சனி, 31 மார்ச், 2012

தந்தை செல்வாவின் 114 ஆவது பிறந்தநாள் செய்தி

தந்தை செல்வாவின் 114வது பிறந்த நாள் செய்தி



தந்தை செல்வாவின் அரசியல் கோட்பாட்டின்

கீழ் அனைவரும் ஒன்றுபட்டு உரிமைக்குப் போராடுவோம்!;



 தந்தை செல்வாவின் 114வது பிறந்த நாளில் சூளுரைப்போம்!

(ஐ.தி.சம்பந்தன்- இலண்டன்)



பல்லின மக்கள் வாழும் இலங்கையில் சகல மக்களும் ஐக்கியமாகவும் சமாதானமாகவும் வாழக் கூடிய  அரசியல் கோட்பாட்டை  (சமஷ்டி அரசியல் அமைப்பு)  1949ல் அறிமுகம் செய்த அரசியல் மேதை மூதறிஞர் எஸ்.ஜே.வி செல்வநாயம் கியூ.சி ( தந்தை செல்வா) அவர்களின் 114வது பிறந்தநாள் மார்ச் 31 ஆகும்.

ஓற்றை ஆட்சியின்கீழ் இலங்கையில் நிரந்தரமான சமாதானம் ஏற்படாதுää பெரும்பான்மை இனத்தவர் சிறுபான்மை இனத்தை நசுக்கும் நிலை ஏற்படும்ää

பதவி ஆசை கொண்ட சிங்களத் தலைவர்கள் இனவாதப் பாதையில் செல்வதால்ää ஜனநாயகக் கோட்பாட்டை அனுசரித்து அரசியல்  பாரம்பரியத்தைப் பேணுபவர்கள் அல்ல சிங்கள அரசியல்; தலைவர்கள்  என்பதை அன்றே உணர்ந்த தீர்க்கரிசித் தலைவர் தந்தை செல்வா.



ஓக்ஸ்;போட் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்ற   எஸ்.டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா 1921ல்  இலங்கைக்குப ;பொருத்தமான ஆட்சிமுறை  சமஷ்டி அரசியல் ஆட்சிமுறை என்றார். பிற்காலத்தில் அதனை ஒரு தமிழ் அரசியல்வாதி முன்னெடுத்தபோது அது நாட்டைப் பிரிக்கும் சதி என்றார். அவருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்தவர்கள் 30 வருட அகிம்சைப் போராட்டத்தை இராணுவ பலத்தைக் கொண்டு முறியடித்தனர். அதன்பின்  26 வருடங்களாக  நடைபெற்ற தமிழ் இளைஞர்களின் ஆயுதப் ;போராட்டத்தையும் உலக நாடுகளின் ஆயுதபலத்துடன் முறியடித்தனர்.



மீண்டும் தந்தை செல்வாவின்  அரசியல்கோட்பாட்டின் அடிப்படையில் அரசியல் தீர்வு காணவேண்டிய  நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது.



சுயநிர்ணயமுடைய மக்கள்



அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி (சமஷ்டிக் கட்சியை) 1949ல் ஆரம்பித்தபோது வடகிழக்கு மாகாணங்கள் உள்ளடக்கிய தமிழர் தாயகம்ää அங்கு இடம்பெறும் குடியேற்றங்கள் யாவற்றிலும் அப்பகுதி மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். இது அதன் முதலாவது கோட்பாடு.

குடியுரிமை – வாக்குரிமை இழந்த மலைநாட்டுத் தமிழர்கள் அனைவருக்கும்  அவற்றை வழங்குதல்ää தமிழுக்கும் சிங்களத்திற்கும்  சம உரிமை வழங்குதல் என்பன  பிரதான கொள்களாக  இருந்தன. தமிழ் அரசு என்பது  தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த நிலத்தில் கூட்டாட்சியின் கீழ்  தமிழ் மக்களின்  உரிமைகளை நிலைநாட்டுதல்

தந்தை செல்வா திர்;க்கதரிசனத்துடன்  முன்வைத்த அரசியல் கோட்பாட்டின் அடிப்படையில் தமிழர்களுக்கு சுயாட்சியைப் பெற்றுக்கொடுக்க 30 வருடங்களாக  அகிம்சை வழியில் நடத்திய போராட்டத்தால் தந்தை செல்வாவுடன் இரு ஒப்பந்தங்கள் எழுதப்பட்டன. பின்னர் அரசாங்கத்தினால் கிழித்தெறியப்பட்டன.



1972 ல் புதிய அரசியல் சட்டம் கொண்டு வரப்பட்டபோது தந்தை செல்வா பின்வரும் ஆறு அம்சத் திட்டத்தை முன்வைத்து இனவாத அரசை பரிசோதனைக்குட்படுத்தினார்.



1.தமிழுக்கும் சிங்களத்திற்கும் சம அந்;தஸ்து அரசியல் யாப்பில் தரப் படல்வேண்டும்.

2. நாடற்றவர்கள் ää நெடுங்காலம் வாழந்தவர்கள் எனப்படும் அனைவருக்கும் சட்டப்படி குடியுரிமை  தரப்படல் வேண்டும்.

3. மதசாhபாற்றுää சகல மதங்களுக்கும்  சம உரிமை உறுதிப்படுத்தல.;

4. சகல இனமக்களும் அவரவர் பண்பாடுகள் அடிப்படையில் அடிப்படை உரிமைகள்ääசமவாய்ப்புää சுதந்திரம்ää அரசியல் சட்டமூலம் உறுதிப்படுத்தல் வேண்டும்.

5. தீண்டாமை சாதி வேறுபாடுகள் ஒழிப்பு.

6. அதிகாரப் பரவலாhக்கல் மூலம் மத்திய அரசின் அதிகாரங்கள் மக்கள் அதிகாரங்களாக மாற்றுதல்.



மிகக் குறைந்த இந்தக்கோரிக்கைகள் கூட  மறுக்கப்பட்ட பின்னர் தனித் தமிழீழமே மாற்றமுடியாத முடிவு என தந்தை செல்வா பிரகடனப்படுத்தினார்.

;.

அதை அடைவதற்குப் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்தை   இலங்கை அரசு பயங்கரவாதம் என்று பெயர்சு10ட்டி

முள்ளிவாய்க்காலில் 40ää000  தமிழர்களைப் படுகொலை செய்து முறியடித்த வரலாறு தெரிந்ததே.



ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ்மக்களையும் 30ää000 க்கு மேற்பட்ட போராளிகளையும் பலிகொடுத்தபின்னர்  தந்தை செல்வா காட்டிய சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீhவை சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் முன்னெடுக்க வேண்டிய நிலைக்குத் தமிழ்க் கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன.

அறுபது வருடங்களின் பின் தீர்;க்தரிசி தந்தை செல்வாவின் அரசியல் கோட்பாட்டின் அடிப்படையில தமிழ்மக்கள் தங்கள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம் என்பது யதார்த்தம்.



இதை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு தந்தை செல்வாவின் அரசியல் பாசறையில் வளர்ந்த அரசியல் அனுபவமிக்க தலைவர் திரு. இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறவழியில் உரிமைப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய கடப்பாடு உண்டு.

அண்மையில் ஜெனிவாவில்  ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட தீர்மானம் எமக்குத் தென்பூட்டும் நல்ல காரியமாக அமைந்துள்ளது.



இந்தியா உட்பட சர்வதேச நாடுகளின் அதரவுகளும் அதிகரித்து வரும் சு10ழ்நிலையில் தமிழ்க் கட்சிகள் பகைமைகளை மறந்து ஒன்றுபடவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எமது ஒற்றுமை இன்மையாலும்ää இராஜதந்திரமின்மையாலும் பல சந்தர்ப்பங்களை நழுவவிட்டோம்.



நாம் கற்றுக்கொண்ட பாடங்;களை கருத்தில்கொண்டு இதய சுத்தியுடன் ஒன்றுபட்டுச் செயற்படுவோமாக.



எமது எந்த அரசியல் தீர்வுக்கும் பக்கபலமாகக் காத்திரமாக பங்களிப்பவர்கள் புலம்பெயர் தமிழர்களும் அவ்வவ் நாடுகளில்  செயற்படும் தமிழ் அமைப்புகளும் ஆகும். ஆனால் இவர்களிடையே ஒருமுகப்படுத்தப்பட்ட வேலைத் திட்டம் இல்லை. விட்டுக்கொடுத்து செயற்படும் மனோபாவமும் இல்லை. அன்று அல்லல் பட்ட யூதர்கள் எவ்வாறு ஒன்றுபட்டு நாடில்லாதவர்கள் நாடமைக்க முடிந்ததோää எமக்கென்று இருக்கும் தாயகத்தைப் பெற நாம் ஏன் ஒன்றுபடக் கூடாது?



எமது போராட்ட வடிவம் ஜனநாயக வழிக்கு வந்துள்ளதால் எமது பிச்சனைகளை  சமாந்திரமான முறையில் சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக் கூறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  இதைக் கருத்தில் கொண்டு செயற்படுவது புத்திசாலித்தனம்.



வெளிநாடுகளில் மறைந்திருக்கும் புத்திசாலிகள் வெளிவந்து பணியாற்றவேண்டிய காலம் வந்துள்ளது.



மேற் கூறியவை தந்தை செல்வா அவர்களின் 114வது பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியாக தமிழ் மக்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கின்றோம். அவரது இலட்சியத்தை அடையச் சூளுரைப்போம்!



முஸ்லீம் சகோதரர்களுக்கு ஒரு செய்தி



1949ல் தந்தை செல்வா இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை  ஆரம்பித்த போது தமிழ் முஸலீம் ;மக்களையும் இணைத்து தமிழ்பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளுக்குப் போராடுவது எனபதை;தெளிவு படுத்தியிருந்தார்.

மேலும் ‘இலங்கையில் வாழுகின்ற தமிழ்பேசும் மக்கள் வீதலைபெறுவதற்காக உழகை;குட ஒரு ஸதாபனத்தை அமைக்க வேண்டம் என்னும் நோக்கத்துடன் நாங்கள ஒன்று கூடியிருக்கிறோம்” என்று ஆரம்ப உரையில் குறிப்பிட்டிருந்தார்.

அவருடைய தலைமையில் வடகிழக்குää மலையகம்ää தமிழ்-முஸலீம் என்ற வேறுபாடின்றி எல்லோரையும் ஒன்றினைத்து ஒரு சமஷ்;டி அரசியல் அமைப்பின் கீழ் உரிமையைப் பெறு;றுக்கொடுக்க30வருங்களா நடத்திய அகிம்சை வழிப்போராட்டத்தை முஸ்லீம்  சகோதரர்கள் நன்கு அறிவர்.



1961ம் ஆணடு நடைபெற்ற மாபெரும் சத்தியாகக்கி;ரக போராட்டத்திற்கு

தமிழ்-முஸ்லீம் மக்கள் அணிதிரண்டு அளித்த ஆதரவினால் வடகிழக்;;கில் அரசாங்கத்தின் நிருவாகம் 52 நாட்களாக ஸ்தம்பிதம் அடைந்ததை அனைவரும்; அறிவர்.

இலங்கை;த் தமிழ் அரசுக்கட்சியின் சார்பில் கிழக்கு மாகாணத்தில்

ஆறு(6) )முஸ்லீம் பாராளுமன்ற  உறுப்பினர்கள்  தெரிவு செய்யப்பட்டதையும் முஸ்லீம சகோதரர்கள் மறக்க முடியாது. ஆனால் அவர்கள் சுயநலனுக்காக பின் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டபோதும் தந்தை செல்வா முஸ்லீம் மக்களையும் அணைத:;துக்கொண்டே வந்தார்.



தந்தை செல்வா மீதுவிசுவாசம் கொண்டிருந்த அல்ஹாஷ் அஷ்டப் அவர்கள் தந்தை செல்வாவிடம் அரசியல்  கற்றுக் கொணடவர்;.

தென் இலங்கை முஸ்லீம் தலைவர்கள் வடகிழக்கு மஸ்லீம் மக்களைக் குழப்பகிறார்கள் தனித்தன்மையை இழக்கிறார்கள் என்பதை உணர்ந்த திரு. அஷ்ரப் அவர்கள் முஸலீம் காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்தார்.

தந்தை செல்வாவினால் ஆரம்பிக்கப்பட்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னனிஅன்று அதைவரவேற்றது. வடகிழக்கு தமிழ்பேசும் மக்களின் தாயகம்  என்பதி;ல் திரு.அஷ்டவ் அவர்கள் உறுதியாக இருந்தார். அவர் இருக்கும் வரை முஸ்லீம் காங்கிரஸ் தனித்தன்மையை இழக்காமலும்ää தமிழக்கட்சிகளுடன் இணைந்து வடகிழக்கில் ஒரு சுயாட்சியை அமைத்து முஸ்லீம் மக்களுக்கான ஒரு அலகைப் பெறுவதில் முணைப்பாகவிருந்தார்.



தந்தை செல்வாவின் நூறஜறூண்டு விழாவின்போது அகில இலங்கை முஸ்ல{ம் காங்கிரஸ் தலைவர் எம.ஏச்.எம. அஷ்ரவ்  உள்ளத்தில் இருந்த உதிர்ந்தவை

புத்தளத்தளப் பள்ளிக்குள் முஸ்லீம் தலைகளை

பொலீஸ்காரரின் பித்தளைக ;குண்டுகள் பிளந்தபோது

அன்று பாராளு மன்றத்துள் பேசியது நினைவுண்டா!

அப்போது ää பல்லாயிரம் முஸ்லீம் இளைஞர்களின் உள்ளம்

ஒவ்வொன்றிலும் உங்களுக்காக

ஒரு உவகைப் பூ மலர்ந்தது.



தமிழ்ää முஸ்லீம் பேரினவாங்கள்

என்னும் புதிய பிசாசுகளும் இப்போது

பித்துப் பிடித்துää அலைவதால்

அத்தகைய பேய்களுக்கும்

மடை வைத்து வெட்டித்ää துண்டாடி

விளையாடி மண்ணில்

புதைக்க வந்துள்ள சித்தம்

தெளிந்தவர்கள்தான்

உங்களுக்காக விழாவை  எடுக்கிறார்கள்

 கண்டுபிடியுங்கள்

தந்தைசெல்வாவை உள்ளார நேசித்தவரின்

வளமான கருத்துக்கள் தந்தை செல்வாவின்114வது

பிறந்தநாள் சமர்ப்பனம்

 பரந்த அரசியல் ஞானத்துடன் திரு.அஷ்ரவ்

உருவாகிய முஸ்லீம் காங்கிரஸ் எங்கே செல்கிறது

என்று கேட்கிறது தந்தையின் ஆத்மா



தலைவர் திரு. அஷ்;ரவ் அவர்கள்; மறைந்த பின் முஸ்லீம் காங்கிரஸ் தலைமை தென் இலங்கைக்கு மாறிய பின்னும் சிலகாலம் மறைந்த திரு. அஷ்டவ் அவர்களின் வழியில்செனற்து.. தற்போது மகிந்தா அரசிடம் மண்டியிட்டு மந்திரிப்பதவி பெறும் அளவிற்கு காங்கிரஸின் தனித்தன்மை மழுங்கிவிட்டதா?.

அல்லாது விடில் வடகிழக்கில் இராணு ஆட்சியை அகற்றி சிவில் நிருவகத்தைக ;கொண்டுவந்து வடகிழக்கு தமிழ்பேசம்மக்களுக்கு; நல்ல அரசியல் தீர்வைக் கொண்டுவருவதற்காக ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் கொண்டுவந்த  தீர்;மானத்தை எதிப்பதற்கு உலகமெல்லாம் படைஎடுத்தார்களே முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும்  ஏணைய முஸ்லீம் அமைச்சர்களும்.

மறைந்த தலைவர் அஷ்டவ் அவர்கள் இருந்தால் இந்தச் செயலை மன்னித்திருக்க மாட்டாh. அவருடைய மனைவியாரினாலும் தட்டிக்கேட்க முடியாத நிலை.

ஏது எப்படியென்றாலும் மறைந்த தந்தை செல்வாவின் அரசியில ;கோட்பாட்டில் உருவாக்கப்பட்ட த.தே.கூட்டமைப்பு தொடர்ந்தும்  முஸ்லீம சகோதரர்களையும அணைத்துக்கொண்டே அரசியல் தீர்வை நோக்கிப் பயணிப்பர். தந்தை செல்வா உருவாக்கிய  தமிழ்-முஸ்லீம் ஒற்றுமை

வளரவேண்டும் என்ற செய்தியை தந்தை செல்வா பிறந்தநாளில் நினைவு கூருவோமாக.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக