர்களை கட்சியை விட்டே நீக்கி விடுவார்கள். ஆனால், மற்ற சமுதாயத்துக்கு அநீதி இழைக்கப்பட்டால் அனைத்துக் கட்சியினரும் குரல் கொடுக்கிறார்கள். நாங்கள் பேசினால், இந்த காலத்தில் ஜாதி பேசுகிறீர்கள் என்று குற்றம்சாட்டுகிறார்கள்.நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை தேவை. எந்தத் தகுதியின் அடிப்படையில் நீதிபதிகள் நியமனம் செய்யப்படுகின்றனர் என்பதை உயர் நீதிமன்றமும், தமிழக அரசும் தெளிவாக்க வேண்டும்.50 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்ட முதல்வர் கருணாநிதியின் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கிறார். போராடி அந்தப் பதவியை பெற்றுத் தந்ததாக அவரே என்னிடம் கூறினார். 50 ஆயிரம் மக்கள் தொகை சமுதாயத்துக்கும் ஒரு நீதிபதி பதவி. சுமார் 2 கோடி மக்கள் தொகை கொண்ட சமுதாயத்துக்கும் ஒரு நீதிபதி பதவி. இது என்ன நியாயம்?நீதிபதிகள் நியமனத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என எத்தனை காலத்துக்குதான் கெஞ்சி கேட்பது. நீதிபதிகளைத் தேர்வு செய்ய அமைக்கப்படும் மூவர் குழுவில் வன்னியர்களையும் சேர்க்க வேண்டும். இதனைக் கேட்டால் தகுதி அடிப்படையில்தான் நியமனம் என்கிறார்கள். இப்போதுள்ள நீதிபதிகள் எல்லாம் தகுதி அடிப்படையில் வந்தவர்கள்தானா?நீதிபதிகள் நியமனத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கும் வரை பாமகவும், வன்னியர் சங்கமும் தொடர்ந்து போராடும் என்றார் ராமதாஸ்.பாமக தலைவர் ஜி.கே. மணி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஏ.கே. மூர்த்தி, என்.டி. சண்முகம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. அன்பரசன், முன்னாள் எம்.எல்.ஏ. பலராமன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
கருத்துக்கள்

தமிழ் நல அடிப்படையில் நிலையான செயற்பாடுகளில் ஈடுபாடு கொண்டு உள்ள மரு.இராமதாசு அவர்கள், தமிழ்நாடு வன்னியர் முன்னேற்றக் கட்சி எனத் தன் கட்சியின் பெயரை மாற்றிக் கொண்டு இது போன்ற போராட்டங்களில் ஈடுபடுவது நல்லது. தமிழ் சார் பணிகளுக்குத் தனியாக ஓர் அமைப்பை நிறுவி அதன் மூலம் தமிழ்ப்பணியை ஆற்றலாம். அனைத்துச் சாதியினருக்குமான பொதுவான கட்சியில் ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் சார்பாகப்போராடுவது கட்சியின் வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கும். தமிழ்ப் பணிகளுக்குத் தடையாக அமையும். மக்கள் தொலைக்காட்சி மூலம் மக்களிடையே தமிழ் எழுச்சியை ஏற்படுத்தி வரும் அவர் தன்னைச் சாதித்தலைவராக அடையாளம் காட்டிக் கொள்வதை விட தமிழுக்காகச் சாதித்த தலைவராக அடையாளம் காட்டிக் கொள்வதே நிலையான பயனைத் தரும். அல்லது வன்னிய அமைப்பு ஒன்றைப் புதிதாக உருவாக்கி அதன் மூலம் சாதிப் பணிகளை ஆற்றிப் பாட்டாளி மக்கள் கட்சியில் சாதி வாடை வீசாமல் பார்த்துக் கொள்ளலாம். பிற சாதியினர் அவரது கோரிக்கையில் நியாயம் இருந்தாலும் புறக்கணிப்பார்கள் என்ற வருத்தத்தில் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/4/2010 8:18:00 PM
டை ராமதாஸ் எல்லாம் உனக்குன நாங்க என்ன உன் ???????????????? பண்டா கரடி ராமதாஸ்
By இந்திய நேசன்
9/4/2010 5:18:00 PM
ஐயா வழி நடப்போம். டேய் லூசு அந்நியன் , உன் பெயரை கூட உன்னால் சொல்ல முடியாத கோழை பயலே . நீ வீர வன்னியர் பற்றி பேச என்ன தகுதி இருக்கு. இன்னொரு நை கோழி னு சொந்த பெயரை போடாமல் கொக்கரிகிறது . உங்கள் இனத்திற்கு இப்படி ஒரு தலைவன் இல்லையே என்ற பொறமை உங்களுக்கு. MBC கோட்டா யார் பெற்று தந்தது . 108 ஜாதிகளுக்கும் கேடைதது யாரால், வன்னியர் உயர் தியாகத்தால் கிடைத்தது என்பதை மறக்க வேண்டாம். "சமுதாயம் காப்பது சத்ரியன் தர்மம் - வீழ்வது நாமாகிலும் வாழ்வது நம் இனமாகட்டும்!"
By vijayabhaskar
9/4/2010 1:12:00 PM
பெரும்பான்மை மக்களுக்கு சமூகநீதி கிடைக்கவேண்டும் என்றுப் போராடினால் எத்தனைப் பேருக்கு வயிறு எரியுதுப் பாருங்கள். சமூகநீதி என்பது அனைத்துத் துறைக்கும்ப் பொருந்தும். நீதித்துறைக்குப் போருந்தாததுபோல் இங்கு சிலர் கருத்து எழுதுகிறார்கள். எங்கள் வன்னிய இனம் என்றும் கிரிமினல் செயல்களில் ஈடுப்பட்டதுக் கிடையாது. நீதியை நிலைநாட்டுவதற்காக பல வழக்குகள், அடக்குமுறைகளை எம்மினம் அனுபவித்திருக்கிறது. "வன்னியன்" இந்த உலகத்தில் நீதியை நிலைநாட்ட, பண்பாட்டைக் காக்க, மக்களைக் காக்கப் பிறந்தவர்கள். ஊரை ஏமாற்றும் கூட்டம், வேஷம் போடும் கூட்டம், ஜால்ரா கூட்டம், வன்னியருக்கு எதிராகவும், "தமிழினப் போராளி" மருத்துவர் அய்யாவுக்கு எதிராகவும் கருத்து சொல்லிக்கொண்டுதான் இருக்கும். சூரியனைப் பார்த்து நாய்க் குரைத்தாலும் அதன் புகழ் மங்குவதில்லை. இங்குக் குறைத்திருக்கும் சில நாய்கள், நாம் பெற்றுத் தந்த இடஒதுக்கீட்டுப் பலனை அனுபவித்துக்கொண்டிருப்பவர்கள்தான். வன்னியப் பேரினமே இந்த உலகத்தைப் புரிந்துக்கொள்வோம், அய்யாவின் வழியில் போராடுவோம்!! வெற்றிப் பெறுவோம்!!!
By அழகாபுரம்.இரா.தங்கதுரை.
9/4/2010 9:48:00 AM
அந்நியன், நான் நினைத்தேன் நீங்க சொலி டீங்க
By kozhi
9/4/2010 8:25:00 AM
yes it is very ugly.How can a learned man as DR.S.R raise such demand. how can others respect him . it is mere politics for covering his JATHI votes now swing to DMK ,ADMK & DMDK
By selvaraju
9/4/2010 8:04:00 AM
although ramadoss is iritaing in many issues,in this judges issues some truth in it vellalar
By gnan
9/4/2010 7:21:00 AM
இதில் வேடிக்கை ஒன்றும் இல்லை. அதிக அளவில் தமது இனத்துக்காரர்கள் கிரிமினல் செயல்களில் ஈடுபடுவதால் அவர்களை 'வெளியே' கொண்டு வர சாதிக்காரர்களே நீதிபதிகளாக தேவை என்று எதிர்பார்க்கிறார்.
By அந்நியன்
9/4/2010 6:34:00 AM
...very dangerous and ugly Game !
By KARUNANITHI
9/4/2010 2:50:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வியாழன், 29 ஜூலை, 2010

