commuted to life லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
commuted to life லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

assembly resolutions about hanging of 3: 3 பேரின் தூக்கு த் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப் பேரவையில் தீர்மானம்

மிக மிகப் பாராட்ட வேண்டிய தீர்மானம்.  குடியரசுத்தலைவரின் கருணை மனு மறுக்கப்பட்ட பின்பு மாநில அரசு மறு ஆய்வு செய்யக்கூடாதுஎன்ற மத்திய அரசின் குறிப்புரையை  முதல்வர் வாசித்த பொழுதே   சட்ட மன்றத்தில் தீர்மானம் இயற்றி அனுப்பலாம் என மக்களால் கருதப்பட்டது. மக்களின் உணர்வினைப் புரிந்து கொண்டு செயல்பட்டுள்ள  மாண்புமிகு முதல்வர் அவர்களுக்குப் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் தமிழே விழி! தமிழா விழி!



3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க பேரவையில் தீர்மானம்

First Published : 30 Aug 2011 11:23:37 AM IST

Last Updated : 30 Aug 2011 11:27:41 AM IST

சென்னை, ஆக.30: ராஜீவ் கொலையாளிகள் 3 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கும்படி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தீர்மானம் கொண்டுவருவதாக முதல்வர் தெரிவித்தார். பேரவையில் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. கருணை மனுக்களை பரிசீலித்து குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்கும்படி இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பேரவைத் தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று உடனே தெரிவிக்கப்பட்டது. தூக்கு தண்டனை என்பது தமிழக மக்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
கருத்துகள்

தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த முதல்வருக்கும், உயர்நீதிமன்றம், இரண்டுக்கும் தமிழர்கள் தலைவனங்குறோம்.
By கேசவராஜ.j
8/30/2011 12:00:00 PM
நன்றி
By gb
8/30/2011 11:31:00 AM
நன்றி அம்மா . நன்றி.
By கௌசல்யா
8/30/2011 11:29:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *