11ஆவது உலகத்தமிழ் மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
11ஆவது உலகத்தமிழ் மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 12 ஜூலை, 2023

11ஆவது உலகத்தமிழ் மாநாடு முடிந்தது. மலேசியா தமிழ் மாநாட்டின் நிலை என்ன? – இலக்குவனார் திருவள்ளுவன்

 




11ஆவது உலகத்தமிழ்மாநாடு முடிந்தது. 

மலேசியா தமிழ் மாநாட்டின் நிலை என்ன?

கடந்த வெள்ளி, சனி , ஞாயிறு (07,08,09.07.2023) சென்னையில் 11ஆவது உலகத்தமிழ்மாநாடு உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம் சார்பில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. ஆனால் மலேசியாவிவ் இதே மன்றத்தின் பெயரைப் பயன்படுத்திச் சூலை 21-23இல் 11 ஆவது உலகத்தமிழ்மாநாடு நடைபெறுவதாக அறிவித்து அதற்கான் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

11 ஆவது மாநாடு நடந்து முடிந்த பின் 12 ஆவது மாநாடுதானே நடைபெற வேண்டும். அப்புறம் ஏன் மீண்டும் 11 ஆவது மாநாடு ?

முன்பே குறிப்பிட்டுள்ளதைப் போலத் தமிழ்மாநாடுகளை ஆர்வமுள்ள யாரும் நடத்தலாம்.   ஆனால், ஒரே மன்றத்தின் பெயரைப் பயன்படுத்தி வெவ்வேறு ஆட்கள் நடத்துவது எப்படிச் சட்டப்படி முறையாகும்?

உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம்(பு) [IATR-N] என்றாவது பன்னாட்டுத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் என்றாவது பெயரை மாற்றிக் கொண்டு அதன் சார்பில் நடத்தலாம். அப்படி நடத்தும் பொழுது இது முதல் மாநாடுதான். அப்படித்தான் குறிப்பிட வேண்டும்.

10 ஆவது உலகத்தமிழ் மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவினர் இம்மாநாட்டை நடத்துகையில் முந்தைய தலைவர் இதை நடத்துவதாகக் கூறுவது எப்படி ஏற்புடைத்தாகும்? குறைந்தது இக்குழுவைக் கூட்டச்செய்து முனைவர் பொன்னவைக்கோ தலைமையிலான இம்மன்ற ஆட்சிக் குழுவை அகற்றிப் புதிய பொறுப்பாளர்களுக்கான தேர்தல் நடத்தி, அதில் வெற்றி பெற்று நடத்தினால் நன்றாக இருந்திருக்கும். அப்படி நடத்தியிருந்தால் பொன்னவைக்கோ அமைப்பினர் விலகியிருப்பர். சென்னையில் 11ஆவது மாநாடு நடந்திருக்காது. அப்படியில்லாமல் முறைப்படியான அமைப்பின் பெயரைப் பிறர் பயன்படுத்துவது எங்ஙனம் முறையாகும்?

உ.த.ஆ.மன்றத்தின் புதிய பொறுப்பாளர்களாகப் பொறி.அரசர் அருளாளர் தலைவராகவும், முனைவர் ப.மருதநாயகம் செயலராகவும்(இந்தியா) தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள். இவர்களது ஒப்புதல் இன்றி இதே மன்றத்தின் பெயரை எவ்வாறு பிறர் பயன்படுத்த முடியும்?

புதிய பொறுப்பாளர்கள் உடன் நீதிமன்றத்தை நாடி, மாநாடு நடத்தத் தடையில்லை என்றும் ஆனால், உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றப்பெயரைப் பயன்படுத்தி மாநாடு நடத்துவது தவறு என்றும் முறையிட்டு வெற்றி காண வேண்டும். அப்பொழுதுதான் பெயர்க் குழப்பம் ஏற்படாது. நாளை இதே போல், மற்றொருவர் இதே பெயரில் செயற்படும் நிலையும் வராது.

தமிழின் பெயரால் ஒற்றுமை மேலோங்க வேண்டுமே தவிரப் பிளவுகள் ஏற்படக் கூடாது.

“பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும்” (குறள் 735) கூடாது எனத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் வலியுறுத்துவதை ஏற்றுச் செயற்பட வேண்டும்.

தமிழ், தமிழ்நாட்டிலும் தன் அரசியமைப்புக் கட்டுப்பாட்டிலான இந்தியாவிலும் தனக்குரிய இடத்தைப் பெறவில்லை. உலகில் பல இடங்களில் தமிழர்கள் வாழ்ந்தாலும் பெரும்பாலான இடங்களில் மதிப்பிழந்தே வாழ்கின்றனர். ஒரு புறம்  தமிழின் சிறப்பு உலகில் பரவிக் கொண்டிருந்தாலும் மறுபுறம் தமிழ் வழங்கும் பகுதிகள் தேய்ந்து கொண்டே உள்ளன. இவற்றில் கருத்து செலுத்தித் தமிழையும் தமிழர்களையும் வாழ வைக்க வேண்டிய தமிழ் அமைப்பினர் ஏட்டிக்குப் போட்டியாக நடந்துகொண்டு தமிழுக்கு இழிவு தேடித் தரலாமா? எனவே, ஒன்றுபடுங்கள்! உயர்வு காணுங்கள்!

ஆதலின் புதிய பொறுப்பாளர்கள் விரைந்து செயற்பட வேண்டும். மலேசிய மாநாட்டினரும் தவற்றினை உணர்ந்து புதிய அமைப்பின் பெயரில் முதல் உலகத்தமிழ் மாநாட்டை நடத்த வேண்டும். அத்தகைய மாநாட்டிற்கு நம் பாராட்டும் வாழ்த்தும் உரித்தாகுக!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல – இதழுரை

திங்கள், 10 ஜூலை, 2023

தமிழுக்கு நிதி ஒதுக்குக! உரிய காலத்தில் அளித்திடுக!

 

தமிழுக்கு நிதி ஒதுக்குக! உரிய காலத்தில் அளித்திடுக!



11ஆவது உலகத்தமிழ் மாநாட்டு நிறைவு விழா

தமிழுக்கு நிதி ஒதுக்குக! உரிய காலத்தில் அளித்திடுக!

அரசுகளுக்கு வேண்டுகோள்.

ஆனி 22, 23 & 24, 2054 ****சூலை 07,08& 09.2023 ஆகிய நாள்களில் சென்னையில் செம்மண்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில்  11 ஆவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றது. உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும் ஆசியவியல் நிறுவனமும் இணைந்து நடத்திய இம்மாநாட்டின் நிறைவுவிழா நேற்று(09.07.2023 அன்று)  நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஆசியவியல் நிறுவன இயக்குநர் முனைவர் சான்சாமுவேல் தலைமை வகித்தார். வேல்சு அறிவியல் தொழில் நுட்ப ஆராய்ச்சிக்கல்வி நிறுவன இணைவேந்தர் முனைவர் சோதி முருகன் சிறப்புரை ஆற்றினார். உலகத்தமிழர் பொருளாதார நிறுவனத்தின் தலைவரும்  சடடக்கதிர் ஆசிரியருமான வி.ஆர.எசு.சம்பத்து, உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் நேற்றைய தலைவர் முனைவர் பொன்னவைக்கோ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

உ.த.ஆ.நிறுவனத்தின் இந்நாள் தலைவர் பொறி.அரசர் அருளாளர் நன்றி நவின்றார்.

தொடக்கத்தில் இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை வழங்கினார்.

கருத்தரங்க அமர்வுரைகளின் தொகுப்பை முனைவர் முகிலை இராசபாண்டியன் தமிழில் வழங்கினார்; அடுத்து அதனை ஆங்கிலத்தில் முனைவர் வெ.முருகன் வழங்கினார்.

இலக்குவனார் திருவள்ளுவன் பின் வரும் இரண்டு தீர்மானங்களை முன்மொழிந்தார்.

1. இந்திய ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும்  உலகளாவிய அளவில் தமிழ் அமைப்புகளை உருவாக்கி நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

2. தமிழ் நிறுவனங்களுக்கு உரிய ஒதுக்கீடுகளை உரிய காலத்தில் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்.

பேராளர்களும் தமிழன்பர்களும் அடங்கிய அவையினர் கைகளைத் தட்டி ஒலி எழுப்பி ஆதரவு தந்தனர். உடன் முனைவர் பொன்னவைக்கோ இவற்றை வழி மொழிந்தார். இரு தீர்மானங்களும் மாநாட்டு அவையினரால் நிறைவேற்றப்பட்டன.

வரேவற்புரையின் பொழுது மாநாட்டை எங்கு நடத்துவது என்பது குறித்த இடச்சிக்கல் வந்த பொழுது தன் வேண்டுகோளை ஏற்று ஆசியவியல் நிறுவன வளாகத்தை அளித்ததுடன் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து 11ஆவது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டைச் சிறப்பாக நடத்திய முனைவர் சான் சாமுவேல் அவர்களைப் பாராட்டினார்.

சிறப்புரையின் பொழுது இணைவேந்தர் முனைவர் சோதிமுருகன் இனி நடத்த உள்ள கருத்தரங்கங்கள், மாநாடுகளில் தங்கள் வேல்சு நிறுவனமும் இணைந்து பங்கேற்கும் என்று தெரிவித்தார்.

முனைவர் சம்பத்து இம்மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்ததற்கு அமைதியாக் கூடி அமர்ந்துள்ள அவையோரே சான்று எனப் பாராட்டினார்.

முனைவர் கிருட்டிணகுமார், முனைவர் தாமோதரன் ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.

மாநாட்டின்பொழுது பறைஇசை, பிற நாட்டுப்புறக்கலைகள், சிலம்பாட்டம் ஆகியற்றுடன்  சிலப்பதிகாரம் குறிக்கும் 11வகை ஆடல்கள் குறித்த நாட்டிய நாடகமும் ‘உலகளாவிய தமிழ்’ என்னும் நாடடிய நாடகமும் சிறப்பான முறையில் நடத்தப்பட்டன.

மாநாட்டின் குறிப்பிடத்தகுந்த உலக அருவினையான(சாதனையான) சிறப்பு பேராளர்களின் 64 நூல்கள் வெளியிடப்பட்டமையாகும். நூலாசிரியர்கள் மட்டுமல்லாமல் பிறரும் இந்நிகழ்வை வெகுவாகப்பாராட்டினர்.

சிறப்பு அழைப்பாளர்கள் சிறப்பிக்கப்பட்டதும். நிறைவாக. மாநாட்டின் பொழுது தொண்டாற்றிய சாரணர் இயக்கத்தினருக்கு முனைவர் சான்சாமுவேல் பாராட்டிதழ் வழங்கினார்.

சனி, 20 மே, 2023

(சிங்கப்பூர்)11ஆவது உலகத்தமிழ் மாநாடு – ஆன்றோர் உரைகளும் அறிவிப்புகளும் - காணுரை

 




(சிங்கப்பூர்)11ஆவது உலகத்தமிழ் மாநாடு – ஆன்றோர்

அறிவிப்புகளும் உரைகளும்

பிரிவு 2

இலக்குவனார் திருவள்ளுவன் 01- 10.12

முனைவர் உலகநாயகி 10.13 -14.47

முதுமுனைவர் முருகன் 14.48 – 19.25

முனைவர் சேயோன் 19.26- 23.48

முனைவர் அருத்தநாரீசுவரன் 23.49 – 24.53

பிரிவு 1


முனைவர் மருதநாயகம் 01.-7.39

முனைவர் பொன்னவைக்கோ 7.40 – 12.25

முனைவர் சுந்தரமூர்த்தி 12.26 – 15.19

முனைவர் பிரான்சிசு முத்து 15.20 – 21.56

முனைவர் சான் சாமுவேல் 21.57- 41.02

நேருரை தொடுப்பு :செல்வி செளமியா குணசேகரன்
படக்கலைஞர் : விசய்
காட்சிப்பதிவு : நம்பி

https://youtu.be/6rhjKew7IzQ
https://youtu.be/ruN1BEPRglE