வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

Public praised the police - is it fare?

காவல்துறையைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும்.  வீட்டு உரிமையாளர்  கூறியதாக முதலிலும் பக்கத்துவீட்டுப் பெண் கூறியதாகப் பின்னரும் தெரிவித்துள்ளனர். விவரம்அறிந்து செல்பவர்கள் வீட்டிற்கு  வெளியே மறைவாக இருந்து கொள்ளையர்கள் எனக் குற்றம் சாட்டப்படுபவர்கள் வெளியே வரும் பொழுது கைது செய்து முழு உண்மைகளையும் அறிந்திருக்கலாம். அல்லது மாறு வேடங்களில் வீட்டிற்குச் சென்று தகவல்கள் கேட்பதுபோல்  சந்தித்துஉயிருடன் பிடித்திருக்கலாம். இவர்கள் கொள்ளையடித்த நேரடிச் சான்று இல்லை.  இவர்களில் ஒருவர் படத்தை வெளியிட்டு ஐயம்தான் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அவர் வடநாட்டு மாணவர்களைப் பொறியியல் கல்லூரிகளில் சேர்த்து த் தரகுத் தொகை பெற்றுப் பிழைப்பு நடத்தி உள்ளார். எவ்வாறு இருப்பினும் உயிருடன் பிடிக்கப் பல வாய்ப்பு இருப்பினும்  ஐவரையும் கொன்றதால் வழக்கை விரைந்து முடித்து நற்பெயர் பெற நாடகம் ஆடி இருப்பார்களோ என்ற ஐயப்பாடு பலருக்கு ஏற்படுகிறது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

காவல்துறைக்கு மக்கள் பாராட்டு

First Published : 24 Feb 2012 01:52:49 AM IST


சென்னை, பிப்.23: வங்கிக் கொள்ளையர்களை போலீஸார் சுட்டுக் கொன்றது குறித்து காவல்துறையினருக்கு வேளச்சேரி பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.  சென்னை பெருங்குடி மற்றும் கீழ்க்கட்டளை வங்கிகளில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்தவர்களை போலீஸார் வேளச்சேரியில் வியாழக்கிழமை அதிகாலை சுட்டுக் கொன்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக