மணிமேகலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மணிமேகலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 16 அக்டோபர், 2013

பெண் தொழில்முனைவோர் வழிகாட்டி மணிமேகலை

பெண் தொழில்முனைவோர் வழிகாட்டி

Comment   ·   print   ·   T+  
பல்கலைக்கழகத்தில் பேராசிரியை பணி கிடைத்தால், ஒரு பெண் என்ன செய்வார்? பெரும்பாலானோர் தான் உண்டு, தன் வேலையுண்டு என இருக்கவே விரும்புவார்கள். ஆனால், மணிமேகலை அப்படி தன்னைச் சுருக்கிக் கொள்ள விரும்பவில்லை.
பணிச்சுமைகளுக்கு மத்தியிலும் பொருளாதாரத்தில் பின்தங்கியப் பெண்களையும் கிராமப்புற பெண்களையும் சுயதொழில் முனைவோராக்கி வருகிறார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் மைய இயக்குனரான மணிமேகலை, பெண்கள் மேம்பாடு பற்றி அவர்கள் மத்தியில் நம்பிக்கை விதையை விதைத்து வருகிறார்.
அடிப்படையில் பொருளாதார பேராசிரியான மணிமேகலை, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மகளிரியல் மையம் தொடங்கிய போது அதன் இயக்குனராக நியமிக்கப்பட்டார். தற்போது மகளிரியல் மையம், தனி துறையாக தரம் உயர்த்தப்பட்டு அதன் தலைவராக மணிமேகலை இருந்து வருகிறார்.
பெண் மேம்பாடு, பெண் உரிமை, பெண் சட்டப் பாதுகாப்புக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இவர், தமிழ்நாடு பெண் தொழில் முனைவோர் சங்கத்தை உருவாக்கி பல பெண்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளியை ஏற்றியிருக்கிறார். சொந்தக் காலில் நிற்க வேண்டும் என நினைக்கும் பெண்களுக்கு சுயதொழிலுக்கான பயிற்சிகள் அளித்து, வங்கியில் கடன் உதவி ஏற்பாடு செய்து ஏராளமான பெண்களை தொழிமுனைவோராக மாற்றிக் காட்டியது இவரது திறமைக்கு ஒரு சான்று.
நவீன தையல் பயிற்சி, ஆயத்த ஆடை பயிற்சி, வாழை நாரில் இருந்து புடவை தயாரிக்கும் பயிற்சி, நாப்கின் பயிற்சி என தமிழ்நாடு பெண் தொழில்முனைவோர் சங்கம் மூலம் இதுவரை சுமார் 3 ஆயிரம் பெண்கள் பயிற்சி பெற்று, சுயதொழில் செய்து வருகின்றனர்.
கல்வியறிவே ஒரு பெண்ணை சமூகத்தில் உயர்த்தும் என்ற கருத்தில் உறுதியாக இருக்கிறார் மணிமேகலை. அதனால் படிக்க வசதியில்லாத நகர்ப்புற மற்றும் கிராமப்புற பெண்கள் கல்வி பெறும் வகையில் நிதி திரட்டி உதவுவதில் மணிமேகலை தனி கவனம் செலுத்தி வருகிறார்.
பணி புரியும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் பற்றி பல ஆய்வுகளை மேற்கொண்டிருக்கும் மணிமேகலை, இது குறித்த ஆய்வு படிப்புகளுக்கு நெறியாளராக இருந்து ஏராளமான மாணவிகளுக்கு வழிகாட்டியாகவும் இருக்கிறார்.
கடந்த 18 ஆண்டுகளாக பாலினம் மற்றும் அது சார்ந்த பிரச்சினைகள் பற்றியும் மணிமேகலை பேசாத இடங்களில்லை. பெண்கள் மேம்பாட்டுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
கடந்த ஆண்டு மகளிரியல் துறைத் தலைவர் பொறுப்பில் இருந்து மணிமேகலையை பொருளாதார துறைக்கு மாற்றி பல்கலைக்கழகம் நடவடிக்கை மேற்கொண்டது. இந்த உத்தரவை மாற்றக்கோரி மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்தப் பிரச்சினையில் ஆளுநர் தலையிட்ட பிறகு மணிமேகலைக்கு மீண்டும் அதே பொறுப்பு கிடைத்தது. மணிமேகலைக்காக மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தி பாசக்கரம் நீட்டக் காரணம் சமூகம் மற்றும் பெண்கள் நலனுக்காக அவர் பாடுபட்டதுதான். பிறருக்காக நாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் சமூக முன்னேற்றத்துக்கான அடிக்கல்தானே. அதைத்தான் செய்துவருகிறார் மணிமேகலை.

சனி, 31 ஆகஸ்ட், 2013

இது 'கலை’ஞரின் 'கலை’நயம்

இது 'கலை’ஞரின் 'கலை’நயம்

+

மணி மேக் ’கலை’ அவரிடம் ஏராளம்  என்பதை அறிந்த காரணத்தாலே....
அந்தக் கலையில் சிறந்த அவரிடம் அள்ளக் அள்ளக் குறையாத அந்த அட்சய பாத்திரம் உண்டென்ற காரணத்தாலே...
வெட்டிப் பிரித்தும் உதறித் தள்ளியும்கூட... 
விட்டுப் பிரிந்த நட்பை போக்’கலை’
இலங்கை என்ற இலக்கை கோக்’கலை’
சமரசம் என்ற சடங்கை விடுக்’கலை’
பார்லிமெண்ட் சீட் என்ற பட்டியலை பார்க்’கலை’
சந்தடிசாக்கில் கர்நாடக அரசியலாரை கைக்குள் சேர்க்’கலை’
இன்னும் அதற்காக
நிற்’கலை’
விற்’கலை’
சிக்’கலை’
அவிழ்க்’கலை’!
இக்’கலை’
அக்’கலை’
தொடுக்’கலை’
துவங்’கலை’
எக்’கலை’
வைக்’கலை’
திக்’கலை’ திணறலை என்பதாலே...
’கலை’ப் பெயர் சூட்டினார் ’அந்நா’ளில் என்பதை ’கலை’மணிகள் உணர்ந்து பாருங்கள்!

கருத்துகள்(2)

ஆஹா...!!!
இந்தக் கை அணை க் கலை

புதன், 28 ஆகஸ்ட், 2013

பசியைப் போக்கும் மணிமேகலை- சோனியா : கருணாநிதி



நுணலும் தன் வாயால் கெடும் என்னும் பழமொழிக்கு மாறாகக் கலைஞரும் தன் வாயால்  கெடுவார் என்று புதுமொழி வந்துவிட்டது. அவரின் இன அழிப்பு உடந்தைகளை மறக்க எண்ணினாலும் மறக்கக்கூடாது என்பதற்காகவே இம்மாதிரி எழுதி்யும் பேசியும் வருகிறார்.

அருந்தவப் படுத்தல் அல்லது யாவதும்
திருந்தாச் செய்கைத் தீத்தொழிற் படாஅள்
 
என்னும் சிறப்பிற்குரிய மாதவ மணிமேகலையைப் போன்று          எத்தனையோ மணிமேகலையும்  சேர்த்த உருவமாகப் பன்னூறாயிரம் படுகொலைக்குக் காரணமானவரைப் பாராட்டுகிறார் என்றால் இவர் எத்தகைய இரங்கத்தக்க நிலையில் உள்ளார் எனப் புரிந்து கொள்ளலாம். எனவே, இவரைத் தாங்கி நிற்போர் இனியேனும்  இவரைப் புறந் தள்ள வேண்டும். வரலாற்றைத் திரிப்பது தன் குடும்பத்தாரைக் காப்பாற்றத்தான் என்பது இக்காலத்தாரால் பதியப் பெறும். வருங்காலத்தில் வரலாறு  இனக்கொலையாளிகளையும் உடந்தையாளர்களையும் பழித்தும் இழித்தும் கூறும். எனவே, இனியேனும் இத்தகைய புன்மொழிகளைப்பொன்மொழிகளாகக்கருதி உரைக்க  வேண்டா.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

பசியை ப் போக்கும் மணிமேகலையாக ச் சோனியா திகழ்கிறார்: கருணாநிதி


சென்னை : "பசியை ப் போக்கும் வகையில், உணவு ப் பாதுகாப்பு ச் சட்டத்தை நிறைவேற்றியதால், மணிமேகலையாக, காங்கிரஸ் தலைவர் சோனியா திகழ்கிறார்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.

முத்தமிழ்ப் பேரவை அறக்கட்டளை சார்பில், திருவாடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளையின், 115வது பிறந்த தின விழா சென்னையில் நேற்று நடந்தது. வழுவூர் ரவி வரவேற்றார். நாதஸ்வர கலைஞர் ஆச்சாள்புரம் சின்னத்தம்பி பிள்ளை, நாதஸ்வர கலைஞர் கீவளுர் கணேசன், தவில் கலைஞர் இலுப்பூர் நல்லகுமார் ஆகியோருக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி பரிசு வழங்கி பேசியதாவது:உணவு பாதுகாப்பு மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. நாடு சுதந்திரம் பெற்று, 60 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் சுதந்திரம் பெற்றது போன்ற உணர்வும், மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது. உணவு உரிமை கிடைத்துள்ளது. சோனியா, தன் மனதில் தோன்றிய பெரிய காரியத்தை செய்து முடித்துள்ளார்.நாடு முழுவதும், பலர், ஒருவேளை உணவு இல்லாமல் உள்ளனர். அவர்களின் பசியை போக்க வேண்டுமானால், எத்தனையோ மணிமேகலை தேவைப்படுவர். அத்தனை மணிமேகலைகளையும் சேர்த்து ஒரு மணிமேகலையாக சோனியா, இத்திட்டத்தை நிறைவேற்றியுள்ளார்.

கன்னியாகுமரியில், திருவள்ளுவர் சிலையை திறந்த போது, என் கை, கால்கள் நடுங்கி, பேச முடியாத நிலைக்கு திக்குமுக்கு அடைந்தேன். அதேபோன்ற உணர்வு தான் சோனியாவுக்கும் ஏற்பட்டிருக்கும்.அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, என் நெஞ்சு பதைபதைத்தது. அவர் உடல் நலம் தேறி வரவேண்டும் என நினைத்தேன். உடல் நலம் பெற்று விட்டார். அவருக்கு எனது பாராட்டுக்கள்.இவ்வாறு, கருணாநிதி பேசினார்.
சோனியாவுக்கு கருணாநிதி பாராட்டு:

""உணவு பாதுகாப்பு மசோதாவை, கொண்டு வர காரணமாக இருந்த, காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு, என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.

சென்னை அறிவாலயத்தில், நிருபர்களுக்கு கருணாநிதி அளித்த பேட்டி:நாடு சுதந்திரம் பெற்று, 66 ஆண்டுகளுக்கு பின், உணவு உரிமைக்கான சட்டம் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஏழை, எளியோர் மகிழ்ச்சி பெருக்கோடு, இதை வரவேற்பர் என, நம்புகிறேன்.தி.மு.க., சார்பிலும், மற்ற கட்சிகளின் சார்பிலும், கொடுத்த முக்கியமான திருத்தங்களை ஏற்றுக் கொண்டிருப்பது திருப்தி அளிக்கிறது.இந்தச் சட்டத்திலே இன்னும் செய்ய வேண்டிய, ஒரு சில திருத்தங்கள் இருக்கின்றன. காலப்போக்கில் அவ்வப்போது ஏற்படுகின்ற அனுபவங்களின் அடிப்படையில், தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என, எதிர்பார்க்கிறேன்.இதுபோன்ற பிரச்னைகளில், வறட்டு பிடிவாதம் எதுவும் காட்டாமல், நல்லதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அனைவருக்கும் இருக்க வேண்டும். முக்கிய எதிர்க்கட்சிகள், தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து விட்டு, அதே நேரத்தில் மசோதாவை வரவேற்றது என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சியாகச் செயல்படலாம்; ஆனால், எதிரிக் கட்சியாக இருப்பது நல்லது அல்ல.

இது தான் பார்லிமென்டில் நடந்த விவாதத்திலிருந்து, என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.சுமூகமான முறையில், இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியிருப்பதற்காகவும், தி.மு.க., தந்த திருத்தங்களை ஏற்றுக் கொண்டிருப்பதற்காகவும், இந்தியாவில் உள்ள ஏழை, எளிய, சாதாரண, சாமான்ய, அடித்தட்டு மக்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தினரின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும், அதற்கு ஓட்டு அளித்தவர்களுக்கும், இந்த மசோதாவை கொண்டு வருவதற்கு காரணமாக இருந்த சோனியாவுக்கும், பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு, கருணாநிதி கூறினார்.