வன்னியருக்கு 20% ஒதுக்கீடு கேட்டு மீண்டும் போராட்டம்: ராமதாஸ் எச்சரிக்கை


சென்னை, ஜூலை 28: வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு அளிக்காவிட்டால், 1987-ல் நடந்ததைப் போல தமிழகத்தில் மீண்டும் வன்னியர்களின் பெரும் போராட்டம் நடைபெறும் என்று தமிழக அரசுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்தார்.  கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வன்னியர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை வகித்தார்.   ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:  தமிழகத்தில் 3 சதவீதம் மட்டுமே உள்ள ஒரு சமுதாயத்தினர் கல்வி, வேலைவாய்ப்பில் 25 சதவீத இடங்களில் உள்ளனர். ஆனால், 20 சதவீதம் உள்ள வன்னியர்களுக்கு 6 சதவீதம் கூட கிடைக்கவில்லை.  தமிழகத்தின் 6 கோடி மக்களில் 2 கோடி மக்கள் வன்னியர்களாக உள்ளனர். இவ்வளவு பெரிய சமுதாய மக்கள் பின்தங்கி இருந்தால், அதனால் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் பாதிக்கும்.  1973-ல் முதல்வராக இருந்த கருணாநிதி நியமித்த சட்டநாதன் கமிஷன், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 17 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 14 சதவீத இடஒதுக்கீட்டை பரிந்துரை செய்தது. ஆனால், தமிழக அரசு அதை அமல்படுத்தவில்லை. இந்நிலையில், வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி 1987 ஆகஸ்ட் மாதம் ஒரு வார கால சாலை மறியல் போராட்டத்தில் வன்னியர் சங்கம் ஈடுபட்டது. அந்த போராட்டத்தில் 30 பேரின் உயிரை பறிகொடுத்தோம். அதன் தொடர்ச்சியாகத்தான் 1989-ல் அமைந்த தி.மு.க. அரசு, வன்னியர் உள்ளிட்ட 107 ஜாதிகளை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என பிரித்து 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது.  அப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, வன்னியர்களுக்கு மட்டும் தனி இடஒதுக்கீடு வழங்குவது சாத்தியமில்லாதது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.  எனினும், அதே தி.மு.க. அரசுதான் இப்போது அருந்ததியர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் தனி இடஒதுக்கீடு அளித்துள்ளது. எனவே, வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவதில் இனி எந்த தடையும் இருக்க முடியாது. இப்போதுள்ள இடஒதுக்கீட்டில், 7 சதவீதம் மட்டுமே வன்னியர்களுக்கு கிடைக்கிறது. எனவே, வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க முதல்வர் கருணாநிதி விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் ராமதாஸ்.  ஆர்ப்பாட்டத்தில் மத்திய முன்னாள் ரயில்வே இணையமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் பேசினர்.
கருத்துக்கள்

ஊடகங்கள் நல்ல தமிழில் அமைய வேண்டும்; தமிழ்ப் பண்பாடு, தமிழ் நாகரிகம் முதலியவற்றின் வெளிப்பாடாக இருக்க வேண்டும். தமிழினம் காப்பாற்றப் படவேண்டும் என்றெல்லாம் போராடி வரும் இராமதாசு அவர்கள், சொல்வது போல் செய்ய வேண்டும் என்பதற்காகத் தமிழ் ஓசை நாளிதழையும் மக்கள் தொலைக்காட்சியையும் நடத்தும் இராமதாசு அவர்கள் சாதித்தலைவராகத் தன்னை வெளிப்படுத்துவது மிகவும் வருந்தத்தக்கது. இதற்கு மாற்றாகத் தமிழ் உணர்வாளர்களை ஒன்றிணைத்துத் தனஅரசியல் அணி அமைத்துத் தலைமை தாங்கலாம். வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar thiruvalluvan
7/29/2010 3:16:00 AM
வாய்யா டாக்டரு, கருணாநிதியும் ஜெயலலிதாவும் உன்னை எத்தி வெளியே தள்ளி கதவ சாத்தினதுக்கு அப்புறம், போக்கத்துப்போயி இப்ப 20 % கேக்க வந்துட்டயாக்கும்? ரெண்டுபேரும் சீந்தலையின்னா ஒங்கதை டர்ரு தாண்டி. நேரத்துக்கு ஒரு பேச்சு, தேர்தலுக்கு தேர்தல் ஒரு கூட்டணி, த்தூ மானங்கெட்டவனே. ஒன் சாதிக்காரனே உன்ன காறித்துப்ப போறான்டா. மதுரைக்காரன்.
By மதுரைக்காரன்
7/29/2010 1:51:00 AM
Kelunga thalaiva 23% idaodhukkeedu. Aarambinga unga vilayatta. Tamizhagam sthambiththu poganum. Neenga aatchikku varanum apparamilla irukku vedikkai. 1987 to 2010, mothham 23 aandugal odippochchu enave, 23% kelunga, romba nallairukkum. Vanniyargalna summavaa? Matra jaathikkaragal ellam mirandu poramaadhiri irukkanum unga porattam. "JAATHIGAL ILLAIYADI PAAPPA" endru paadiya Bharathiyaar satre neliyavendum. Pongayya neengalum onga arasiyalum.
By glenz
7/29/2010 1:32:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

புதன், 30 டிசம்பர், 2009

ஜெயங்கொண்டம் : வன்னியர்கள் வன்னியர்களுக்கே ஒட்டு போட்டால் தமிழகத்தில் 120 சட்டசபை தொகுதிகளில் பாமக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துவிடும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.



தமிழகத்தில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டும், சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி வலியுறுத்தியும் அரியலூர், பெரம்பலூர் மாவட்ட வன்னியர் சங்க மாநாடு நேற்று(29ம்தேதி) ஜெயங்கொண்டத்தில் நடந்தது. மாநாட்டிற்கு பாமக மாவட்ட செயலாளர் வைத்தி தலைமை வகித்தார். செந்தில்குமார், ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஐகோர்ட் வக்கீல்பாலு, வன்னியர் சங்க தலைவர் குரு மற்றும் பலர் பேசினர். பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது,ஜெயங்கொண்டம் மின் திட்டத்துக்கு 20 ஆண்டுகளுக்கு முன் நிலம் கையகப்படுத்தியும் இதுவரை திட்டம்தொடங்கப்படவில்லை.



கையகப்படுத்திய நிலத்திற்கு ஒரு ஏககருக்கு ரூ.25 ஆயிரம் மட்டும் அரசு விலை வழங்கியது கண்டிக்கதக்கது. இங்கு நிலக்கரி எடுக்க வேண்டும்என்றால் ஒரு ஏக்கருக்கு ரூ.20 லட்சம் கொடுக்க வேண்டும் . இல்லாவிட்�டால் நிலக்கரிஎடுக்க அனுமதிக்க மாட்டோம். அதற்காக எந்தபோராட்டத்தையும் நடத்த நாங்கள் தயாராக உள்ளோம். தமிழகத்தில் உள்ள 6 கோடிபேரில் 2 கோடி பேர் வன்னியர்கள் உள்ளனர். வன்னியர்கள் வன்னியர்களுக்கே ஒட்டு போட்டால் தமிழகத்தில் 120 சட்டசபை தொகுதிகளில் வெற்றிபெற்ற ஆட்சியை பிடித்துவிடலாம். இதற்கு அனைத்து வன்னியர்களும் ஒன்று சேர வேண்டும். ஐகோர்ட் நீதிபதிகள் 60 பேரில் ஒருவர் மட்டும் தான் வன்னியர் உள்ளார். இதே போல அரசு செயலாளர்கள் 36 பேரில் ஒருவர் மட்டும்தான் வன்னியர் உள்ளார்.



இந்நிலையை போக்க வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வேண்டும். 1987ல் போராட்டம் நடத்தி மற்ற சாதிகளுடன் இணைந்து 20 சதவீத இடஒதுக்கீட பெற்றோம்.ஆனால் அதில் 7 சதவீதம் கூட நமக்கு பலன் கிடைக்கவில்லை. வன்னியர்களுக்கு என தனியாக 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி அறவழியில் போராட்டம் நடத்தி சிறை செல்ல 20 வயது முதல் 30 வயது வரையுள்ள ஒரு லட்சம் இளைஞர்கள் தயாராக வேண்டும். சிறையில் இருந்து வெளியில் விட்டாலும் மீண்டும் அதே போராட்டத்தை நடத்தி சிறைக்கு செல்ல வேண்டும். நான்கூட 6 மாதம் சிறைக்குசெல்ல தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் அரியலூர்,பெரம்பலூர் மாவட்டம் சார்பில் கல்வி வளர்ச்சி நிதியாக ரூ.10 லட்சம் ராமதாசிடம் வழங்கப்பட்டது. ஜெயங்கொண்டம் நகர செயலாளர் ரெங்கநாதன் நன்றி கூறினார்.



தமிழ் உணர்வு வெளிப்படும் வண்ணம் நாளிதழையும் தொலைக் காட்சியையும் நடத்தி வரும் இராமதாசு விரக்தியின் விளிம்பில் இருந்து மீள வேண்டும். அல்லது வன்னியர் சாதிக் கட்சி என்று தன் கட்சியின் பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும். சாதி வெறி பிடித்து அலைந்து இருக்கின்ற வாக்கு வங்கியையும் இழக்க வேண்டா. தொடர்ந்து வன்னிய தாசனாகத்தான் இருப்பனே என்றால் அவரது அழிவை யாராலும் தடுக்க முடியாது.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

சனி, 21 நவம்பர், 2009

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி விரைவில் போராட்டம்: ராமதாஸ்



சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் சென்னை மாவட்ட மாநாட்டில் பேசுகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகிறார். உடன் பாமக த
சென்னை, நவ.20: "வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கக் கோரி விரைவில் போராட்டம் நடத்தப்படும்' என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் சென்னை மாவட்ட மாநாடு சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு பேரவையின் தலைவர் கே. பாலு தலைமை வகித்தார். மாநாட்டில் ராமதாஸ் பேசியதாவது: தமிழகத்தில் தனிப்பெரும் சமூகமாக வன்னியர் சமூகம் உள்ளது. ஆனால் வன்னியர்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கிடைக்காதவரை இந்த சமூகம் முன்னேறாது. எனவே, வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கக் கோரி விரைவில் போராட்டம் நடத்தப்படும். சென்னை உயர் நீதிமன்றம் தொடங்கப்பட்டு 135 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இதுவரை 4 வன்னியர்கள் மட்டுமே நீதிபதிகளாக நேரடி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 4 பேர் பதவி உயர்வு மூலம் நீதிபதிகளானார்கள். இன்றைய சூழலில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த 5 பேராவது உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டும். ஆனால் போராடாமல் இது கிடைக்காது. எனவே வன்னிய சமூகத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கருப்பு அங்கிகளோடு, சென்னை நகர வீதிகளில் இறங்கி போராட தயாராக வேண்டும். 5 வன்னியர்களை நீதிபதிகளாக நியமிக்கும் வரை நமது போராட்டம் ஓயக்கூடாது. தடை விதித்தால், தடையை மீறிப் போராடி சிறை செல்வோம். தமிழகத்தில் உடனடியாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார் ராமதாஸ். மாநாட்டில் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, வழக்கறிஞர்கள் ஆர்.ஜி. அண்ணாமலை, பி. தாமோதரன் உள்ளிட்டோர் பேசினர்.
கருத்துக்கள்

சாதி வெறி பிடித்த வன்னியப் போக்கிலிருந்து மாறித் தமிழ் நலப் போராட்டங்களில் ஈடுபட்டஇராமதாசு தேர்தல் தோல்விக்காக மீ்ண்டும் பாதைமாறிச் சாதிக்காகக் கொடி பிடிப்பது அவருக்கும் நல்லதல்ல; தமிழ் நலத்திற்கும் நல்லதல்ல.என்னதான் பெருமப்பாலான மக்களுக்குச சாதிப்பற்று இருப்பினும் சாதி அரசியலில் இருப்பவர்கள் புறக்கணிக்கப்படுவார்கள் என்பதை அவர் உணர வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/21/2009 2:52:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *