சனி, 18 மே, 2013

ஒடிசாவில் பழமையான புத்தர் சிலை-கிணறு கண்டுபிடிப்பு

ஒடிசாவில் பழமையான புத்தர் சிலை-கிணறு கண்டுபிடிப்பு
ஒடிசாவில் பழமையான புத்தர் சிலை-கிணறு கண்டுபிடிப்பு
கேந்திரபாரா, மே 18-

ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள படான்கோ கிராமத்தில் பழமையான புத்தர் சிலை, கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட துணை கலெக்டர் பிரதாப் மிஷ்ரா கூறுகையில், “ஊரக வேலை வாய்ப்புறுதி திட்டத்தின் கீழ் அந்தப் பகுதிகளில் பணிகள் நடைபெற்று வருகிறது. அப்போது 30 சென்ட்டி மீட்டர் உயரமுள்ள புத்தர் சிலை ஒன்றும், படிகளுடன் கூடிய 30 அடி ஆழம் உடைய கிணறும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது” என்றார்.

“இந்த புத்தர் சிலை மிகவும் பழமையானது, இந்த பகுதிகளில் பவுமகர் பேரரசு ஆட்சியில் இருந்த போது பவுத்தம் தழைத்தோங்கியது” என்று வரலாற்று ஆய்வாளர் தெரிவித்தார்.

இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் புத்த பாரம்பரிய தலங்களான லலித்கிரி, ரத்னகிரி, உதயகிரி பகுதிக்கு அருகில் இந்த கிராமம் அமைந்துள்ளது.

O
P
E
N
close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

பாக். சிறையில் தாக்கப்பட்டு உயிரிழந்த சரப்ஜித் சிங் குடும்பத்திடம் ரூ.25 லட்சம் நிதி வழங்கப்பட்டது

பாகிஸ்தான் சிறையில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சரப்ஜித் சிங்கின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் ....»

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக