திங்கள், 22 ஏப்ரல், 2013

கோடையில் இலவசப் பயிற்சி!




கோடையில் இலவச ப் பயிற்சி!பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக, இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தும் ஜின்னா: நான், பார்வையற்ற மாற்றுத்திறனாளி. தேர்வு முடித்த மாணவர்கள், கோடை விடுமுறையை சிறப்பாக பயன்படுத்த, சில பயிற்சி வகுப்புகளுக்கு செல்வர். இதுபோல், பார்வையற்ற மாணவர்களுக்கும் பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும் என்ற சிந்தனையில், "இந்தியன் அசோசியேஷன் பார் பிளைண்ட்' என்ற தொண்டு நிறுவனத்தை துவக்கினேன்.இந்நிறுவனம் மூலம், "சாதனா சிறப்பு பயிற்சி பள்ளி'யை உருவாக்கி, பார்வையற்ற மாணவர்களுக்கு பயிற்சியளித்து, வேலைவாய்ப்பை உருவாக்குகிறோம். பார்வையற்ற மாணவர்களை கையாளத் தெரிந்த ஆசிரியரை நியமித்து, இலவசமாகவே பயிற்சி தருகிறோம்.பார்வையற்ற மாணவர்கள், அரசு பணியில் சேர முன் போட்டித் தேர்வுகளை எழுத தேவையில்லை என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போது பார்வையற்ற மாணவர்களும், மற்றவர்களோடு போட்டித் தேர்வு எழுதியே, பணிக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது. போட்டித் தேர்வுக்கு பயிற்சி தரும் தனியார் பயிற்சி பள்ளிகளில், பிரெய்லி புத்தகங்கள், பயிற்சி உபகரணங்கள் என, பார்வையற்றோருக்கு எந்த வசதியும் கிடைக்காததால், பார்வையற்ற மாணவர்களுக்கு என, தனியாக சிறப்பு பயிற்சி வகுப்புகளை ஆரம்பித்தேன்.அரசு துறை மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களிலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பணி வாய்ப்புகள் உள்ளன. அதற்கு ஏற்றார் போல், ஆங்கில அறிவை வளர்க்க, "ஸ்போக்கன் இங்கிலீஷ்' வகுப்புகள், பர்சனாலிட்டி டெவலப்மென்ட், கணினி பயிற்சி என, சாதாரண மனிதர்களோடு பார்வையற்ற மாணவனும் போட்டி போடும் அளவிற்கு, பயிற்சி தருகிறோம்."யுனைட்டட் வே ஆப் சென்னை' என்ற நிறுவன உதவியுடன், 25 கணினிகள் வாங்கி, பார்வையற்ற மாணவர்களுக்கான கணினி மையத்தையும் நடத்துகிறோம். கோடையில் நடத்தப்படும் இவ்வகுப்புகளை, இனி ஆண்டு முழுவதும் நடத்த முயற்சித்து வருகிறோம்.தொடர்புக்கு: 96008 22994.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக