செவ்வாய், 9 ஏப்ரல், 2013

கோடைக்குத் தீர்வு!

http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_68554420130408212119.jpg

கோடைக்கு த் தீர்வு!

கோடைக் காலத்தில் ஏற்படும் நோய்களுக்கு த் தீர்வு சொல்லும், மருத்துவர் கோமதி அம்பிகா: ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல், ஜூன் வரையிலான நாட்களில், பருவநிலை மாற்றம், அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக, குறிப்பிட்ட நோய்கள் தாக்குகின்றன. "டெங்கு' காய்ச்சல் கட்டுக்குள் இருப்பதால், இந்த கோடைக் காலத்தில், புதிதாய் தொற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு.அம்மை, மஞ்சள் காமாலை, தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, டைபாய்டு, கண்களில் தொற்று, சிறுநீரகத் தொற்று என, வழக்கமான நோய்கள் வரவே வாய்ப்புகள் அதிகம். வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில், வெளியில் சென்றால், "சன் ஸ்ட்ரோக்' வரும். இதை தவிர்க்க, "சன் ஸ்கிரீன்' திரவங்கள் உபயோகித்து, புற ஊதா கதிர்களின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.வெயிலின் பாதிப்பால் தோலில் ஏற்படும், சிறு கொப்பளங்கள், தடிப்புகளுக்கு, நாமே நிவாரணம் செய்யாமல், மருத்துவரிடம் மட்டுமே சிகிச்சை பெறுவது நல்லது.

உடல் வெப்பத்தை அதிகரிக்கும் எண்ணெய், மசாலாப் பொருட்கள் சேர்ந்த உணவுகளை தவிர்த்து, பழங்கள், காய்கறிகளை உண்பது நல்லது.கோடைக் காலத்தில் ஓட்டல்களில் உண்பவர்களுக்கு, காலரா, வயிற்றுப் போக்கு மற்றும் வயிறு தொடர்பான பிரச்னைகள் வரும். தள்ளு வண்டிகளில் நறுக்கி வைத்திருக்கும் பழங்களை உண்பதை தவிர்க்க வேண்டும். முழுப் பழத்தை அப்படியே வாங்கி, கழுவி சாப்பிடலாம். பழச்சாறு, தயிர், மோர், இளநீர் போன்ற பானங்களை, முடிந்த அளவு குடிக்கலாம். பாட்டில்களில் விற்கப்படும் நீராக இருந்தாலும், நன்கு காய்ச்சி ஆற வைத்து குடிப்பதே நல்லது.தினமும் இரு முறை குளிப்பது, வியர்வை இல்லாமல் சுத்தமான உடைகளை அணிவது, அதிக மக்கள் கூட்டமான பொது இடங்களுக்கு சென்று வந்தவுடன் கை, கால்களை கழுவுவது, முகம் மற்றும் கழுத்து பகுதியை குளிர்ந்த நீரால் துடைப்பது ஆகியவற்றால், உடலின் வெப்பம் குறைந்து, சுகாதாரமாக இருக்க உதவும். கோடைக் காலத்திற்கு ஏற்ற வாழ்க்கை முறைகளை பின்பற்றினால் மட்டுமே, கோடைக்கால நோய்களிலிருந்து தப்பிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக