உலகத் தமிழர் பேரவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலகத் தமிழர் பேரவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 21 பிப்ரவரி, 2019

சென்னையில் சீனப் பெண் நிறைமதி பங்கெடுக்கும் நிகழ்ச்சி

அகரமுதல

உலகத் தமிழர் பேரவை

சந்திக்கும் தமிழர் உலகம்
 இடம் : தேவநேய பாவாணர் அரங்கம் (எல்.எல்.ஏ கட்டடம்), அண்ணா சாலை, சென்னை-600 002.
மாசி 08, 2050  வெள்ளிக்கிழமை  22.02.2019 
 மாலை 04.30 மணி
சிறப்புரை :
தமிழும் – சீன மக்களும்
உங்கள் செல்வி நிறைமதி (கிகி சாங்கு)
(கொஞ்சும் தமிழில் பேசும் சீனப் பெண்)
நிகழ்ச்சி நடுவர்:
திரு. அக்கினி
(உலகத் தமிழர் பேரவை – தலைமை ஒருங்கிணைப்பாளர்)
செல்வி நிறைமதி (கிகி சாங்கு) காணொளி பார்க்க:https://www.youtube.com/watch?v=UH1sHrECtLs&t
உலகத் தமிழர் பேரவை, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை- 600 018, தமிழ்நாடு தொலைபேசி : +91-98416 88937 / +91-89460 97054 +91- 7904576115http://www.worldtamilforum.com

வியாழன், 17 ஜனவரி, 2019

உலகத் தமிழர் பேரவையின் பொங்கல் விழா

உலகத் தமிழர் பேரவையின் பொங்கல் விழா
உலகத் தமிழர் பேரவையின் சென்னை தலைமையக அலுவலக வாயிலில் பறை இசை ஒலிக்க பொங்கல் விழா மார்கழி 28, 2049 / 12-01-2019  அன்று தமிழ் தேசிய மக்கள் முன்னிலையில் அற்புதமாக நடைபெற்றது.
தமிழரின் பொங்கல் பொங்கும் போது ‘பொங்கலோ பொங்கல்’ என அனைவரும் முழக்கமிட்டனர்.
உலகத் தமிழர் பேரவையின் சென்னை அலுவலகம் சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள  அண்ணா சாலையில் நெருக்கடியான போக்குவரத்துக்கு மத்தியில் பொங்கல் விழா அனைவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது. பறை இசைக் குழுவினரின் பறை ஒலிக்க அதற்கு சிலர் ஆட்டமும் பாட்டமுமாக கொண்டாட்டமாக காணப்பட்டது.

வியாழன், 23 ஜூலை, 2009

பிரசுரித்த திகதி : 23 Jul 2009

உலகெங்கிலும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்ததின் விளைவாக "உலகத் தமிழர் பேரவை" உதயமாகின்றது. தமிழர் மீது நடாத்தப்பட்ட பாரிய இனப்படுகொலைக்கு நீதி கேட்கும்முகமாகவும் , ஜேர்மனிய நாசி வதைமுகாங்களிற்கு ஒப்பான வதை முகாங்களில் வாடும் எமது உறவுகளை மீட்கவும் உலகில் வாழும் அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்து ஒரே குரலில் ஒலிக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

சர்வதேசமயமான சுயாதீனமான, ஜனநாயகப்பண்புகளோடு அகிம்சாவழியில் இப்பேரவையின் கருத்துருவாக்கம் அமைந்துள்ளது. உலகெங்கிலும் வாழும் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களை ஒன்றினைப்பதன் மூலம் இப்பேரவையானது வலுப்பெறவுள்ளது.

இலங்கைதீவினில் தமிழர்களது பாரம்பரிய பூமியாகிய தமிழீழத்தில் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஜனநாயக ஆட்சியை மீட்டேடுப்பதற்கு, உலகத் தமிழர் பேரவயானது ஈழத்தில் வாழும் தமிழர்களோடும், இலங்கையில் வாழும் மற்றைய சமூகத்தினரோடும் இணைந்து செயற்படும்.
உலகத் தமிழர் பேரவையின் உடனடி இலக்குகளாக வதைமுகாங்களில் வாடும் எமது உறவுகள் தாயக பூமியில் இயல்பு நிலை வாழ்க்கைக்கு திருப்புவதற்கு பாடுபடுவதும், இனப்படுகொலையின் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கு உழைப்பதுவுமாகும்.
ஐந்து கண்டத்திலும் வாழும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்கள் இப்பேரவயில் அங்கம் வகித்து எமது இலட்சியத்தை நோக்கி முன் நகர்த்துவர்.

www.globaltamilforum.org


+44 (0) 7958 590 196
surensurendiran@globaltamilforum.org