செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

எல்லா க் கட்டிகளும் புற்றுநோய் அல்ல!

எல்லா க் கட்டிகளும்  புற்றுநோய் அல்ல!

மார்பக ப் புற்றுநோய்ச் சிறப்பு மருத்துவர், செல்வி இராதாகிருட்டிணா: நான், சென்னையை சேர்ந்தவள். பெண்களை பொறுத்தவரை, அவர்களுக்கு கேன்சர் இல்லாத கட்டிகள் தான், 80 சதவீதம் வருகின்றன. எனவே, பெண்களுக்கு வருகிற எல்லா கட்டிகளும், "கேன்சர்' எனும், புற்றுநோய் கட்டிகள் தான் என, பயப்பட தேவையில்லை. எனக்கு வந்திருப்பது கேன்சர் கட்டி தான் என, பதற்றமோ, பயமோ அதிகரித்தால், உடனே மருத்துவ பரிசோதனை செய்யலாம். இதன் மூலம், தேவையற்ற மன உளைச்சல் நீங்கும். "மேமோகிராம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்' மற்றும் திசு பரிசோதனை மூலம், மார்பக புற்றுநோயை தெளிவாக கண்டறியலாம். ஒருவேளை, மார்பக புற்றுநோய் இருப்பதாக, ஆரம்பகட்ட மருத்துவ பரிசோதனையில் கண்டுபிடிக்கப்ட்டால், பயப்பட தேவையில்லை. ஏனெனில், குறைந்த செலவிலேயே நிச்சயம் குணப்படுத்தி விடலாம். அப்படி குணமடைந்த பின், எந்த பிரச்னையும் இன்றி நார்மலான வாழ்க்கை வாழலாம். மார்பக புற்றுநோய் என்பது, தொற்றுநோய் இல்லை. இந்நோய் இருப்பதாக கண்டறியப்பட்டால், அப்பகுதியை உடனே அகற்றியாக வேண்டும் என்ற, தவறான கருத்து பெண்களிடம் உள்ளது. கட்டி, ஆரம்ப கட்டத்தில் சிறிதாக இருக்கும் போது, கட்டியை மட்டும் அறுவை சிகிச்சையால் அகற்றலாம். பின், "ரேடியோதெரபி' எனும் கதிர்வீச்சு சிகிச்சை செய்து, மருத்துவ அறிக்கைக்கு பின், "கீமோதெரபி' செய்யலாம். இது, வேண்டாத செல்களை அழிக்க கூடிய திறன் கொண்ட மருந்துகளை, ரத்த ஓட்டத்தில் கலக்க செய்கிறது. இச்சிகிச்சைக்கு, நோயாளியின் வயது, உடல்நிலை, நோயின் தீவிரம் ஆகியவை கருத்தில் கொள்ளப்படும். ஆனால், நோய் முற்றிய நிலையில், உடலின் மற்ற உடல் உறுப்புகளையும் சிதைக்கும் என்ற நிலையில், அப்பகுதியை அகற்ற வேண்டிய நிலை வரும். எனவே, மார்பக புற்றுநோய் பற்றிய தெளிவான கருத்து மற்றும் விழிப்புணர்வை, மருத்துவர்களிடமிருந்து பெண்கள் பெற்றிருப்பது அவசியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக