அழைப்பாணை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அழைப்பாணை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 4 செப்டம்பர், 2013

சோனியா காந்திக்கு அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை

சோனியா காந்திக்கு அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை
 
 
சோனியா காந்திக்கு அமெரிக்க கோர்ட் 'சம்மன்'
நியூயார்க், செப். 4-

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 31-10-1984 அன்று அவரது பாதுகாவலர்களான சத்வந்த் சிங் மற்றும் பியந்த் சிங் ஆகியோரால் அவரது வீட்டு தோட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதனையடுத்து, நாடெங்கும் உள்ள சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இச்சம்பவம் நிகழ்ந்து சுமார் 30 ஆண்டு கழித்த நிலையில் அமெரிக்காவில் உள்ள 'சீக்கியர்களுக்கான நீதி' என்ற மனித உரிமை அமைப்பினர் 1984ம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தின் போது சீக்கியர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இழப்பீடு வழங்க வேண்டும் என நியூயார்க் கிழக்கு மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

1984ம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தில் சுமார் 30 ஆயிரம் சீக்கியர்கள் சித்ரவதை செய்யப்பட்டனர். அப்போதைய ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சியின் திட்டமிடப்பட்ட இந்த தாக்குதலை முன்நின்று நடத்தியவர்களில் முக்கியமானவர்களான கமல்நாத், சஜ்ஜன்குமார், ஜகதீஷ் டைட்லர் உள்ளிட்ட பலரை சோனியா காந்தி பாதுகாத்து வருகிறார்.

எனவே, சீக்கியர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல், உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் போன்றவற்றிற்கு சோனியா காந்தியிடம் இழப்பீடு பெற்று தர வேண்டும் என அமெரிக்கா வாழ் வெளிநாட்டினர் சித்ரவதை இழப்பீடு சட்டம் மற்றும் சித்ரவதைக்குள்ளானவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வழக்கை நேற்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிபதி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சோனியா காந்திக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

இந்த சம்மன் வெளியிடப்பட்ட 120 நாட்களுக்குள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

தற்போது சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருக்கும் சோனியா காந்தி இந்த சம்மனை வாங்கிக் கொள்வாரா? அல்லது வக்கீல் மூலமாக பதில் அளிப்பாரா? என்பது விரைவில் தெரிந்து விடும்.

O
P
E
N
close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

சீனா: 5 வயதில் தனியாக விமானம் ஓட்டி பரபரப்பை ஏற்படுத்திய சிறுவன்

சீன தலைநகர் பீஜிங்கில் உள்ள உயிரியல் பூங்காவின் மீது தொடர்ந்து 35 நிமிடங்கள் தனியாக விமானம் ....»

புதன், 10 ஜூலை, 2013

இலங்கைத் தூதருக்கு அழ‌ைப்பாணை : செயலலிதா வலியுறுத்தல்

இலங்கை த் தூதருக்கு  அழ‌ைப்பாணை அனுப்ப செயலலிதா வலியுறுத்தல்

தமிழக மீனவர்கள் அவ்வப்போது கைது செய்யப்படுவது குறித்து இலங்கை தூதருக்கு சம்மன் அனுப்ப தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழக மீனவர்கள், கடலில் மீன்பிடிக்கும் போது இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்படுவது அடிக்கடி நிகழும் நிகழ்வாகிவிட்டது.
சமீபத்தில் 49 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்பட்டு, கடந்த 5ம் தேதி 25 மீனவர்களும், 6ம் தேதி 24 மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர். இதற்கிடையே கைது செய்யப்பட்ட 8 மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை ராமநாதபுரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இதனால், தமிழக மீனவர்கள் வாழ்வாதாரமான மீன்பிடி தொழிலே முடங்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்க இயலாத நிலை உள்ளது. ஆயுதமின்றி, நிராதரவாக இருக்கும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தாக்குவதும், மீன் பிடி வலைகளை அறுப்பதும், கைது செய்வதும் என தொடர்ந்து அட்டூழியம் செய்து வருகின்றனர்.
இது குறித்து ஏற்கனவே பல கடிதங்கள் வாயிலாக உங்களது கவனத்துக்குக் கொண்டு வந்தும், இலங்கை கடற்படையினர் விஷயத்தில், மத்திய அரசு ஒரு  துறவியைப் போல மௌனம் காத்து வருகிறது.
எனவே, இந்த விஷயம் குறித்து மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, புது தில்லியில் உள்ள இலங்கை தூதருக்கு சம்மன் அனுப்பி, இந்தியா தரப்பில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து, கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தற்போது இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் எவ்வித வாய்தாவும் இன்றி உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்த வேண்டும் என்று கடிதத்தில் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.