நரிக்குறவ மாணவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நரிக்குறவ மாணவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

தஞ்சை மருத்துவக் கல்லூரியில் நரிக்குறவ மாணவன் இராசபாண்டிக்கு மூத்த மாணவர்கள் உற்சாக வரவேற்பு

தஞ்சை மருத்துவ க் கல்லூரியில் நரிக்குறவ மாணவன்  இராசபாண்டிக்கு மூத்த  மாணவர்கள் உற்சாக வரவேற்பு
தஞ்சை மருத்துவ கல்லூரியில் நரிக்குறவ மாணவன் ராஜபாண்டிக்கு  சீனியர் மாணவர்கள் உற்சாக வரவேற்பு
தஞ்சாவூர்,ஆக.2-

கிருஷ்ணகிரி மாவட் டம் ஊத்தங்கரை கிரா மத்தை சேர்ந்தவர் ராஜபாண்டி(வயது18), நரிக்குறவ இனத்தை சேர்ந்தவரான இவர், கடந்த பிளஸ்-2 தேர்வில் 1167 மார்க் பெற்றார். மாணவர் ராஜபாண்டியின் பெற்றோர் ஏழ்மையில் நிலையில் அவரை கஷ்டப்பட்டு படிக்க வைத்தனர். பிளஸ் -2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ராஜபாண்டி , டாக்டராகி ஏழை-எளிய மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று குறிக்கோளாக கொண்டிருந்தார்.

மருத்துவக்கல்லூரிக்கான கட்-ஆப் மார்க் 197.75 அவர் பெற்றிருந்தார். இதைத்தொடர்ந்து கடந்த மாதம் சென்னையில் நடந்த மருத்துவ கல்லூரி கவுன்சிலிங்கில், மாணவர் ராஜபாண்டிக்கு தஞ்சை மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது.

நரிக்குறவ இனத்தை சேர்ந்த அவருக்கு அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தார். இருப்பினும் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த தன்னால் கல்லூரி கட்டணம் கட்ட முடியாத நிலையில் தவித்து வந்தார். டாக்டர் கனவு நனவாகுமா? என்று கவலை அடைந்தார்.

இந்நிலையில் நரிக்குறவ மாணவர் ராஜபாண்டியின் வசதியற்ற நிலையை பற்றி கேள்விப்பட்ட நடிகர் ஜீவா, மாணவர் ராஜபாண்டிக்கு ரூ.30 ஆயிரம் வழங்கி உதவினார். இதேபோல் தூத்துக்குடியை சேர்ந்த டாக்டர் ரூ.20 ஆயிரமும், கோவையை சேர்ந்த சமூக சேவகர் , டாக்டர் முத்துலட்சுமி ஆகியோரும் மாணவர் ராஜபாண்டிக்கு பண உதவி அளித்தனர்.

இந்நிலையில் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை கலையரங்கில் முதலாமாண்டு எம்.பி.பி.எஸ். வகுப்பு தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் மாணவர் ராஜ பாண்டியும் முதல் நாள் வகுப்பில் கலந்து கொண்டார். அவருக்கு சீனியர் மாணவ-மாணவிகள் கை குலுங்கி வாழ்த்து தெரிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மருத்துவ கல்லூரி டீன் உமாதேவி , மாணவர் ராஜ பாண்டிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இதைத்தொடர்ந்து முதலாமாண்டு வகுப்பு தொடக்க விழா நடந்தது. மாணவர் மன்ற ஆலோசகர் டாக்டர் சிங்காரவேலு வரவேற்றார்.

விழாவில் மருத்துவக் கல்லூரி டீன் உமாதேவி தலைமை தாங்கி பேசியதாவது-

நீங்கள் அனைவரும் கடினமாக உழைத்து பின்னாளில் சமூகத்துக்கு மருத்துவராகி சேவையாற்றும் வாய்ப்பை பெற்றுள்ளீர்கள்.கல்லூரியில் ராக்கிங்கை கண் காணிக்கவும், தடுக்கவும் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆடை, பழக்கவழக்கங்கள் ஆகிய வற்றில் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும். செல்போன்களை வகுப்பு நேரங்களில் மாணர்கள் பயன்படுத்த கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

திங்கள், 2 ஜனவரி, 2012

solkiraargal: Believed me! ' என்னை நம்புகின்றனர்


"என்னை நம்புகின்றனர்!' 



நரிக்குறவ மாணவர்களின் படிப்பிற்காக உதவும், ஆசிரியர் உதயக்குமார்: மற்றவர்களைப் போல், என்னால் சம்பளத்திற்கு வேலை செய்துவிட்டு போவதில் திருப்தி இல்லை. எளியவர்களுக்கு நம்மால் ஆன, உதவிகளைச் செய்ய வேண்டும் என நினைத்தேன். நான் திருவாடனை அருகே, பண்ணை வயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், தலைமை ஆசிரியராக இருந்த போது தான், முதன் முறையாக, நரிக்குறவ சமூகத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையை, பள்ளியில் சேர்த்தேன். அதற்கு நான் சந்தித்த இடர்பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால், இப்போது, சர்வசிக்ஷா அபியான் திட்டப்படி, 50 நரிக்குறவர் பிள்ளைகள் படிக்கின்றனர். காலாண்டு, அரையாண்டு, கோடை விடுமுறையில், பெற்றோருடன் சேர்ந்து குழந்தைகளும், தேர்த் திருவிழாவிற்கு ஊசி, பாசி விற்கப் போகின்றனர். ஆனால், மீண்டும் பள்ளிக்கு வருவதில்லை. அவர்களையெல்லாம், வேன் மூலம் பள்ளிக்கு கொண்டு வருகிறேன். மறு நாளிலிருந்து சீராக பள்ளிக்கு வருகின்றனர். நரிக்குறவ மாணவர்கள் அனைவரும் நல்ல புத்திசாலிகள். நரிக்குறவர்கள் சாலையோரங்களில் வசிக்கின்றனர். சுகாதாரமான குடிநீர் வசதி உட்பட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. ஆனால், இவர்கள் அனைவருக்கும் ஓட்டுரிமை உள்ளது. அரசு, இவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும். என் ஆசை, கனவு அனைத்துமே இவர்களில் ஒருவரையாவது, பிளஸ் 2 வரை படிக்க வைக்க வேண்டும் என்பது தான். என்னை இந்தக் குழந்தைகள் நம்புகின்றனர். அவர்களுக்கு ஒரு வழி காட்டிவிட்டால் போதும், முன்னேறி விடுவர்.