azhai_kaakkaichiraginile_sirukathaipoatti

 ‘காக்கைச் சிறகினிலே’

மாத இதழ் முன்னெடுக்கும்

‘புலம்பெயர் சிறுகதைப் போட்டி 2016’ – வள்ளுவராண்டு 2047


வணக்கம்!

நான் முகிலன் என்ற முகுந்தன். மறைந்த கவிஞர் கி.பி. அரவிந்தன் அவர்களுடைய நாற்பதாண்டு நெருங்கிய தோழன். தற்போது காக்கைச் சிறகினிலே மாத இதழ் ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றுகிறேன்
காக்கைச் சிறகினிலே இதழ் தொடக்க நெறியாளராகப் பணியாற்றி மறைந்த இலக்கியவாதி ‘கி பி அரவிந்தன்’ கனவின் மீதியில் எழும் புதிய தடமாக அமைகிறது இந்தப் போட்டி.
  பாரதி கண்ட “சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் !” என்ற கனவை நனவாக்கும் முயற்சிகளில் ஒன்று.
  உலகெங்கும் பரவி வாழும் அடுத்தடுத்த தலைமுறையினர் எண்ணங்களைக் கொண்ட எழுத்துகளையும் படைப்புகளையும் ஊக்குவிக்கும் முகமாக இப் போட்டி அமைகிறது.
 நெறியாளர் தமிழ் இலக்கிய ஆர்வலர் இ. பத்மநாப(ஐய)ர். அவரது வழிகாட்டுதலுடன் உலகளாவிய தமிழ் எழுத்தாளர்கள் கொண்ட குழு ஆயும்.
  •  படைப்பு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: kaakkaicirakinile@gmail.com
  • தலைப்பு: ‘புலம்பெயர் சிறுகதைப் போட்டி 2016’ எனக் குறிப்பிடல் வேண்டும்.
  • படைப்புகள் அனுப்பவேண்டிய கடைசி நாள் : 30.11.2015
முதல் பரிசு : 10 000 இந்திய உரூபாய் – சான்றிதழ்
இரண்டாவது பரிசு : 7500 இந்திய  உரூபாய் – சான்றிதழ்
மூன்றாவது பரிசு : 5000 இந்திய  உரூபாய் –  சான்றிதழ்
மூன்று ஆறுதல் பரிசுகள் – ‘காக்கைச் சிறகினிலே’ ஓர் ஆண்டு வெளிநாட்டுக் கட்டணமும் சான்றிதழும்
ki.pi,aravinthan02
 கந்தையா முகுந்தன் >